இந்தியாவில் வேளாண்மை
![]() ![]() ![]() இந்தியாவின் வேளாண்மை பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இன்று இந்தியா விளைநில உற்பத்தி பரப்பி உலகளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 2007ஆம் ஆண்டு தகவலின்படி இந்தியாவின் மொத்த வேலைவாய்ப்பில், வேளாண் மற்றும் தொடர்புள்ள துறைகளான காடுவளம் மற்றும் மரவேலைகள் 16.6 சதவீதத்தைக் கொண்டிருந்தது.[1] 60 சதவீதம் விவசாயமே கொண்டும், ஒட்டுமொத்த உள்நாட்டுத் தயாரிப்பில் தன்னுடைய பங்கில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டபோதிலும், இன்றுவரை அதிக பொருளாதாரத்தை ஈட்டும் துறையாக இருந்து இந்தியாவின் ஒட்டுமொத்த சமூக-பொருளாதார வளர்ச்சியில் ஒரு பெரும்பங்கினை வகிக்கிறது. பால், முந்திரி தேங்காய், தேயிலை, இஞ்சி, மஞ்சள் மற்றும் கருமிளகு ஆகியவற்றை உலகிலேயே அதிகமாக உற்பத்திசெய்யும் நாடு இந்தியா ஆகும்.[2] உலகிலேயே அதிகமான கால்நடை எண்ணிக்கையையும் (281 மில்லியன்) இந்தியாவிலே காணப்படுகிறது.[3] கோதுமை, அரிசி, சர்க்கரை, நிலக்கடலை, உள்நாட்டு மீன் ஆகியவற்றை அதிகம் உற்பத்தி செய்யும் நாடுவரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.[4] புகையிலை உற்பத்தியில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.[4] உலக அளவிலான பழங்கள் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 10 சதவீதமாக உள்ளது. இதில் வாழை மற்றும் சப்போட்டா உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ளது.[4] இந்தியாவின் மக்கள் தொகையானது, அரிசி மற்றும் கோதுமை தயாரிப்பிதற்கான ஆற்றலைவிட வேகமாக அதிகரிக்கிறது.[5] முனைப்புகள்விற்பனை, சேமிப்பிடம் மற்றும் குளிர் பதப்படுத்தல் ஆகியவற்றின் கட்டுமான வளர்ச்சிக்கான முதலீட்டின் தேவையின் அளவு மிக அதிகமாக கணிக்கப்பட்டுள்ளது. விற்பனைக் கட்டுமானங்களில் முதலீட்டினை உருவாக்குவதற்கு அரசாங்கம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டங்களில் கிராமப்புற கிடங்குகளைக் கட்டுதல், சந்தை ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப வலைக்கட்டமைப்பு, வேளாண் விற்பனை கட்டுமானம், தரவரிசைப்படுத்தல் மற்றும் தர அளவுப்பாடுகளின் வளர்ச்சி/பலப்படுத்தல் ஆகியவை அடங்கும்.[6] இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (ஐஏஆர்ஐ), 1905 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது; 1970 ஆம் ஆண்டுகளின் "இந்திய பசுமைப் புரட்சி"யை ஏற்படுத்திய ஆராய்ச்சிகளுக்குக் காரணமாக இருந்தது. வேளாண்மை தொடர்புடைய ஆராய்ச்சி மற்றும் கல்வி உட்பட இணக்கமான துறைகளுக்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழு (ஐசிஏஆர்) தான் உயர்மட்டக் குழுவாக உள்ளது.[7] மத்திய வேளாண் அமைச்சர் தான் ஐசிஏஆரின் தலைவர் ஆவார். இந்திய வேளாண் புள்ளியல் ஆராய்ச்சி நிறுவனம் வேளாண்மைச் சார்ந்த பரிசோதனைகளின் வடிவமைப்புகளுக்குப் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகிறது, வேளாண்மைத் தகவல்களை ஆராய்கிறது மேலும் கால்நடை மற்றும் தாவர இனப்பெருக்கத்திற்கான புள்ளியியல் தொழில்நுட்பங்களில் நிபுணத்துவத்தை உருவாக்குகிறது. வேளாண் திட்டங்களை முழுமையாக மதிப்பிடுவதற்காக இந்திய அரசாங்கம், சமீபத்தில் விவசாயிகள் ஆணையத்தை உருவாக்கியது.[8]. இருந்தாலும் பரிந்துரைகள் பல்வேறுபட்ட வரவேற்பைப் பெற்றது. பல்வேறு வகையான வேளாண்மைஇந்தியாவில் 10 வகையான வேளாண்மை இருக்கிறது
சிக்கல்கள்
இந்தியாவின் குறைந்த உற்பத்தி, பின்வரும் காரணங்களின் விளைவாக ஏற்பட்டவை:
வரலாறுஆரம்பகாலங்களிலேயே தாவரங்களைப் பயிரிட்டும் பயிர்கள் மற்றும் விலங்குகளைக் குடும்பச் சூழல்களில் பயன்படுத்தியும் இந்திய வேளாண்மை கி.மு. 9000 இல் துவங்கிவிட்டது.[17] நிலைபெற்ற வாழ்க்கையைத் தொடர்ந்து, விரைவிலேயே விவசாயத்திற்கான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் உருவாகின.[18][19] இரட்டைப் பருவகாலங்கள், ஒரே ஆண்டில் இரண்டு அறுவடைகளுக்கு வழிவகை செய்தது.[20] முன்னரே இருந்த வர்த்தக இணைப்புகள் வழியாக இந்தியப் பொருட்கள் விரைவிலேயே உலகெங்கும் சென்றது மேலும் அன்னியப் பயிர்களும் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[20][21] இந்தியர்கள், தாங்கள் தொடர்ந்து வாழ அத்தியாவசியமாக கருதப்பட்ட தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் போற்றவும் வணங்கவும் செய்தனர்.[22] இந்தியாவில் நீர்ப்பாசன கால்வாய்கள் ஒரு புதிய நிலை பண்பாட்டினை ஏற்படுத்தியதை மத்திய காலங்கள் கண்டன, மேலும் இந்தியப் பயிர்கள் இஸ்லாமிய ஆதரவினைப் பெற்றிருந்த உலகத்தின் பல பிரதேசங்களின் பொருளாதாரத்தைப் பாதித்தது.[23][24] சமச்சீர் வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கில் நிலம் மற்றும் நீர் நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டன.[25][26] பிந்தைய நவீன காலத்தில் சிறு தேக்கங்கள் இருந்தபோதிலும் சுதந்திர இந்தியக் குடியரசால், விசாலமான வேளாண்சார்ந்த திட்டங்களை உருவாக்க முடிந்தது.[27][28] இந்தியாவில் வேளாண்மையின் இன்றைய நிலைஇந்தியாவில் இன்றைய தலையாயப் பிரச்சனை விவசாய விளை நிலங்களின் ஆக்கிரமிப்பு. விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் வளர்ந்ததால் , இன்று வழி வழியாக விவசாயத் தொழிலையே கண்ணும் கருத்துமாகக் கவனித்து வந்த பல குடும்பங்களின் வாரிசுகள் அதனை விட்டு வேளியே வரத் துணிந்ததோடு அவ் விளை நிலங்கள் இன்று குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் உரு மாறிக் கொண்டிருக்கின்றன. விவசாய நிலங்களின் அளவு 37.05 சதவீதமாக குறைந்துவிட்டது என்ற அபாயகரமான செய்தி தமிழக அரசின் 11வது ஐந்தாண்டு திட்டத்திற்கான அணுகுமுறை அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழக விவசாயத்துறையில் இன்றைய நிலை குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. 