அரசினர் ஆண்கள் கலைக் கல்லூரி, கிருட்டிணகிரி, என்பது தமிழ்நாட்டின்கிருட்டிணகிரியில் அமைந்துள்ள ஒரு கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1964 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இக்கல்லூரி பெரியார் பல்கலைக்கழ இணைவுக் கல்லூரியாகும். [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்கப்படுகிறது. தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) B++ தரத்துடன் செயற்பட்டு வருகிறது. பேராசிரியர் பி. இரவிக்குமார் இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார். 50,000-க்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட நூலகம் ஒன்றும் உள்ளது.[2]
கல்லூரி வரலாறு
கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி 1964-ம் ஆண்டில் தொடங்கப்பெற்றது. தமிழ்நாட்டில் கல்வியில் பின்தங்கிய இப்பகுதியில், உயர்கல்வி பயில ஒரு கல்லூரி தொடங்க வேண்டுமென்ற ஆர்வமும், அதற்காக பொதுமக்கள் வழங்கிய நன்கொடையும், தமிழக அரசு இக்கலைக் கல்லூரியை தொடங்க காரணமாக இருந்தன. 15.10.1964-ல் மாண்புமிகு முதலமைச்சர் எம்.பக்தவத்சலம் அவர்களால் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
1982-83 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி ஆய்வு நிறுவனமாக சென்னைப் பல்கலைக் கழகத்தினரால் அறிந்தேற்பு செய்யப்பட்டது.