பூதேஷ்வர் இந்துக் கோயில்கள்
பாதேஷ்வர் இந்துக் கோயில்கள் (Bateshwar Hindu temples or Batesara, Bateśvar) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மொரேனா மாவட்டத்தில் அமைந்த 200 இந்துக் கோயில்களின் தொகுதியாகும். இக்கோயில்கள் கிபி 8 முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு காலத்தில் கட்டப்பட்டது.[1][2] சிவன், விஷ்ணு, பார்வதி மற்றும் பிற கடவுளர்களுக்கு மணற்கற்களால் நிறுவப்பட்ட இக்கோயில்க்ள் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நகரா கட்டிக் கலைநயத்தில் அமைந்த இக்கோயில்கள் குவாலியர் நகரத்திற்கு வடக்கே 35 கிலோ மீட்டர் தொலைவிலும், மொரேனா நகரத்திற்கு கிழக்கே 30 கிலோ மீட்ட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. தில்லி சுல்தானகம் ஆட்சியின் போது, இக்கோயில்களில் பெரும்பாலனவைகள் சேதப்படுத்தப்பட்டது.[1] 2005-இல் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பாதேஷ்வர் கோயில்களை சீரமைத்து[3], பாதுகாத்து வருகின்றனர். ![]() படக்காட்சிகள்
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia