ரேபரேலி மாவட்டம்
ரேபரேலி மாவட்டம் (Hindi: रायबरेली ज़िला, Urdu: رائے بریلی ضلع) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டத்தின் தலைநகரம் ரேபரேலி நகரம் ஆகும். இம்மாவட்டம் லக்னௌ கோட்டத்தின் கீழ் அமைந்துள்ளது. பொருளாதாரம்2006ல் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ரேபரேலி மாவட்டத்தை இந்தியாவின் 640 மாவட்டங்களில் மிகவும் பின்தங்கியுள்ள 250 மாவட்டங்களில் ஒன்றாக அறிவித்தது.[1] இம்மாவட்டம் பின்தங்கியுள்ள பகுதிகளுக்கான நிதி வழங்கும் திட்டம் (BRGF) மூலம் உத்தரப்பிரதேசத்தில் பயன்பெறும் 34 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] மக்கள் வகைப்பாடு2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி ரேபரேலி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,404,004.[2] இது தோராயமாக பனாமா நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.[3] இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 97வது இடத்தில் உள்ளது.[2] இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி 739 inhabitants per square kilometre (1,910/sq mi).[2] மேலும் ரேபரேலி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 18.51%.[2] ரேபரேலி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 941 பெண்கள் உள்ளனர்.[2] மேலும் ரேபரேலி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 69.04%.[2] மொழிகள்இம்மாவட்டத்தில் அவதி மொழி பெரும்பான்மையாக பேசப்படுகிறது. இம்மொழியை 38 மில்லியன் மக்கள் அவத் பகுதியில் பேசுகின்றனர்[4] மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia