அரசினர் சட்டக் கல்லூரி, கோயம்புத்தூர்இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் உள்ள 7 அரசினர் சட்டக்கல்லூரிகளில் ஒன்றாகும். இவற்றை சட்டக்கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் சட்டக்கல்வியினை தமிழ்வழி கற்பிக்க வகை செய்யவும் 1953ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட தமிழக அரசின் சட்டக்கல்வித்துறை மேல்நடத்திச் செல்கிறது. கோயம்புத்தூர் கல்லூரி 1979-80 கல்வியாண்டில் துவங்கப்பட்டது. இங்கு பட்ட, பட்டமேற்படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆடவர்களுக்கு தங்கும் விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரி தமிழ்நாடு முனைவர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையில் இயங்குகிறது.[1]
தொடக்கத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இயங்கிய இக்கல்லூரி போதிய இடவசதியின்மையால், கோவை நகரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருதமலை அடிவாரத்திற்கு மாற்றப்பட்டு செயற்பட்டு வருகிறது.