மகர் மக்கள்
![]() மகர் மக்கள் (Magar) நேபாளத்தின் மூன்றாவது பெரிய இனக்குழுவினர் ஆவர். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள மக்கள்தொகையில் மகர் மக்கள் 7% ஆகவுள்ளனர். மேற்கு நேபாளத்தில் பாயும் கண்டகி ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் அமைந்த லும்பினி மாநிலத்தில் உள்ள குல்மி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம் மற்றும் பால்பா மாவட்டங்களே மகர் மக்களின் தாயகம் ஆகும்.[1] மகர் மக்கள் மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம் மற்றும் ஆவியுலகக் கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இம்மக்களின் பெரும்பாலோர் மகர் மொழியும், கைகே மொழியும் பேசுகின்றனர். ![]() ![]() நேபாளத்தில் மகர் மக்கள்தொகை பரம்பல்2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் வாழும் மகர் மக்கள்தொகை 1,887,733 (7.1%) ஆகும். மகர் மக்கள் லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் உள்ள கீழ்கண்ட மாவட்டங்களில் வாழ்கின்றனர்:[2]
தொழில் & அரசியல்மகர் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் இராணுவச் சேவை ஆகும்.நேபாளம், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவத்தில் மகர் இன கூர்க்கா மக்கள் போர் வீரர்களாகப் பணிபுரிகின்றனர்.[3][4] கோத் படுகொலைகள் வரை நேபாள இராச்சியத்தின் முக்கிய அரசவைப் பிரபுக்களாக மகர் இனத் தலைவர்கள் இருந்தனர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சியிலும், பின்னரும் நேபாள இராச்சிய அரசவையில் ஆறு அமைச்சர்களில் ஒருவராக மகர் இனத் தலைவர் இருந்தார்.[5]நேபாள இராணா வம்ச ஆட்சியின் போது மகர் இன மக்கள் அரசவையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்.
அடிக்குறிப்புகள்மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia