ஜெய்ப்பூர் மாவட்டம்
ஜெய்ப்பூர் மாவட்டம் (ஆங்கிலம்Jaipur District) வட இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுள் ஒன்று ஆகும். ஜெய்ப்பூர் நகரம் இம்மாநிலத்தின் தலைநகர் ஆகும். இந்தியாவின் அதிக மக்கட்தொகை கொண்ட நகரங்களில் இந்நகரம் 10 வது இடத்தில் உள்ளது.[4] இம்மாவட்டமானது மொத்தம் 11,152 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டது. இம்மாவட்டத்தின் எல்லைகளாக சீகர் மாவட்டம், அல்வார் மாவட்டம், தௌசா மாவட்டம், சவாய் மாதோபூர் மாவட்டம், டோங் மாவட்டம், ஆஜ்மீர் மாவட்டம் மற்றும் நாகவுர் மாவட்டம் ஆகியவை அமைந்துள்ளது. 2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 66,63,971 ஆகும்.[4] மாவட்ட நிர்வாகம்7 ஆகஸ்டு 2023 அன்று ஜெய்ப்பூர் மாவட்டத்தின் பெரு நகர ஜெய்ப்பூர் மாநகராட்சி பகுதிகளை தவிர்த்த இதர வருவாய் வட்டங்களைக் கொண்டு புதிய ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டம், சாபுரா மாவட்டம், தூடூ மாவட்டம் மற்றும் கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் நிறுவப்பட்டப் பிறகு ஜெய்ப்பூர் மாநகர மாவட்டத்தில் உள்ள ஜெய்ப்பூர் மாநகராட்சி மற்றும் வருவாய் வட்டங்களும் பின்வருமாறு:
மாவட்டப் பிரிப்புஇம்மாவட்டத்தின் ஜெய்ப்பூர் மாநகராட்சி பகுதிகளை தவிர்த்த இதர வருவாய் வட்டங்களைக் கொண்டு 7 ஆகஸ்டு 2023 அன்று புதிய ஜெய்ப்பூர் கிராமிய மாவட்டம், சாபுரா மாவட்டம், தூடூ மாவட்டம் மற்றும் கோட்பூத்லி-பெக்ரோர் மாவட்டம் நிறுவப்பட்டது.[5] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia