இராணிப்பேட்டை மாவட்டம்
இராணிப்பேட்டை (Ranipet District) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் இராணிப்பேட்டை ஆகும். இராணிப்பேட்டை மாவட்டம், 2019-ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15-ஆம் தேதி வேலூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது.[1][2] தமிழ்நாட்டின் 36-ஆவது மாவட்டமாக, இம்மாவட்டத்தை 28 நவம்பர் 2019 அன்று தமிழக முதல்வர் முறைப்படி இராணிப்பேட்டையில் துவக்கி வைத்தார்.[3] மாவட்ட எல்லைகள்இராணிப்பேட்டை மாவட்டத்தின் தெற்கே திருவண்ணாமலை மாவட்டம், கிழக்கே காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டமும், மேற்கே வேலூர் மாவட்டம் மற்றும் வடக்கே ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. மாவட்ட நிர்வாகம்இராணிப்பேட்டை மாவட்டம் இராணிப்பேட்டை மற்றும் அரக்கோணம் என என 2 வருவாய் கோட்டங்களும், 6 வருவாய் வட்டங்களும், 18 குறுவட்டங்களும், 330 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது.[4] [5] [6] வருவாய் வட்டங்கள்உள்ளாட்சி நிர்வாகம்இம்மாவட்டம் 6 நகராட்சிகளையும், 8 பேரூராட்சிகளையும்[7], 7 ஊராட்சி ஒன்றியங்களையும் மற்றும் 288 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது.[8] நகராட்சிகள்பேரூராட்சிகள்ஊராட்சி ஒன்றியங்கள்
மக்கள் தொகைமதவாரியான கணக்கீடு (2011) இந்துக்கள் (90.01%) முஸ்லிம்கள் (7.25%) கிறித்தவர்கள் (2.48%) மற்றவை (0.01%) சமயமில்லாதவர்கள் (0.25%)
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, இராணிப்பேட்டை மாவட்டத்தின் மக்கள் தொகை 1,210,277 ஆகும். இராணிப்பேட்டை மாவட்டத்தில் 1000 ஆண்களுக்கு 1007 பெண்கள் என்ற பாலின விகிதம் உள்ளது. மக்கள் தொகையில் 39.97% பேர் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் முறையே மக்கள் தொகையில் 23.63% மற்றும் 0.9% ஆவர்.[9] இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக இந்துக்கள் உள்ளனர், மக்கள் தொகையில் 90% பேர் இவர்கள் உள்ளனர். இசுலாமியர்கள் சுமார் 7% பேரும், கிறிஸ்தவர்கள் 2% பேரும் உள்ளனர். பெரும்பான்மையான இசுலாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மாவட்டத்தின் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர்.[10] தமிழ் பெரும்பான்மையான மொழியாகும், இது 85.95% மக்களால் பேசப்படுகிறது. தெலுங்கு 6.75% மக்களாலும், உருது 6.01% மக்களாலும் பேசப்படுகிறது.[11] அரசியல்சட்டமன்றம்இம்மாவட்டம் அரக்கோணம், ஆற்காடு, இராணிப்பேட்டை மற்றும் சோளிங்கர் என 4 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ளது.
மக்களவைஇம்மாவட்டப் பகுதிகள் அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் உள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள், அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
தொழில்கள்இராணிப்பேட்டை, தென்னிந்தியாவின் ஒரு தொழில்துறை மையமாகும். தோல் மற்றும் தோல் பொருட்கள் காலணிகள், ஆடைகள் போன்றவற்றை ஏற்றுமதி செய்யப்படுகிறது பல பெரிய மற்றும் நடுத்தர தோல் தொழில்கள் உள்ளன. இராணிப்பேட்டையில் மற்ற சிறிய அளவிலான தொழில்கள் உள்ளன, அவை பெரும்பாலும் இரசாயன, தோல் மற்றும் கருவி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்தத் தொழில்களே நகரத்தின் முக்கிய தொழிலாக உள்ளது. வழிபாட்டுத் தலங்கள்லெட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில், சோளிங்கர் - இராணிப்பேட்டையில் இருந்து சுமார் 30 கி.மீ. தூரத்தில் உள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 65 வது திவ்ய தேசம் இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோகசனத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சிம்ஹ கோஷ்டாக்ருதி விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். மலைக்கோயிலின் நீளம் 200 அடி அகலம் 150 அடி ஏறத்தாழ் 1 ஏக்கர் பரப்பு 750 அடி உயரத்தில், சுமார் 1305 படிக்கட்டுகளோடு மலைமீது அமைந்துள்ளது. இங்கு பெரிய மலை, சிறிய மலை என இரண்டு மலைகள் உள்ளன. இரத்னகிரி பாலமுருகன் கோயில், வேலூரிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் திருமணிக்குன்றம் அருகே உள்ள ஒரு பழமையான முருகன் கோயில் ஆகும். இது 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோயில் மலை உச்சியில் அமைந்துள்ளது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia