1959 - பல அரசியல் கட்சிகள் கொண்ட அமைச்சரவை அமைக்க, அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது.
27 மே 1959 – 15 டிசம்பர் 1960 - மன்னர் மகேந்திரா, அரசியலமைப்பு சட்டத்தை ரத்து செய்தும், நாடாளுமன்றத்தை கலைத்தும், விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலாவின் தலைமையிலான நேபாள அமைச்சரவையையும் கலைத்தும், அரசியல் கட்சிகள் செயல்பாட்டையும் முடக்கியும், நேபாளத்தில் மன்னரின் நேரடி ஆட்சியை நிறுவப்பட்டது.
1962 - நேபாள மன்னருக்கே நாட்டின் முழு அதிகாரம் என்ற முறையில் இயற்றப்பட்ட புதிய அரசியலமைப்பு சட்டப்படி, நேபாளத்தில் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. 1963ல் முதல் தேசிய பஞ்சாயத்துக் குழு தேர்தல் நடைபெற்றது.
1972 - மன்னர் மகேந்திரா இறத்தல். மன்னர் பிரேந்திரா நேபாள மன்னராக முடிசூடப்படல்.
1980 - ஆட்சி சீர்திருத்தங்களுக்கான இயக்கத்தின் முடிவில் புதிய அரசியலமைப்பு வாக்கெடுப்பு நடைபெற்றது. சிறு அளவிலான பெரும்பான்மையுடன், அரசியல் கட்சிகள் அற்ற, பஞ்சாயத்து ஆட்சி முறையில் நேபாள தேசிய சபைக்கான தேர்தலுக்கு மன்னர் அனுமதித்தார்.
1989 - இந்தியாவுடனான வர்த்தக மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால், இந்திய அரசு, நேபாளத்திற்கு செல்லும் பாதைகளை மூடியது. இதனால் நேபாளத்தின் பொருளாதார நிலைமை மோசமடைந்தது.
1990 - நேபாளி காங்கிரஸ் மற்றும் பொதுவுடமைக் கட்சிகள் இணைந்து, அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள பஞ்சாயத்து ஆட்சியை ஒழிக்க வலியுறுத்தியும், பல கட்சி நாடாளுமன்றா ஜனநாயக அரசியலை வலியுறுத்துவதற்காக ஜனநாயகப் போராட்டங்கள் துவங்கியது. இப்போராட்டங்களை நேபால மன்னர் அரசுப் படைகள் மூலம் நசுக்கியதால் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பலியானர்கள். மேலும் பலரை கொத்து கொத்தாக சிறையில் அடைக்கப்பட்டனர். இறுதியில் மன்னர் பிரேந்திரா, மன்னரின் இறுதி முடிவுக்குட்பட்ட அரசியலமைப்பு சட்டத்தை இயற்ற ஒப்புக்கொண்டார். கிருஷ்ண பிரசாத் பட்டாராய் நேபாள பிரதம அமைச்சரானார்.
1997 - நேபாளப் பிரதமர் செர் பகதூர் தேவ்பா, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் தோல்வி கண்டார். அடிக்கடி பிரதம அமைச்சர்களை மாற்றப்பட்டதால், நேபாளம் அரசியல் நிலைத் தன்மையை இழந்தது. கௌதம புத்தர் பிறந்த இடமான லும்பினியை பண்பாட்டு உலகப் பாரம்பரியக் களங்களமாக அறிவிக்கப்பட்டது.
2000 - பத்து ஆண்டுகளில் மீண்டும் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா தலைமையில் 9வது அமைச்சரவை அமைந்தது.
2001 - நவம்பர் - மாவோயிஸ்டுகள் நான்கு மாதங்களாக, அரசுடன் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் காவல் துறை மற்றும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் தொடுத்தனர்.
அவசர நிலை சட்டம் பிரகடனம் (2001 - 2003)
2001 - நவம்பர் - மாவோயிஸ்டு கிளர்ச்சியாளர்களின் நான்கு நாள் போராட்டாத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதால், மன்னர் ஞானேந்திரா நாட்டில் அவரச நிலைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினார். மாவோயிஸ்டுகளை இராணுவம் துணை கொண்டு அடக்கினார்.
2002 மே - நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. புதிய தேர்தல் நடத்தப்பட்டது. செர் பகதூர் தேவ்பா தலைமையில் இடைக்கால அமைச்சரவை பதவியேற்றது. மீண்டும் நெருக்கடி நிலை காலம் நீட்டப்பட்டது.
2003 சனவரி - அரசும் - மாவோயிஸ்டுகளும் போர் நிறுத்த உடன்படிக்கையை அறிவித்தனர்.
அமைதி குலைதல் (2003 - 2004)
2003 ஆகஸ்டு - மாவோயிஸ்டுகள் ஏழு மாதங்களாக அரசுடன் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. மீண்டும் மாவோயிஸ்டுகள்/மாணவர்கள் - காவல் துறையினரிடையே அடிக்கடி கைகலப்புகள் முற்றியது.
