பார்வதிபுரம் மண்யம் மாவட்டம்
பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் (Parvathipuram Manyam district), 4 ஏப்ரல் 2022 அன்று ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[3] இதோடு ஆந்திராவில் தற்போது 26 மாவட்டங்கள் உள்ளது.[4] விஜயநகர மாவட்டத்தின் பார்வதிபுரம் வருவாய்க் கோட்டம் மற்றும் சிறீகாகுளம் மாவட்டத்தின் பள்ளிகொண்டா வருவாய்க் கோட்டத்தின் பகுதிகளைக் கொண்டு பார்வதிபுரம் மண்யம் மாவட்டம் 4 ஏப்ரல் 2022 அன்று நிறுவப்பட்டது.[5][6][7][8] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பார்வதிபுரம் ஆகும். 3659 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9.25 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 50.9%. ஆட்சிப் பிரிவுகள்பாரவதிபுரம் மண்யம் மாவட்டம் பள்ளிகொண்டா மற்றும் பார்வதிபுரம் என இரண்டு வருவாய்க் கோட்டகள் கொண்டது. இம்மாவட்டம் 15 மண்டல்களாகவும் மற்றும் 910 கிராமங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் 2 நகராட்சிகளும், ஒரு பேரூராட்சியும் கொண்டுள்ளது. மண்டல்கள்![]() பார்வதிபுரம் வருவாய் கோட்ட 7 மண்டல்களாகவும், பள்ளிக்கொண்டா கோட்டம் 8 மண்டல்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்:
அரசியல்இம்மாவட்டம்அரக்கு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. மற்றும் 8 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.[9]
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia