ருவான் விஜேவர்தன
தினேந்திரா ருவான் விஜேவர்தன (Dinendra Ruwan Wijewardene, சிங்களம்: දිනෙන්ද්ර රුවන් විජෙවර්ධන, பிறப்பு: 4 ஆகத்து 1975) இலங்கை அரசியல்வாதி ஆவார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான இவர் மைத்திரிபால சிறிசேனவின் அமைச்சரவையில் பாதுகாப்பு இராசாங்க அமைச்சராகப் பதவியில் இருந்தார்.[2] இவர் கம்பகா மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[3] இவர் 2020 செப்டம்பர் 14 இல் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.[4] இவர் 2010 இல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படும் முன்னர் மேல் மாகாண சபை உறுப்பினராக இருந்தார்.[5] He was appointed as the acting minister of defence few times after 2019.[6][7] வாழ்க்கைக் குறிப்புருவான் விஜேவர்தன விஜய பத்திரிகைக் குழுமத்தின் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன, ரஞ்சனி சேனநாயக்க ஆகியோரின் இளைய மகன் ஆவார். இவரது தாய்வழி பூட்டன் இலங்கையின் முதலாவது பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா ஆவர். இவரது தந்தை-வழி பாட்டனார் டி. ஆர். விஜயவர்தனா பிரபல பத்திரிகையாளர், ஏரிக்கரைப் பத்திரிகைக் குழுமப்த்தை ஆரம்பித்தவர். ருவான் இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார அரசுத்தலைவர் ஜே. ஆர். ஜெயவர்தனாவின் மருமகனும், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உச்டன்பிறவா சகோதரரும் ஆவார்.[8][9] இவர் இங்கிலாந்து, சசெக்சு பல்கலைக்க்ழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அரசியலில்விஜேவர்தன 2009 மேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2010 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு கம்பகா மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்குத் தெரிவானார்.[10] ஆனாலும், 2020 தேர்தலில் தோல்வியடைந்தார். 2020 செப்டம்பர் 14 இல் இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][11][12][13][14][15] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia