பாரா மாவட்டம் (Bara District) (நேபாளி: बारा जिल्लाListenⓘ) தென் கிழக்கு நேபாள நாட்டின் தெராய் சமவெளியில், மாநில எண் 2-இல் உள்ள எட்டு மாவட்டங்களில் ஒன்றாக பாரா மாவட்டம் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் கலையா நகரம் ஆகும். நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டத்தின் தெற்குப் பகுதி இந்தியாவின்பிகார் மாநிலத்தை எல்லையாகக் கொண்டது.
பாரா மாவட்டத்தின் பரப்பளவு 1,190 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுபின் படி பாரா மாவட்டத்தின் மக்கள் தொகை 6,87,708 ஆகும்.[1]
பகையா, ஜமுனியா, பாசஹா, துத்தௌரா மற்றும் பங்காரி இம்மாவட்டத்தில் முக்கிய ஆறுகள் ஆகும். இம்மாவட்டத்தில் போஜ்புரி மொழி (72%), மைதிலி மொழி (9.7%), நேபாள மொழி (18.3%) மற்றும் பஜ்ஜிகா மொழிகள் பேசப்படுகிறது.