1993, 94ல் 25 சதவீதமாக இருந்த வேளாண்மை உற்பத்தி 2005, 2006ல் 13.03 சதவீதமாக சரிந்துள்ளது. அதே போல் 2001, 02ல் 76.89 லட்சம் டன்னாக இருந்த உணவு தானிய உற்பத்தி 2004, 05ல் 61.40 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.[29] முதல் ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்திற்கு வழங்கப்பட்ட முதலீடு 15 சதம். 2002-2007ல் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்தது வெறும் 1.3 சதம்.[30] மேலும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு, வயல்வெளிகளில் வீட்டுமனைகள் தோற்றம் பெற்றமை ஆகியவையும் வேளாண்மைக்கான ஒரு சிக்கலாக உள்ளது. முற்காலத்தில் ஆட்சியின் பெரும் வருவாயக நிலவரி இருந்தது. இதனால் விவசாயிகளுக்கும் சமூகத்தில் மரியாதை இருந்தது. இன்றைய இந்தியாவில் ஆட்சியின் வருவாய் வருமான வரி, தொழில் வரி, சுங்க வரி, விற்பனை வரி என்று வேறு தொழில்களிலிருந்து பெறப்படுகிறது. சிறப்புப்பொருளாதார மண்டலங்கள்இன்று விளை நிலங்களை வணிக மயமாக்கும் கொள்ளைத் திட்டங்களால் உணவுப் பாதுகாப்பு, நீர்வளப் பாதுகாப்பு ஆகியவை கேள்விக்குறியாகி, இந்தியாவில் ஏழை விவசாயிகளின் நிலங்கள் வன்முறையாகப் பறிக்கப்படுகின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் வேளாண் துறையில் அயல் நாட்டு முதலீடுகளை அனுமதிப்பதன் மூலமும் நடைபெற்று வருகிறது. தற்போது 148 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் அதிகமானவை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலங்களாகும். நகரமயமாக்கல்மேலும், நகர மயமாக்கல், சுரங்கம் தோண்டி கனிம வளங்களைச் சுரண்டுதல், தொழிற்சாலைகளை அமைத்தல், அதி விரைவு நெடுஞ்சாலைகள் அமைத்தல் போன்றவற்றிற்காகவும் விவசாய விளை நிலங்கள் பெருமளவு வன்முறையாகப் பறிக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரிய செயலாகும். உத்திரப் பிரதேசத்தில் யமுனா மகா நெடுஞ்சாலைத் திட்டத்தில் ஜேபி இன்ஃப்ரா டெக் நிறுவனமும், ஒரிசாவில் போஸ்கோ நிறுவனமும், ஜைதாபூரில் அணுமின் நிலையத் திட்டத்திற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனமான அரேவாவிற்கும் விவசாய நிலங்களே பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதும் வேதனைக்குரிய செய்தியாகும்.[31] வறுமைஉழுபவனுக்கே நிலம் சொந்தம் என்ற பாரம்பரியச் சிந்தனை, செயல்முறை அழிக்கப்படுவதும் இன்றைய நலிவிற்கு ஒரு முக்கிய காரணமாகலாம். இந்தியா தன்னை ஒரு மிகப்பெரிய வளரும் பொருளாதார நாடாகவும், வல்லரசாகவும் பிரகடனப்படுத்திக் கொண்டு வரும் அதே வேளையில் 40% குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத சூழல் உள்ளது. இன்று உலகெங்கிலும் உணவின்றி பட்டினி கிடக்கும் 2.6 கோடிப் பேரில் கால் பகுதியினர் – அதாவது 65 இலட்சம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர் என்று ஒரு அறிக்கை கூறுகிறது.[31] 1951ல் மக்கள் தொகையில் 72 சதம் விவசாயிகள். ஆனால் தற்போது 58 சதம் மட்டுமே. ஆட்சியாளர்கள் விவசாயத்தை புறக்கணித்து விட்டனர் என்ற கொள்கை நிலவுகிறது. இதுவரை (1997லிருந்து 2008 வரை) தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936. ஆனால், இன்று வரை 2 லட்சத்து 20 ஆயிரம் என்று தற்கொலை எண்ணிக்கை கூடியுள்ளது. இவர்களின் சராசரி வயது 25லிருந்து 45 வரை ஆகும். விவசாய செய்நிலங்கள் பரப்பு குறைந்துவிட்டது. நகர விரிவாக்கத்தில் வயல்கள், நீர்நிலைகள் வீடுகளாகிவிட்டன. எதிர்காலத்தில் விவசாய பூமிகள், மொகஞ்சதாரா, ஹரப்பா போன்ற வரலாற்றுச் சின்னங்களாகக் காட்சி அளிக்கலாம் என்ற கவலை முன்வைக்கப்படுகிறது. [31] மானியங்கள் மற்றும் கடன்கள்இன்று மானியங்கள் விவசாயிகளுக்கு இல்லை. விவசாய மானியம் என்ற பெயரில் ரசாயன உரக் கம்பெனிக்கும், பூச்சி மருந்து நிறுவனங்களுக்கும், டிராக்டர் நிறுவனங்களுக்கும் வழங்கப்படுகிறது.[32] விவசாயிகள் கடன் தொல்லைகள் சென்ற ஆண்டில் உழவர்கள் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காண்டேசு என்ற பகுதியில் கடந்த 8 மாதங்களில் 81 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதற்கு முன்பு 74 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். பட்ஜெட் 2006ல் நாடாளுமன்றத்தில் உழவர்கள் தற்கொலை குறித்த 6 மாநிலங்களின் பட்டியல் தரப்பட்டது. அது ஆந்திராவில் 1322, மராட்டியத்தில் 666, கர்நாடகாவில் 323, கேரளாவில் 136, ஒரிசாவில் 5 என்றும் கூறப்பட்டுள்ளது. இன்றைய நிலையில் வளர்ந்த நாடுகளாகிய அமெரிக்காவில் 2 விழுக்காடு மக்களும் ஜப்பானில் 5 விழுக்காடு மக்களும் வளம் குறைந்த நாடாகிய இஸ்ரேலில் 10 விழுக்காடு மக்களும் மக்கள் தொகை மிகுந்த நாடான சைனாவில் 60 விழுக்காடு மக்களும் வேளாண்மை செய்து வருகின்றனர். இந்த நாடுகளில் பல ஆண்டுகட்கு முன் கூடுதலான மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இந்தியாவில் பன்னெடுங்காலமாகவே 70 விழுக்காடு மக்கள் வேளாண்மைத் தொழிலையே தாய்த் தொழிலாகச் செய்து வருகின்றனர்.அறிவியல் வளர்ச்சி வேளாண் கருவிகள் பயன்பாடு, பிறதொழில் நாட்டம் என்ற பல்வேறு சூழ்நிலையில் வேளாண்மை செய்வோர் தொகை குறைந்து வருகின்றது. இது வளர்ச்சி நோக்கிய மாற்றம் அல்ல. கால்நடைகள்தமிழ் மண்ணின் அடையாளமாக விளங்கும் காங்கேயம் காளைகள் விவசாயிகளுக்கு காலம் காலமாகப் பயன்பட்டது. எங்கு நோக்கினும் தமிழகத்தின் அனைத்து மூலைகளிலும் இக்காளைகள் இருந்தன. கடந்த 15 ஆண்டுகளாகப் படிப்படியாக அழிவின் நிலைக்கு இந்த இனம் வந்துவிட்டது. குறைந்த தீவனம் உண்டு, அதிக உழைப்பைத் தரும். விவசாயிகளின் தோழனாக இருந்து அதிக பாரம் இழுத்துச் செல்லும் வண்டிகளில் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது வறட்சி, கடன் என்ற தொல்லையால் விவசாயிகளால் இந்தக் காளைகளின் பெருக்கத்தில் கவனம் காட்ட இயலாமல் கறவை மாடுகளில் கவனம் செலுத்து கின்றனர். நாட்டுப்புறவியல் கதைகள், குறிப்பாக கொங்கு மண்டல கிராமியக் கதைகளிலும் காங்கேயம் காளைகள் பரவலாக இடம் பெற்றுள்ளன. மேலும் பார்க்ககாட்சிக்கூடம்
குறிப்புகள்
வெளிப்புற இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia