தேசிய நெடுஞ்சாலை 40 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 40 (National Highway 40 (India)), என்பது முன்னர் தேசிய நெடுஞ்சாலையாக இருந்த 4 மற்றும் 18 ஆகியவற்றின் பகுதிகளின் இணைவுச் சாலையாகும். இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை கர்னூலில் தேசிய நெடுஞ்சாலை 44 சந்திப்பில் தொடங்கிக் கடப்பா மற்றும் சித்தூர் வழியாகத் தமிழ்நாட்டின் இராணிப்பேட்டையில் முடிவடைகிறது.[1][2] இது ராயலசீமா விரைவு நெடுஞ்சாலை என்றும் அழைக்கப்படுகிறது. கர்னூலுக்கும் கடப்பாவுக்கும் இடையே இந்த நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. வழித்தடம்இது கர்னூலில் தொடங்கி நந்தியால், அல்லகத்தா, மைடுகூர், கடப்பா, ராயச்சோட்டி, பைலேரு, சித்தூர் வழியாகச் சென்று ராணிப்பேட்டையில் முடிகிறது. இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 381 கி. மீ. ஆகும். இதில் 236.74 கி. மீ. தூரம் ஆந்திராவிலும் மற்றும் 27.00 km (16.78 mi) தமிழ்நாட்டிலும் செல்கிறது.[2][3] கர்னூல் ↔ நந்தியால் ↔ அல்லகத்தா ↔ மைடுகூர் ↔ கடப்பா ↔ ராயச்சோடி ↔ பிலேரு ↔ சித்தூர் ↔ ராணிப்பேட்டை சந்திப்புகள்
மேலும் பார்க்கவும்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia