குல்மார்க்34°03′N 74°23′E / 34.05°N 74.38°E
குல்மார்க் (Gulmarg) சம்மு காசுமீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் அமைந்துள்ள கோடைவாழிடம் ஆகும். அமைவிடம்இது ஸ்ரீநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 2,690 மீட்டர் உயரத்தில் இருக்கிறது.34°03′N 74°23′E / 34.05°N 74.38°E.[1] மக்கட்தொகை2001 மக்கட்தொகை[2] கணக்கெடுப்பின்படி இங்கு 664 பேர் வசிக்கின்றனர். கடுமையான பனிப்பொழிவின் காரணமாய் பெரும்பாலானோர் இரவில் வெளியேறிவிடுவர். சுற்றுலாப்பயணிகளும் அதைச் சார்ந்த தொழில் செய்பவர்களுமே இரவில் தங்குவதுண்டு. மக்களட்தொகையில் 99 % ஆண்கள் 1% பெண்கள். இந்தியாவின் தேசிய சராசரி கல்வியறிவான 59.5 5 விட இவர்களில் கல்வி அறிவு அதிகம். இவர்களின் கல்வியறிவு 96 %. ஆண்களின் கல்வியறிவு 97 % , பெண்கள் 22% கல்வியறிவு. இங்கு 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகள் எவரும் இல்லை. காலநிலைClimate
வரலாறுகுல்மார்க்கின் பழைய பெயர் கெளரிமார்க். இதற்குக் கடவுள் சிவனின் மனைவி என்று பொருள். குல்மார்க் அரசர்களின் கோடைவாசஸ்தலமாக இருந்தது. இங்கு மன்னர்கள் யுசூப் ஷா சாக் மற்றும் ஜகாங்கீர் ஆகியோர் கோடைக்காலங்களில் வந்து தங்கிச் செல்வர். மன்னர் யுசூப் ஷா சாக் கெளரிமார்க் என்ற பெயரை குல்மார்க் என்று மாற்றினார். குல்மார்க் எனில் பூக்களின் இடம் என்று பொருள். ஆங்கிலேயர்களின் கோடைவாசஸ்தலமாக இது விளங்கியது. இங்கு பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கும். மேலும் இது இந்திய-பாகிஸ்தானிய எல்லைக் கோட்டிற்கு அருகில் அமைந்துள்ளது. மேற்கோள்கள்
[[[பகுப்பு:பாரமுல்லா மாவட்டம்]] |
Portal di Ensiklopedia Dunia