ருக்மணி அம்மாள் கல்வி அறக்கட்டளை 1994 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் செம்போடையில் ஆர். வரதராஜன் என்பவரால் நிறுவப்பட்டது. பின்பு செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரி[1] 2009 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
அறிமுகம்
இக்கல்லூரி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன்[2] இணைக்கப்பட்டு தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்டது.தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சில்[3] (AICTE) யிருந்தும் இக்கல்லூரி அங்கீகாரம் பெற்றது.
இடம்
இக்கல்லூரி செம்போடை, வேதாரணியம் தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
படிப்புகள்
இக்கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பு பொறியியல், இயந்திர பொறியியல், இளங்கலை தகவல் தொழில்நுட்பம் என பல பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.
வசதிகள்
இந்த கல்லூரி உள்கட்டமைப்பு வசதிகள், வகுப்பறைகள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் நூலகத்துடன் செயல்பட்டு வருகிறது.