அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்
சிறீ அல்லூரி சீதாராம இராஜு (Alluri Sitharama Raju district), 4 ஏப்ரல் 2022 ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் மற்றும் 26 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பதேரு ஆகும்.[2][3] இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான அல்லூரி சீதாராம இராஜுவின் நினைவாக இப்புதிய மாவட்டத்திற்கு பெயரிடப்பட்டது. விசாகப்பட்டினம் மாவட்டத்தின் பதேரு வருவாய் கோட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டத்தின் பகுதிகளை அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிறுவப்பட்டது.[4][5][6] 12,251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிறீ அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தின் மக்கள் தொகை 9.54 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 48.34% ஆகும். நிர்வாகப் பிரிவுகள்சீதாராம அல்லூரி இராஜு மாவட்டம் பதேரு மற்றும் ராம்பச்சோதவரம் என வருவாய் கோட்டங்களும், 22 மண்டல்களும், 2972 கிராமங்களும் கொண்டது. ![]() மண்டல்கள்பதேரு வருவாய் கோட்டத்தில் 11 மண்டல்களும்; ராம்பச்சோதவரம் கோட்டத்தில் 11 மண்டல்களும் கொண்டது.
அரசியல்![]() ![]() ![]() ![]() இம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.[7]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia