சுல்தான்பூர் மாவட்டம்
சுல்தான்பூர் மாவட்டம் (Hindi: सुल्तानपुर ज़िला, Urdu: سلطان پور ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் சுல்தான்பூர் நகரம் ஆகும். இது பைசாபாத் பிரிவின் கீழ் அமைந்துள்ளது. கங்கையின் கிளைநதியான கோமதி ஆறு இம்மாவட்டத்தின் நடுவே செல்கிறது. பொருளாதாரம்ஜகதீஸ்பூர் இம்மாவட்டத்தின் தொழில் நகரம் ஆகும். இங்கு பாரத மிகுமின் நிறுவன தொழிற்சாலையும், ஒரு உரத் தொழிற்சாலையும் மற்றும் சில தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. மேலும் இம்மாவட்டத்தின் முன்சிகஞ் அருகேயுள்ள கோர்வாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் சோதனை மையமும், கௌரிகஞ்ல் ஏசிசி நிறுவனத்தின் சிமெண்ட் தொழிற்சாலையும் அமைத்துள்ளது. மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி சுல்தான்பூர் மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,790,922.[1] இது தோராயமாக லைபீரியா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[2] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 69வது இடத்தில் உள்ளது.[1] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 855 inhabitants per square kilometre (2,210/sq mi).[1] மேலும் சுல்தான்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.92%.[1]சுல்தான்பூர் மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 978 பெண்கள் உள்ளனர்.[1] மேலும் சுல்தான்பூர் மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 71.14%.[1] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia