தட்டெக்காடு பறவைகள் சரணாலயம்
தட்டெக்காடு பறவைகள் சரணாலயம் (Thattekad Bird Sanctuary), என்பது கேரளத்தின், எர்ணாகுளம் மாவட்டதில் அமைந்துள்ள ஒரு பறவைகள் சரணாலம் ஆகும். இந்த சரணாலயமானது 25 கி.மீ.. 2 பரப்பளவை உள்ளடக்கியதாக உள்ளது. இந்த சரணாலயமானது கோதமங்கலத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதுவே கேரளத்தின் முதல் பறவைகள் சரணாலயம் ஆகும். நன்கு அறியப்பட்ட பறவையியலாளர்களில் ஒருவரான சலீம் அலி, இந்த சரணாலயத்தை தீபகற்ப இந்தியாவின் பறவை வளம் கொண்ட பகுதி என்று வர்ணித்தார் . [1] தட்டெக்காடு என்றால் தட்டையான காடு என்று பொருளாகும். இப்பகுதி கேரளத்தின் மிக நீளமான ஆறான பெரியாறு ஆற்றின் கிளைகளுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு பசுமையான தாழ்நிலக் காடு ஆகும். இனங்கள்தட்டெக்காடு பறவைகள் சரணாலயத்தில் நிறைய மற்றும் மாறுபட்ட பறவைகள் உள்ளன. இங்கு காட்டுப் பறவைகளும், நீர் பறவைகளும் என பல வகையான பறவைகள் வருகின்றன; அவற்றில் குறிப்பிடத்தக்கவை பின்வருவனவற்றையும் உள்ளடக்கியுள்ளது: குளிர்காலத்தில் சரணாலயத்திற்கு வருகை தரும் இந்திய தோட்டக்கள்ளன், கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் இங்கு செலவிடுகிறது.
இந்த சரணாலயம் பல்வேறு வகையான குயில்களின் வாழ்விடமாகும், மேலும் "குக்கு பாரடைஸ்" என்று பிரபலமாக அழைக்கப்படும் சரணாலயத்தின் ஒரு பகுதி இவற்றிற்கானது, அவற்றில்:
தட்டெக்காடு பறவைகள் சரணாலயத்திலிருந்து இடமலயாறு காடு சுமார் 15 கி.மீ.. தொலைவில் அமைந்துள்ளது. இது இடமலையாறு ஆற்றுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசுமையான காடு ஆகும். இந்த காட்டில் மலை பருந்து கழுகுகள் காணப்படுகின்றன. இந்த காட்டில் உள்ள மற்ற பறவைகளில் இருண்ட-முனை சிலம்பன், பழுப்பு-கன்னமான ஃபுல்வெட்டா, பழுப்பு முள்வால் உழவாரன் மற்றும் வெள்ளை-கரடுமுரடான ஊசி, மற்றும் மரகதப் புறாக்கள் போன்றவை ஆகும். படக்காட்சியகம்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia