மரியுபோல் நகரம்மரியுபோல் (ஆங்கிலம்: Mariupol) என்பது உக்ரைனின் தென் கிழக்கில் பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். மரியுபோல் நகரம் தோனெத்சுக் மாநிலத்தின் தெற்கிலும், அசோவ் கடற்கரையிலும், கல்மியசு ஆற்றின் முகப்பிலும் அமைந்துள்ளது. இது உக்ரைனில் பத்தாவது பெரிய நகரமாகும்,[1] மற்றும் தோனெத்ஸ்க்க்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் ஆகும்.[2] இந்நகரம் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 449,498 மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. . இந்த நகரம் பெரும்பாலும் மற்றும் பாரம்பரியமாக உருசிய மொழி பேசுபவர்களைக் கொண்டுள்ளது.அதே நேரத்தில் இனரீதியாக மக்கள் உக்ரேனியர்களாகவும்,உருசியர்களாகவும் சமமாக பிரிக்கப்பட்டுள்ளனர். நகரத்தில் ஒரு குறிப்பிடத்தக்க அளவில் கிரேக்கர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். கரியமியசு[3] என்ற முன்னாள் கோசாக் முகாமின் தளத்தில் மரியுபோல் நிறுவப்பட்டது மற்றும் 1778 இல் நகரமாக்கப்பட்டது. தானிய வர்த்தகம், உலோகம் மற்றும் கனரக பொறியியல் ஆகியவற்றிற்கான மையமாக இது இருந்து வருகிறது. உக்ரைனின் தொழில்மயமாக்கலில் மரியுபோல் முக்கிய பங்கு வகித்துள்ளது. கம்யூனிஸ்ட் தலைவர்களுக்குப் பிறகு சோவியத் அதிகாரிகள் அடிக்கடி நகரங்களுக்கு மறுபெயரிடுவதால்,[4] 1948 மற்றும் 1989 க்கு இடையில், சோவியத் செயல்பாட்டாளர் ஆண்ட்ரி சுதானோவுக்குப் பிறகு, இந்த நகரம் சுதானோவ் என்று அழைக்கப்பட்டது. இன்று, மரியுபோல் தொழில் மற்றும் உயர் கல்வி மற்றும் வணிகத்திற்கான மையமாக உள்ளது. தொடர்ந்து உக்ரைனில் உருசியன் தலையீடு மற்றும் தோனெத்சுக் தொடர்புடைய உருசியன் சார்பு கிளர்ச்சியாளர்கள் மூலம் நகரம் தோனெத்சுக் மக்கள் குடியரசின் நிர்வாக மையமாக மாறியது . இந்த நகரம் 2014 ஜூன் 13,அன்று உக்ரேனிய துருப்புக்களால் பாதுகாக்கப்பட்டது, பின்னர் பல முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. புவியியல் மற்றும் சூழலியல்மரியுபோல் தோனெத்சுக் மாநிலத்தின் தெற்கிலும், அசோவ் கடல் கடற்கரையிலும், கல்மியசு ஆற்றின் முகப்பிலும் அமைந்துள்ளது. இது உக்ரேனிய கருங்கடல் தாழ்நிலத்தின் விரிவாக்கமான அசோவ் தாழ்நிலப் பகுதியில் அமைந்துள்ளது. மரியுபோலின் கிழக்கே கொமுதோவ் புல்வெளி அமைந்துள்ளது, இது உருசிய கூட்டமைப்பின் எல்லையில் அமைந்துள்ள அசோவ் தாழ்நிலத்தின் ஒரு பகுதியாகும். காலநிலைமரியுபோல் ஈரப்பதமான கண்டங்களின் காலநிலையையும், ( கோப்பன் காலநிலை வகைப்பாடு ) வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. சராசரி ஆண்டு மழை 511 மில்லிமீட்டர்கள் (20 அங்). நீண்ட கால வேளாண் தாவரங்களை (சூரியகாந்தி, முலாம்பழம், திராட்சை போன்றவை) கொண்டுள்ளது. இப்பகுதியில் போதுமான நீர்வளம் இல்லை, இதன் விளைவாக மக்கள் பயன்பாட்டிற்கும், தொழில்துறையின் தேவைகளுக்கும் குளங்களும் நீர்ப்பாசனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. குளிர்காலத்தில், காற்றின் திசை முக்கியமாக கிழக்கு திசையிலிருந்தும், கோடையில் வடக்கிலிருந்தும் வருகிறது. சூழலியல்தொழில்துறை நிறுவனங்களால் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் கழிவுகளின் அளவில் மரியுபோல் உக்ரைனை போலவே உள்ளது. சமீபத்தில், நகரத்தின் முன்னணி நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் தொடங்கியுள்ளன. ஆக, கடந்த 15 ஆண்டுகளில் தொழில்துறை கழிவு கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. நகர நிர்வாகம் மற்றும் உள்ளூர் அரசியல்மரியுபோல் வாக்காளர்கள் பாரம்பரியமாக இடதுசாரி (சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட்) மற்றும் உருசிய சார்பு அரசியல் கட்சிகளை ஆதரிக்கின்றனர். . மக்கள் தொகைடிசம்பர் 1, 2014 நிலவரப்படி, நகரத்தின் மக்கள் தொகை 477,992 பேர் ஆகும். கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகை கிட்டத்தட்ட பன்னிரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நகரத்தில் உக்ரேனியர்கள், உருசியர்கள், பொன்திக் கிரேக்கர்கள் , பெலாரசியர்கள், ஆர்மீனியர்கள், யூதர்கள் ஆகியோர் வசிக்கின்றனர் . முக்கிய மொழி உருசிய மொழி ஆகும் பொருளாதாரம்மக்களில் சுமார் 59% பேர் தொழில்துறையிலும், 11% பேர் போக்குவரத்திலும் பணி புரிகின்றனர். 2009 ஜூலை 1 நிலவரப்படி, அதிகாரப்பூர்வத் தகவலின்படி நகரத்தில் வேலையின்மை விகிதம் 2% ஆக இருந்தது.[5] எவ்வாறாயினும், உள்ளூர் வேலை வாய்ப்பு மையத்தில் "வேலையில்லாமல்" பதிவு செய்யப்பட்டவர்களை மட்டுமே இந்த எண்ணிக்கை கொண்டுள்ளது. எனவே உண்மையான வேலையின்மை விகிதம் அதிகமாக உள்ளது. 2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பு2022 உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பின் ஒரு பகுதியாக உருசியா நாட்டுப் படைகள், 4 மார்ச் 2022 அன்று, தொடர்ந்து மரியுபோல் நகரத்தைக் கைப்பற்ற குண்டு வீச்சுகளால் தாக்கி வருகிறது.[6]மக்கள் இந்நகரை விட்டு வெளியேறுவதற்கு வசதியாக உருசிய இராணுவம் 5 மார்ச் 2022 அன்று ஒரு மட்டும் போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளது. [7] இதனையும் காண்ககுறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia