கோட்டா, இராசத்தான்
கோட்டா (Kota, Hindi: कोटा), இந்தியாவின் வட மாநிலம் இராசத்தானில் உள்ள ஓர் நகரமாகும். மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து தெற்கே 240 கிலோமீட்டர்கள் (149 mi) தொலைவில் சம்பல் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. சுற்றுப்புறத்தில் பயிராகும் கம்பு, கோதுமை, நெல், தானியங்கள், கொத்தமல்லி மற்றும் எண்ணெய் வித்துகளுக்கு சந்தையாக இந்நகரம் விளங்குகிறது. எண்ணெய் ஆலைகள், பருத்தி ஆலைகள், கைத்தறிகள், உலோக கைவினைப்பொருட்கள் ஆகியன பாரம்பர்ய தொழில்களாகும். பருத்தி சேலைகளில் கோட்டா வகை சேலைகள் தனித்துவம் பெற்றவை. அண்மையில் வேதி உரங்கள், வேதித் தொழிலகங்கள் மற்றும் பொறியியல் தொழிற்சாலைகள் வளர்ந்து வருகின்றன. இராசத்தானின் மூன்று பெரிய நகரங்களில் ஒன்றாக உள்ளது; மற்றவை ஜெய்ப்பூரும் ஜோத்பூரும் ஆகும். அண்மையில் இங்கு பொறியியல், மருத்துவம் மற்றும் இந்தியத் தொழிற்நுட்பக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் பெருகி புகழ்பெற்றுள்ளன. கோட்டாவின் தனித்துவமிக்க ஓவியப் பாணியும் குறிப்பிடத்தக்கது. மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
மேலும் அறிய
|
Portal di Ensiklopedia Dunia