வாந்தாரா வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (Vantara wildlife conservation, rescue and rehabilitation), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள வாந்தாரா எனும் பகுதியில் 3,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்த வனவிலங்குகள் பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் ஆகும்.[2] இம்மையத்தில் 43 வகையான இனத்தைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வனவிலங்குகள் பாதுகாக்கப்படுகிறது. இது தனியார் துறை மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
வாந்தாரா மையம் வனவிலங்குகளை பாதுகாப்பது, மீட்பது, பராமரிப்பது மற்றும் மறுவாழ்வு அளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், காண்டாமிருகங்கள் மற்றும்முதலைகள் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை பாதுகாக்கிறது. இம்மையம் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளிலிருந்து 200க்கும் மேற்பட்ட யானைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பிற விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளை மீட்டுள்ளதாக கூறுப்படுகிறது.[7]ஜாம்நகர் மாவட்டம் வெப்பமான, வறண்ட காலநிலையில் அமைந்துள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்[8] இம்மையத்திற்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் இம்மையத்தில் உள்ள வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.[9]
மேலாண்மை
வந்தாரா மையம், முகேசு அம்பானியின் மகன் அனந்த் அம்பானியின் வழிகாட்டுதலின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இம்மையத்தில் வனவிலங்குகளுக்கு தேவையான தீவிர சிகிச்சை பிரிவு, எம்.ஆர்.ஐ,, சி.டி ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட் மற்றும் எண்டோஸ்கோபி அலகுகள் உள்ளிட்ட நவீன கால்நடை தொழில்நுட்பத்துடன் நிறுவப்பட்டுள்ள்து.[10]
குறிப்பிடத்தக்க சாதனைகள்
இந்திய விலங்கு நல வாரியத்திடமிருந்து நிறுவனப் பிரிவில் பிராணி மித்ரா தேசிய விருதை வாந்தாரா மையம் பெற்றுள்ளது. விலங்கு நலத் துறையில் பங்களிப்புகளை அங்கீகரிக்க இந்திய அரசால் இந்த விருது வழங்கப்படுகிறது.[11][12]