2004 மே - நேபாளத்தில் ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்த எதிர்கட்சிகள் தெருக்களில் இறங்கி போராடினர். மன்னரால் நியமிக்கப்பட்ட பிரதமர் சூரிய பகதூர் தாபா பதவி விலகினார்.
மீண்டும் முழு முடியாட்சி முறை (2005 - 2006)
2005 பிப்ரவரி - மாவோயிஸ்டு தீவிரவாதிகளை முற்றிலும் களையெடுக்க, மன்னர் ஞானேந்திரா, நாடாளுமன்றத்தை முடக்கி வைத்து, மீண்டும் நெருக்கடி நிலை சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
2005 ஏப்ரல் - சர்வதேச அழுத்தத்தின் காரணமாக மன்னர் ஞானேந்திரா நெருக்கடி நிலை சட்டத்தை விலக்கி, முடக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீட்டெடுத்தார்.
2005 நவம்பர் - மாவோயிஸ்டுகளும், இடதுசாரி கட்சிகளும் நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்ட ஒன்று சேர்ந்தனர்.
2006 ஏப்ரல் - மன்னரின் நேரடி ஆட்சிமுறைக்குக்கு எதிராக நடந்த கலவரங்களின் விளைவாக, முடக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் நிலைநாட்டப்பட்டது. மாவோயிஸ்டுகள் மூன்று மாத போர் நிறுத்தம் மேற்கொண்டனர்.
2006 மே - நாடாளுமன்றம் மன்னரின் அரசியல் அதிகாரங்களை குறைத்து தீர்மானம் இயற்றியது. மேலும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் அரசு பேச்சு வார்த்தைகள் நடத்தியது.
அமைதிப் பேச்சு வார்த்தைகள் (2006 - 2007)
2006 நவம்பர் - அரசு - மாவோயிஸ்டு தீவிரவாதத் தலைவரகளுடன் விரிவான அமைதி உடன்படிக்கை மேற்கொண்டது. இதன் மூலம் இருபதாண்டுகளாக மாவோயிஸ்டுகள் நடத்திய போராட்டங்கள் நிறைவடைந்தது.
2007 சனவரி - தற்காலிக அரசியலமைப்புச் சட்டப்படி அமைந்த நாடாளுமன்றத்திற்கு, மாவோயிஸ்ட்டு தலைவர் பிரசந்தா எனும் புஷ்ப கமல் தகால் உறுப்பினர் ஆனார்.
அரசில் மாவோயிஸ்டுகள் பங்கெடுத்தல் (2007)
2007, ஏப்ரல் - மாவோயிஸ்டுகளை அரசியலில் ஈடுபடுத்த வேண்டி நடைபெற்ற முயற்சியில், இடைக்கால அரசில் மாவோயிஸ்டுகள் பங்கேற்றனர்.
2007, செப்டம்பர் - மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் முடிவில், மூன்று குண்டுகளை காத்மாண்டு சமவெளியில் வெடிக்கச் செய்தனர். அதில் முதல் குண்டு தலைநகரம் காட்மாண்டுவில் வெடித்தது. இடைக்கால மன்னராட்சியை ஒழிக்க வலியுறுத்தி அரசிலிருந்து மாவோயிஸ்டுகள் வெளியேறினர். அரசியலமைப்பு நிர்ணய மன்றம், நவம்பர், 2007ல் நடத்தவிருந்த நாடாளுமன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
முடியாட்சியின் முடிவு (2007 - 2008)
2007, டிசம்பர் - நேபாளத்தில் மன்னராட்சி முறையை ஒழிக்கப்பட்டது. நேபாளத்தை ஜனநாயகக் கூட்டாச்சிக் குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.[5][6]
2008 சனவரி - பிரதேச தன்னாட்சியை வலியுறுத்தி தெற்கு தராய் பகுதிகளில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளால் பலர் கொல்லப்பட்டனர்.
2008 ஏப்ரல் - புதிய அரசியலமைப்பு நிர்ணய மன்றத் தேர்தலில் முன்னாள் மாவோயிஸ்டுகள் பெரும்பாலன இடங்களைக் கைப்பற்றிய போதிலும், அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
2008 மே - முடியாட்சி முறை முழுவதுவமாக ஒழிக்கப்பட்டு, நேபாளக் குடியரசு நாடாக மாறியது.[7]
2008 சூன் - பிரதம அமைச்சர் பதவிக்கு நடைபெற்ற போட்டியால், மாவோயிஸ்டுகள் அமைச்சரவையிலிருந்து விலகினர்.
2008 சூலை - ராம் பரன் யாதவ் நேபாளத்தின் முதல் குடியரசுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.
2008 ஆகஸ்டு நேபாளி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அரசு அமைத்த மாவோயிஸ்டு தலைவர் புஷ்ப கமல் தகால் எனும் பிரசந்தா, பின்னர் அமைச்சரவையிலிருந்து வெளியேறி, எதிர்கட்சி வரிசையில் அமர்ந்தார்.
மாவோயிஸ்டுகள் அரசிலிருந்து வெளியேறல் (2009)
2009 மே - முன்னாள் மாவோயிஸ்டு போராளிகளை, நேபாள இராணுவத்தில் சேர்க்கக் கோரினார் பிரதமர் பிரசந்தா. இதனை ஏற்க மறுத்தார் குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ். இதனால் ஏற்பட்ட பிணக்கால், பிரசந்தா பிரதம அமைச்சர் பதவிலிருந்து விலகினார்.
2009 டிசம்பர் - தூர-மேற்கு வளர்ச்சிப் பிராந்தியத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய நில ஆக்கிரமிப்பின் போது ஏற்பட்ட மோதல்களில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். இதனால் நேபாளத்தில் அமைதிக்கான செயல்பாடுகளில் சுணக்கம் உண்டாகும் பயமேற்பட்டது.
அரசியலமைப்பின் மீதான தாக்கங்கள் (2010 - 2015)
2010 மே - நான்கு முறை நீட்டிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றும், அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் காலம், மீண்டும் ஒரு நீட்டிக்கப்பட்டது.
2011 சனவரி - ஐக்கிய நாடுகள் அவை நேபாளத்தில் அமைதி காக்கும் பணியை முடித்துக் கொண்டது.
2014 பிப்ரவரி - நேபாளி காங்கிரஸ் கட்சியின் சுசில் கொய்ராலா பிரதம அமைச்சரானார்.
2014 ஏப்ரல் - 14 எவரெஸ்ட் மலையேற்றத்தின் போது, வெளிநாட்டவர்களுக்கு வழிகாட்டிகளாக செயல்பட்ட 16 செர்ப்பாக்கள் பனிப்புயலால் இறந்தனர்.
2014 நவம்பர் - அருண் ஆற்றின் குறுக்கே இந்தியாவும் - நேபாளமும் இணைந்து, 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான நீர் மின் திட்டத்திற்கு ஒப்பந்தம் இட்டனர்.
2015 ஏப்ரல் - 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கதால்காத்மாண்டு சமவெளியின் நகரங்கள் பலத்த சேதமடைந்தது. 8,000 பேர் மாண்டனர். இலட்சக் கணக்கானவர்கள் வீடுகளை இழந்தனர்.
குறிப்பிடத்தக்க அரசியலமைப்புச் சட்டம் (2015 - 2018)
2015 செப்டம்பர் - புதிய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன் படி, நேபாளம் சமயசார்பற்ற நாடாகவும், ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசாகவும் அறிவிக்கப்பட்டது.[7]
2015, அக்டோபர், 29 - புதிய அரசியலமைப்பு சட்டத்தின் படி, நேபாள ஜனநாயக் கூட்டாட்சிக் குடியரசுத் தலைவராக வித்யா தேவி பண்டாரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2016 பிப்ரவரி - புதிய அரசியலமைப்புச் சட்டத்தால் தாங்கள் பாதிப்படைவர் எனும் அச்சத்தில் சிறுபான்மையின மதேசி மக்கள் இந்திய-நேபாள எல்லைகளை ஆறு மாதங்களாக மூடி போராட்டங்கள் செய்தனர்.
2016 சூலை - கே. பி. ஒளி தலைமையிலான கூட்டணி கட்சிகளின் அமைச்சரவையிலிருந்து, மாவோயிஸ்டு கட்சியினர் வெளியேறினர். பிரதமர் கே. பி. ஒளி மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்ததால், கே. பி. ஒளி பதவி விலகினார்.
2016 ஆகஸ்டு - மாவோயிஸ்டு தலைவர் பிரசந்தா இரண்டாம் முறையாக பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2017 ஏப்ரல் - நேபாள உள்நாட்டுப் போரில், மூன்று இராணுவ வீரர்கள், 15 வயது பெண்னை, மூன்று இராணுவ வீரர்கள் கற்பழித்து கொலை செய்ததால் மரணதண்டனை வழங்கப்பட்டது. முதன் முதலாக சீனா - நேபாள கூட்டுப் போர் ஒத்திகை நடைபெற்றது.
நேபாளத்தை ஆளும் நேபாள பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களான பிரசந்தா மற்றும் கட்க பிரசாத் சர்மா ஒளி குழுவினர்களுக்கிடையே பல மாதங்களாக தொடர்ந்த சர்ச்சைகள் காரணமான, நேபாளப் பிரதமர் கட்க பிரசாத் ஒளியின் பரிந்துரையின் படி, நேபாளக் குடியரசுத் தலைவர் வித்யா தேவி பண்டாரி 20 டிசம்பர் 2020 அன்று வெளியிட்ட அறிவிப்பின்படி, நேபாள நாடாளுமன்றம், அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 76, உட்பிரிவு 1,7 மற்றும் 85-வது பிரிவின் கீழ் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 2021-ம் ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், மே 10-ம்தேதி 2-ம் கட்டத் தேர்தலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.[10] நேபாள உச்ச நீதிமன்றம் இந்த தேர்தல் அறிவிப்பை தள்ளுபடி செய்தது. பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி நேபாளி காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு அமைக்கப்பட்டது.