அனந்தபூர் மாவட்டம்
அனந்தபூர் மாவட்டம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 26 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் அனந்தபூர் நகரில் உள்ளது. 12,805 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 52 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள்.[1] மாவட்டம் பிரிப்புஇம்மாவட்டத்தின் சில வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிய ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3] மாவட்ட வரலாறுகிடைத்துள்ள வரலாற்று ஆவணங்களின் படி, இந்த நிலப்பகுதியினை அசோகர் கி.மு. 258-இல் ஆண்டதாக அறியப்படுகிறது. அசோகரின் ஆட்சிக்குப் பின்னர், ஏழாம் நூற்றாண்டில் மடகாஷிரா தாலுகாவிலுள்ள ரத்னகிரியிலிருந்து நாலாக்கள் இப்பகுதியை ஆண்டனர். இதையடுத்து, நோலம்பு அனந்தபூர் மாவட்டத்தை இணைத்துக் கொண்டது. இவை பல்லவர்களைச் சேர்ந்தவை ஆகும். அவர்கள் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் அரசியல்வாதிகளுக்கு இணையானவர்களாகக் கருதப்பட்டனர். பத்தாம் நூற்றாண்டில், கங்கராஜர்கள் நிலம்புவை கைப்பற்றினர். பிறகு அனந்தபூர் மாவட்டத்தின் நில எல்லைகளையும் கைப்பற்றினர். அவர்களில் அமரசிம்ஹா முதன்மையாக இருந்தார். பின்னர், சோழர்கள் தஞ்சாவூரிலிருந்து வந்து அவர்களை வென்றனர். பத்து முதல் பதினொன்றாம் நூற்றாண்டு வரை, மேற்கு சாளுக்கியர்கள், நிஜாமுவில் உள்ள கல்யாணியில் இருந்து இப்பகுதியை ஆண்டனர். அதன் பின்னர், ஹொய்சாலாவும், யாதவர்களும் 12-ஆம் நூற்றாண்டில் இம் மாவட்ட எல்லைப் பகுதிகளை ஆண்டனர்.[4] பின்னர், டெல்லியில் இருந்து ஆட்சி செய்த, அலாவுதீன் கில்ஜி தென் நாட்டை ஆக்கிரமித்தார். அவரது தளபதி மாலிக் கபூர் வந்து ஹோசாக்களையும் யாதவர்களையும் விரட்டியடித்தார். 1310-ஆம் ஆண்டில், நிஜாம் இராச்சியத்தில் துர்கசமுத்ராவின் நுழைவாயிலைக் கைப்பற்றியபோது பிரதாபருத்ரு சிறைபிடிக்கப்பட்டார். பிரதாபருத்ராவின் சன்னதியைக் காத்துக்கொண்டிருந்த ஹரிஹரா மற்றும் புக்கராயாவையும் அவர் கைப்பற்றி, இராணுவத்துடன் கர்நாடக இராச்சியத்திற்கு திருப்பி அனுப்பினார். அவர் திரும்பியதும், ஹரிஹராபுக்காரலரு விஜயநகர சாம்ராஜ்யத்தை நிறுவினார். 1258 முதல் பதினாறாம் நூற்றாண்டு வரை இந்த மாவட்டம், விஜயநகர பேரரசால் ஆளப்பட்டது. 1677-இல் அனந்தபூர் மாவட்டம், முகலாயர்களின் ஆட்சியில் சென்றது. இது 1723-இல் ஆசாஃப் ஜாஹியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. நிசாம் நவாப் 1799 மைசூர் போரில் அதைக் கைப்பற்றினார். 1800-களின் இராணுவ ஒத்துழைப்பு முறையால் நிஜாம் நவாப் அதை ஆங்கிலேயருக்குக் கொடுத்தார். பின்னர், 1882-இல், ஆங்கிலேயர்கள் இந்த மாவட்டத்தை நிறுவினர். முன்னதாக, இந்த இடம் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. மாவட்டத்தின் ஒரு பகுதியாக, கத்யாரி, முடிகும்பா, நல்லமாடா, நம்புலிபுலிகுண்டு, தூர்தலா, பிளாக் கெரு, ஒபுலாதேவராச்சுரு, தனக்கல்லா மற்றும் அமடகுரு மண்டலங்கள் 1910-இல் அனந்தபூர் மாவட்டத்தில் இணைந்தன.[5] புவியியல் தோற்றம்இந்த மாவட்டம் வடக்கே கர்னூல் மாவட்டமும், கிழக்கில் ஒய்.எஸ்.ஆர் மாவட்டமும், கிழக்கில் கடபா மாவட்டமும், தென்கிழக்கில் சித்தூர் மாவட்டமும், மேற்கு மற்றும் தென்மேற்கில் கர்நாடகாவின் எல்லையும் கொண்டுள்ளன. இம்மாவட்டத்தின் வடக்கின் மையப் பகுதியில் உயரமான, தட்டையான பீடபூமிகள் அல்லது சிறிய மலைத்தொடர்கள் உள்ளன. தெற்கே 'புள்ளி' உயரமான குன்றாகும், அந்த பீடபூமி, கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தை அடைகிறது. இம்மாவட்டம் வழியாக ஆறு ஆறுகள் ஓடுகின்றன. அவை- பென்னா, சித்ராவதி, வேதாவதி, பாபக்னி, ஸ்வர்ணமுகி, தடகளூர். இம்மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக, 381 மி.மீ. மழை பெய்யும். இராஜஸ்தானில் உள்ள ஜெய்சால்மர் மாவட்டம் ஜெய்சால்மருக்குப் பிறகு, இந்திய நாட்டில் மிகக் குறைந்த மழை பெய்யும் மாவட்டமாக இது கருதப்படுகிறது. தொழில்கடந்த பத்தாண்டுகளாக தர்மவரத்திற்கு அடுத்தபடியாக, 'யாடி' மிகப்பெரிய பட்டு மற்றும் ஜவுளி தொழில் பகுதியாக அறியப்படுகிறது. இம்மாவட்டத்தில் மிக வேகமாக காற்று வீசுகிறது. குறிப்பாக மே மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில், காற்று அதிகமாக இருக்கும். இந்த காலம் உள்நாட்டில், 'கல்லிகம்' என்று அழைக்கப்படுகிறது. எனவே, காற்றாலை மின் நிலையங்கள் மாவட்டத்தில் அதிகமாக உள்ளன. அனந்தபூர் மாவட்டம் மட்டும் மாநிலத்தின் மொத்த மின்சக்தி உற்பத்தியில் 75 சதவீதம் இடத்தினைப் பெறுகிறது. ராமகிரி, ஷிங்கனமாலா மற்றும் வஜ்ரகுரு ஆகியவை மாவட்டத்தின் முக்கிய காற்றாலை நிலையங்கள் ஆகும். கிரானைட் துப்புரவுத் தொழில், சிமென்ட் தொழில், எஃகு ஆலை, பீடி தொழில், தர்மவரம் பட்டு, பிற ஜவுளித் தொழில் ஆகியவை ததாபத்ரி நகரில், மிகவும் புகழ் வாய்ந்த தொழில்கள் ஆகும். ஆட்சிப் பிரிவுகள்அனந்தபுரம் மாவட்டத்தை 31 வருவாய் மண்டலங்களாகப் பிரித்துள்ளனர்.[6].[7]
அரசியல்![]() ![]() ![]() ![]() 2 நாடாளுமன்றம் மற்றும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நாடாளுமன்றத் தொகுதிகள்:
இவற்றையும் பார்க்கவும்மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
|
Portal di Ensiklopedia Dunia