வடக்கு, வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, புனர்வாழ்வு, புனரமைப்பு, விவசாய சந்தைப்படுத்தல் மேம்பாடு, தமிழ், இந்து விவகாரங்கள், வடக்கிற்கான தமிழ் மொழிப் பாடசாலைகள், தொழிற்கல்வி அமைச்சர்
↑22 நவம்பர் 2019 முதல் 12 August 2020 வரை மீன்பிடித்துறை, கடல்வள அமைச்சர்
டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda, நவம்பர் 10, 1957; யாழ்ப்பாணம், இலங்கை) ஒரு இலங்கை அரசியல்வாதி ஆவார். இவர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஆவார். இவர் 2000 -2001 மற்றும் 2004 - 2005 காலப்பகுதியில் இலங்கை இந்துசமய, கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அமைச்சராகக் கடமையாற்றினார். ஆரம்பத்தில் ஈழப் போராளியாக இருந்து பின்னர் ஜனநாயக அரசியலுக்கு மாறியவர். இவரின் அரசியல் தமிழீழ விடுதலைப் புலிகளின்ஏக பிரதிநிதித்துவ கொள்கைக்கு நேரடி சவாலாக இருப்பதோடு, அக்கொள்கையையும் மறுதலிக்கின்றது. சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),சுதந்திர இலங்கையின் 14வது நாடாளுமன்றம் (2010) இலங்கையின் 15வது நாடாளுமன்றம் (2015) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.
[1][2][3][4]