அலகாபாத் மாவட்டம்
பிரயாக்ராஜ் மாவட்டம் இதன் பழைய பெயர் அலகாபாத் மாவட்டம், வட இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மாவட்டங்களுள் ஒன்று. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பிரயாக்ராஜ் ஆகும். மேலும் இம்மாவட்டம் பிரயாக்ராஜ் கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. அக்டோபர், 2018-இல் இம்மாவட்டத்தின் பெயர் பிரயாக்ராஜ் மாவட்டம் என உத்தரப் பிரதேச் அரசு மாற்றியது.[1][2] 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இம்மாவட்டம் உத்தரப்பிரதேசத்தின் 71 மாவட்டங்களில் மிக அதிக மக்கட்தொகை கொண்ட மாவட்டம் ஆகும்.[3] இந்துக்களின் புனிதமான நகரமான பிரயாகையில், கங்கை, யமுனை, சரஸ்வதி, ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கின்றன. கும்ப மேளாகங்கை, யமுனை ஆறு மற்றும் கண்ணுக்குப் புலப்படாத சரசுவதி ஆறும் கூடும் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்) உள்ள திரிவேணி சங்கமத்தில் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறுகிறது. மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி அலாகாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 5,959,798.[3] இது தோராயமாக எரித்திரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[4] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 13வது இடத்தில் உள்ளது.[3] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 1,087 inhabitants per square kilometre (2,820/sq mi).[3] மேலும் அலாகாபாத் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 20.74%.[3] அலாகாபாத் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 902 பெண்கள் உள்ளனர்.[3] மேலும் அலாகாபாத் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 74.41%.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia