அனகாபள்ளி மாவட்டம்
அனகாபள்ளி மாவட்டம் (Anakapalli district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1][2] இதன் நிர்வாகத் தலைமையிடம் அனகபள்ளி நகரம் ஆகும். இம்மாவட்டம் புதிதாக 4 ஏப்ரல் 2022 அன்று விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அனகபள்ளி வருவாய் கோட்டம் மற்றும் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டங்களைக் கொண்டு அனகாபள்ளி மாவட்டம் புதிதாக நிறுவப்பட்டது.[3][4][5][6] 4,292 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அனகப்பள்ளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 17.270 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 62.02% ஆகும். மாவட்ட நிர்வாகம்அனகாபள்ளி மாவட்டம் அனகபள்ளி வருவாய் கோட்டம் மற்றும் நரசிப்பட்டினம் வருவாய் கோட்டங்களையும்,[7] 24 மண்டல்களையும், 753 கிராமங்களையும் கொண்டது. இம்மாவட்டம் எலமான்சிலி மற்றும் நரசிப்பட்டினம் எனும் 2 நகராட்சிகளையும், 8 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களையும் கொண்டது. அனகாபள்ளி மண்டலம், விசாகப்பட்டினம் மாநகராட்சியின் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது.[8] இம்மாவட்டத்தின் 8 கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் பௌலுவாடா, யலமஞ்சிலி, சூடாவரம், நரசிப்பேட்டை, முலகுட்டு, நக்கப்பள்ளி, பெத்த புத்தபள்ளி மற்றும் பாயகராவுபேட்டை ஆகும். மண்டல்கள்இம்மாவட்டத்தின் இரண்டு வருவாய் கோட்டங்களில் 24 மண்டல்கள் உள்ளது.
அரசியல்அனகாப்பள்ளி மாவட்டம் அனகாபல்லி மக்களவைத் தொகுதியும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது. அவைகள்: இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia