ஜம்மு கோட்டம்
ஜம்மு கோட்டம் (Jammu, (டோக்ரி: जम्मू, உருது: جموں) இந்தியாவின் வடபகுதியில் இருக்கும் மாநிலமாகிய ஜம்மு மற்றும் காஷ்மீரின் மூன்று ஆட்சிப்பிரிவுகளில் ஒன்றாகும். இந்த ஜம்மு நகரை ஜம்மு மாநகராட்சி அமைப்பு நிருவாகம் செய்கிறது. ஜம்முவின் மிகப்பெரிய நகரமான ஜம்மு நகரம் ஜம்மு மற்றும் காஷ்மீரின் குளிர்காலத் தலைநகரமாகும். இங்கு வைஷ்ணவ தேவி ஆலயம் உள்ளது. ஜம்முவில் பெரும்பாலானோர் அதாவது ஏறத்தாழ 2.7 மில்லியன் மக்கள் இந்து மதத்தைப் பின்பற்றுகின்றனர்.[3] ஏனைய இஸ்லாம் மற்றும் சீக்கிய மதத்தைச் சார்ந்தவர்களும் இப்பகுதியின் பரம்பரைப் பண்பாட்டைப் பின்பற்றுவோராக உள்ளனர். புவியியல்![]() ஜம்முவின் எல்லைகளாக வடக்கில் காஷ்மீர், கிழக்கில் லடாக், தெற்கில் இமாசலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் உள்ளன. மேற்கு பகுதியில் இருக்கும் கட்டுப்பாட்டு கோடு ஜம்முவை பாகிஸ்தான்-காஷ்மீரிலிருந்து (ஆசாத் காஷ்மீர்) பிரிக்கிறது. ஜம்முவின் பெரும்பகுதி வடக்கில் காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் தெற்கில் டாமன் கோ சமவெளிகளுக்கும் நடுவே உள்ள சிவாலிக்க மலைத்தொடர்களில் இருக்கிறது. மேலும், இந்த பகுதியில் உள்ள பிர் பாஞ்சல் மலைத்தொடர்கள், திரிகூட குன்றுகள், இந்த மலைகளுக்கு கீழ் வரும் தாவி நதிப்படுகை ஜம்முவின் சிறப்பு அமைப்புகளாக உள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்குகளிலிருந்து ஜம்முவை பிர் பாஞ்சல் மலைத்தொடர்கள் பிரிக்கின்றன. ஜம்முவில் எட்டு புவியியல் உட்பகுதிகள் உள்ளன: ரவி-தாவி சமவெளிகள், சிவாலிக், பிர் பாஞ்சால் பகுதி, செனாப் பள்ளத்தாக்கு, பாதர்வா பள்ளத்தாக்கு, கன்டோ பள்ளத்தாக்கு, பாதர் பள்ளத்தாக்கு, வார்வான்-மார்வா பள்ளத்தாக்கு. ஜம்முவில் இருக்கும் மக்கள் 'டோக்ரா'க்கள் எனப்படுகின்றனர். அவர்கள் டோக்ரி மொழியைப் பேசுகின்றனர். ஜம்முவின் வரலாறு![]() ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் "ஜம்மு மாகாணம்", காஷ்மீர் பள்ளத்தாக்கின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதியிலுள்ள மலைப்பகுதிகளைக் கொண்டதாகும். முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தபோது]] முகலாய ஆட்சியின் கீழிருந்த 22 மலை மாநிலங்களைக் கொண்டு இப்பகுதி உருவானது. இம்மாநிலங்கள் "துகர் குழு" என அழைக்கப்பட்டது (Dugar[4] "துகர்" என்பது பழங்காலச் சொல்லான "துகாரா" மற்றும் தற்கால "டோக்ரா" என்ற இரண்டுக்குமான நடுக்கால வழக்குச் சொல்லாகும். துகாரா நாட்டுடன் அடையாளங்காணப்படும் துகாரா குழுவில், ஜம்மு மாநிலம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 11 ஆம் நூற்றாண்டின் சம்பா சமஸ்தானத்தின் தாமிர ஏடுகளில் "துகாரா" என்ற வார்த்தை காணப்படுகிறது. சம்பா சமஸ்தானத்தின் மீது துகாராவின் அரசன் படையெடுத்ததாக அத் தகடு தெரிவிக்கிறது. எனினும் இராஜதரங்கிணியில் அத்தகைய செய்தி எதுவும் குறிப்பிடப்படவில்லை. துகாரா என்பது "வல்லபுரம்" (இன்றைய பில்லாவார்) அல்லது "பாபபுரம்" (இன்றைய பாபோர்) என்வற்றைக் குறிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில அறிஞர்கள் துகாரா என்பது அப்பகுதியின் சமய அல்லது இனப் பெயராக இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்..[5][6][7][8] தைமூரின் காலவரலாற்றில் ஜம்மு என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 1398 இல் தைமூர் தில்லி மீது படையெடுத்துவந்தபோது ஜம்மு வழியாக சமர்கந்துக்குத் திரும்பினார். 16 ஆம் நூர்றாண்டின் துவக்ககாலத்தைய பாபுர் முகலாயக் காலவரலாற்றில், பஞ்சாப் மலைகளில் அமைந்த வலிமையான மாநிலமாக ஜம்மு குறிப்பிடப்பட்டுள்ளது. பேரரசர் அக்பர், அனைத்து மலை நாடுகளையும் முகலாய ஆட்சியின்கீழ் இணைத்திருந்தபோதும் அவற்றின் அரசர்கள் அரசியல் தன்னாட்சியைப் பெற்றிருந்தனர். ஜம்மு மட்டுமல்லாது, கிஷ்துவார் மற்றும் ரஜௌரியும் அவ்வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே முகலாயப் பேரரசில் இந்த மலை நாட்டு மாநிலங்களின் அரசர்கள் நேசத்துடன் இணைந்திருந்தனர் என்பதை அறியமுடிகிறது.[9] 18 ஆம் நூற்றாண்டில் முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் "ஜம்முவால்" குடும்பத்தைச் சேர்ந்த துருவ தேவ் என்ற அரசரின் ஆட்சியில், ஜம்மு மாநிலம் துகாரா மாநிலங்களுக்குள் முக்கியமானதாக விளங்கியது. துருவ தேவ் அரசருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ரஞ்சித் சிங் அரசனின் ஆட்சிகாலத்தில் ஜம்மு மாநிலம் உச்சமடைந்தது.[10][11] ரஞ்சித் தேவின் ஆட்சிக்குப் பின்னர் பஞ்சாப்பின் சீக்கியத் குழுத்தலைவர்கள் (சீக்கிய சிற்றரசுகள்) ஜம்முவை ஆளத் தொடங்கினர். அண்டை நாடுகளின் படையெடுப்புகளால் ஜம்மு அதன் வலிமையை இழந்தது.[12] 1808 இல், மகான் சிங்கின் மகனான இரஞ்சித் சிங்கால் ஜம்மு சீக்கியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது.[13] குலாப் சிங்கும் டோக்ரா வம்சமும்![]() ஜம்மு சீக்கியர்களின் கைவசமான பின்பு துருவ் தேவின் மூன்றாவது மகனின் வழித்தோன்றியக் குலாப் சிங், சீக்கியப்படையில் சேர்ந்தார். போர்களில் தனது திறமையைக் காட்டி விரைவிலேயே தனிப்படை அமைத்துக்கொள்ளும் அதிகாரம் கொண்ட சாகிர் பட்டத்தையும் அவர் பெற்றார். 1821 இல் கிஷ்துவார், ரஜௌரி ஆகியவற்றை வென்றபின்னர் 1822 இல் கீக்கியப் பேரரசர் ரஞ்சித் சிங்கால், ஜம்முவின் மரபுரிமை அரசராகப் பட்டம் சூட்டப்பட்டார்; குலாப்சிங்கின் சகோதரர் தயன் சிங்கிற்கு பழைய பூஞ்ச் மாவட்டமும் சிபால் மாவட்டமும், சுச்செத் சிங்கிற்கு உதம்பூரின் ராம்நகரும் அளிக்கப்பட்டன.[14][15] 1827 ஆண்டில் குலாப்சிங், காஷ்மீருக்கும் ஜம்முவுக்கும் இடைப்பட்ட அனைத்து மாகாணங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.[16] இவ்வாறாக சீக்கியப் பேரரசின் குடையின்கீழ் ஜம்மு மாநிலம் முழுமையும் ஜம்வால் சகோதரர்கள் மூவரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. 1839 இல் பேரரசர் ரஞ்சித் சிங்கின் இறப்புக்குப் பின்னர் சீக்கியப் பேரரசு, அரண்மனைக் கிளர்ச்சியாளகளால் சீர்குலைந்தது. குலாப்சிங்கின் சகோதரர்கள் தயான் சிங், சுச்செத் சிங் மற்றும் அவரது உறவினர் ஹீரா சிங் ஆகியோர் நடந்த போரட்டங்களில் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் சீக்கிய அரசுக்கும் குலாப் சிங்கிற்கும் இடையே இருந்த தொடர்பு நலிவடைந்தது.[17][18] During the முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போரின் போது (1845–1846) குலாப் சிங் யாருடனும் இணையாமல் தனித்து நின்றார். அவர் லாகூருக்கு வரவழைக்கப்பட்டு சீக்கிய அரசின் தலைமை அமைச்சராக்கப்பட்டார். ஆனால் தலைமையச்சராக அவர் மேற்கொண்ட பணிகள் சீக்கியர்களின் தோல்விக்குக் காரணமாய் அமைந்தன.[19] ஆங்கிலேயர்கள் சீக்கியகர்களை வலுவிழக்கச் செய்து அதற்குப் பதிலாகக் குலாப்சிங்கை ஈடுசெய்ய தீர்மானித்தனர். ராவி ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட அனைத்து மலைப்பகுதிகளையும் தரவேண்டுமென சீக்கியர்களிடம் போர் உடன்படிக்கை செய்துகொண்டு அப்பகுதிக்கு குலாப் சிங்கை சுதந்திரமான அரசராக்கினர். அதற்கீடாக குலாப் சிங் ஆங்கிலேயர்களுக்கு. 7.5 மில்லியன் நானாக்ஷாகீ ரூபாய்கள் கொடுத்தார்.[20]. இவ்வாறாக ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தோன்றி டோக்ரா வம்சம் என அழைக்கப்பட்ட குலாப் சிங் மற்றும் அவரது வாரிசுகளால் ஆளப்பட்டது. டோக்ரா ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும், ஜம்மு மாநிலத்திலுள்ள ஜம்மு ஆறுமாதங்களுக்குத் தலைநகராகவும் காஷ்மீரிலிலுள்ள ஸ்ரீநகர் ஆறுமாதங்களுக்குத் தலைநகராவும் இருந்தன. தயான் சிங்கின் மகன்கள் ஜவகர் சிங் மற்றும் மோதி சிங் இருவருக்கும் பூஞ்ச்சும் சிபாலும் சாகிர்க்களாக ஆளும் உரிமை அளிக்கப்பட்டது. ஆனால் ஜவகர் சிங் சதிவேலைகளில் ஈடுபட்டதால் பஞ்சாபிற்கு வெளியேற்றப்பட்டார். அதால் சிபால் மீண்டும் குலாப் சிங்கின் கைவசமானது; பூஞ்ச் மோதி சிங் மற்றும் அவனது வாரிசுகளால் ஜம்மு மற்றும் காஷ்மீர் இராச்சியத்தின்கீழ் கட்டுப்பட்டு ஆளப்பட்டது. பிரிவினையும் வாரிசுயேற்பும்![]() இந்தியப் பிரிவினையின்போது ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை அரசர் ஹரி சிங் ஆண்டுகொண்டிருந்தார். அவருக்கும் இதர மாநில அரசர்களுக்கும் அவர்கள் யாருடன் இணைய விருப்பபடுகிறார்களோ (மக்களின் விருப்பம் மற்றும் புவியியல் அமைப்புக் காரணிகளைக் கொண்டு) அவர்களோடு இணைந்து கொள்ளலாம் என்ற வாய்ப்பளிக்கப்பட்டது. ஹரிசிங் அவரது இராச்சியத்தில் வாழும் மக்களின் சமயப் பன்முகத்தைக் கருத்தில்கொண்டு இறுதிநாள்வரை ஒரு முடிவையும் தெரிவிக்காமல் இருந்தார். ஆனால் இந்த நடுநிலைமை சுதந்திரத்தை அவரால் அதிகநாள் பேண்முடியவில்லை. 1947 இல் பூஞ்ச்சின் புரட்சியும் 1947 ஆம் ஆண்டில் அக்டோபர் 26, 27 இல் பாகிஸ்தான் தூண்டலால் விளைந்த பஷ்தூண் பழங்குடி படையெடுப்பும் அவரை இந்தியாவுடன் இணைவு ஒப்பந்தம் மேற்கொள்ளக் காரணமாய் அமைந்தன. ஆனால் முசாபராபாத், பூஞ்ச், மிர்ப்பூர் மாவட்டங்களின் பெரும்பான்மையான மேற்குப்பகுதிகள் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. இராச்சியத்தின் மீதமுள்ள பகுதிகள் இந்திய அரசியலமைப்பின்படி இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 -இன் கீழ் தன்னாட்சி பெற்றது. மக்கள் தொகைஜம்முவின் சமயங்கள் (2011)[21] இந்து சமயம் (63.9%) இசுலாம் (33.50%) சீக்கியம் (2%) கிறிஸ்தவம் (0.3%) Others (0.2%) Not Stated (0.1%)
2011 கணக்கெடுப்பின்படி ஜம்முவின் மக்கட்தொகை 5,350,811.[23] மொத்த மக்கட்தொகையில் அட்டவணை சாதியினர் (தலித்துகள்) 19.44%[24] பழங்குடியினர் 15-20%. பத்தில் ஐந்து மாவட்டங்களில் (பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில்) பெரும்பான்மையாக இசுலாமியரும் தென்மேற்கிலுள்ள சமவெளிப்பகுதிகளில் இந்துக்களும் வசிக்கின்றனர். கால்நடைகள் வளர்க்கும் குஜ்ஜர்-பக்கர்வால், காடி-சிப்பிகளும் தேவைப்படும்போது இங்கு காணப்படுகின்றனர்.[25][26] ஜம்முவில் வாழும் மிகப்பெரிய இனக்குழு டோக்ராக்களாகும். அவர்கள் ஜம்முவின் மொத்த மக்கட்தொகையில் தோராயமாக 47% ஆவர்.[27][28] ஜம்முவில் வாழும் மக்கள் பஞ்சாபி மக்களோடு நெருங்கிய தொடர்புடையவர்களாக உள்ளனர்.[29] ![]() ஜம்மு மாநிலத்தின் மக்கட்தொகையில் – 84% இந்துக்கள்; 7% இசுலாமியர்; மீதமுள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் சீக்கியர்.[23] சம்மு (நகர்), கதுவா, சம்பா, உதம்பூர் மாவட்டங்களில் பெரும்பான்மையினராகவும் ரியாசி மாவட்டத்தில் கிட்டத்தட்ட பாதியுமாக இந்துக்கள் ஜம்முவில் உள்ளனர்.[23] ஜம்முவின் பெரும்பான்மை இந்துக்கள் டோக்ரிக்கள், காஷ்மீர பண்டிதர்கள், புலம்பெயர்ந்த பஞ்சாபி இந்துக்கள் மற்றும் தற்சமயம் பாக்கிஸ்தானிடமுள்ள கோட்லி, ஆசாத் காஷ்மீரின் மிர்பூரிலிருந்து அகதிகளாக வந்தவர்களாவர். பெரும்பான்மை சீக்கியர்கள், முசாஃபராபாத் மற்றும் பூஞ்ச் பகுதியிலிருந்து புலம்பெயர்ந்தவர்களாவர். ஜம்மு, உதம்பூர், கதுவா, சம்பா, ரீசி ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையான மக்கள் "தோக்ரி மொழி பேசுகின்றனர்."[30] ஜம்மு கோட்டத்தில் பேசப்படும் இதர மொழிகள்: கோசிரி மொழி, பகாரி-போத்துவாரி, காஷ்மீரி மொழி, இந்தி, பஞ்சாபி, உருது.[30]
ஜம்முப் பகுதியின் இந்துக்கள் பல்வேறு சாதியினராக உள்ளனர். அவர்களுள் பிராமணர்களும் ராஜபுத்திரர்களும் முக்கியமானவர்களாவர். 1941 கணக்கெடுப்பின்படி, பிராமணர் 30%; இராஜபுத்திரர் 27%; தாக்கூர் 15%; 4% ஜாட் இன மக்கள்; 8% கத்ரி இனத்தவர்.[31]. மேலும் 8% மேக் மற்றும் சாமர் இனத்தவரும் உள்ளனர்.[32] ஜம்முவின் மக்கட்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 32% ஆவர்.[33] மாவட்டங்கள்![]() ஜம்மு பிரிவில் பத்து மாவட்டங்கள் உள்ளன:
ஏப்ரல் 2021 வரையான தகவல்கள்:
இந்திய விடுதலைக்கும் பிரிவினைக்கும் முன்னதாக அரசர்கள் ஆண்ட காலத்தில் பின்வரும் மாவட்டங்களும் ஜம்முவில் இருந்தன: பீம்பர், கோட்லி, மிர்பூர், பூஞ்ச் (மேற்குப் பகுதிகள்), அவேலி, பாகு, சுதானோட்டி மாவட்டம். இப்போது இம்மாவட்டங்கள் Today these districts are part of பாகிஸ்தான் ஆட்சிக்குட்டப்பட்ட பகுதியில் உள்ளன. காணக்கூடிய இடங்கள்![]() ![]() ![]() ![]() ![]() ஜம்மு அழகிய சமவெளிகளுக்கும், பழமை வாய்ந்த கோவில்களுக்கும், இந்து புண்ணிய சேத்திரங்களுக்கும், அரண்மனைகளுக்கும், பூங்காக்களுக்கும், கோட்டைகளுக்கும் பெயர்பெற்றது. இந்து சமயப் புனிதத் தலங்களான அமர்நாத் மற்றும் வைஷ்ணோ தேவி கோவில் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். ஜம்முவில் அழகிய இயற்கை வளங்கள் உள்ளதால், தெற்காசியாவின் எதிர்பாராத அழகை கொண்டுள்ள மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[46][46] ஜம்முவின் வரலாற்று நினைவுச் சின்னங்கள், இசுலாமிய மற்றும் இந்துக் கட்டிட கலைப்பாடுகளின் கலவையாகும். ஜம்முவில் காணக்கூடிய இடங்கள்:
ஜம்முவின் பண்டிகைகள்லோரி (13 ஜனவரி)இந்தப் பண்டிகை வசந்த காலத்தின் வருகையை தெரிவிப்பதாகும், மேலும் மகர சங்கராந்திக்கு முதல்நாளன்று கொண்டாடப்படுகிறது இந்நாளில் எல்லா இடங்களும் கோலாகாலமாக காட்சியளிக்கும். ஹவன் யக்னாஸ், என்ற புனித ஆற்றில் ஆயிரகணக்கான மக்கள் புனித நீராடி, மேலும் ஒவ்வொரு வீடு மற்றும் கோவில்களிலும் மெழுகுவர்த்திகள் ஏற்றிவைத்து இறைவனை வழிபடுவார்கள். கிராமப்புறங்களில், சிறுவர்கள் புதிதாக மணம் புரிந்தவர்கள் மற்றும் புதிதாக குழந்தை பெற்ற பெற்றோர்களிடம் இருந்தும் பரிசுப்பொருட்களை கேட்டு பெற்றுக் கொள்கின்றனர். சிறப்பான "சஜ்ஜா" என்ற நடன நிகழ்ச்சி லோரி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பிரபலமானது. சிறுவர்கள் வண்ண காகிதங்களாலும் பூக்களாலும் அலங்கரித்த தங்களது 'சஜ்ஜாக்களை' (மயில்) கொண்டு தெருக்களில் ஊர்வலமாய் வந்து ஆடுகின்றனர். மேள தாளத்துடன் ஜம்முவே விழிப்புடன் காணப்படும். பைசாகி (ஏப்ரல் 13 அல்லது 14)விக்ரம நாட்காட்டியின் முதல் மாதமான பைசாக (வைசாகம்) மாதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பெயர் அமைந்தது. ஒவ்வொரு ஆண்டும், பைசாக மாதத்தின் முதல் நாளன்று, இந்த பைசாகி பண்டிகையைக் ஜம்மு மக்கள் கொண்டாடுவார்கள். இந்தப் பண்டிகையை "அறுவடைப் பண்டிகை" அல்லது "அறுவடைத் திருநாள்" என்றும் கூறுவார்கள், மேலும் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளை நடத்த இது ஒரு மங்களகரமான நாளாகும். ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் ஆறுகள், குளங்கள் அல்லது நீரோடைகளில் புனித ஸ்நானம் மேற்கொண்டு, தண்ணீருக்குள் மூழ்கி எழுவதை வழக்கமாக காணலாம். இந்த நன்னாளைக் கொண்டாட சந்தைகளில் பல இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் காட்சிப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப் பெறும் மேலும் அவற்றில் பங்கேற்று கண்டு களிக்க மக்கள் திரள் திரளாக உற்சாகத்துடன் வருகை புரிவார்கள், குறிப்பாக பஞ்சாப் நாட்டின் பாங்க்ரா நடனத்தைக் கண்டு களிக்க மக்கள் மிகவும் ஆர்வமாக காணப்படுவார்கள். சீக்கியர்களின் பத்தாவது குருவான குரு கோபிந்த் சிங் பைசாகி நாளன்று கால்சா பிரிவை, 1699 ஆம் ஆண்டு உருவாக்கியதாக நம்புகின்றனர். பஜனைகளை கேட்கவும், மந்திரங்களை ஜபிக்கவும், பொது சமையல் அறையில் இருந்து ("லங்கார்") பிரசாதத்தை பெறவும், மக்கள் குருத்வாரங்களில் கூடுகின்றனர். பஹு மேளா (மார்ச்-ஏப்ரல் மற்றும் செப்டம்பர்-அக்டோபர்)பஹு கோட்டையில் உள்ள காளி கோவிலில் ஆண்டுக்கு இருமுறை இந்த பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். சைத்ரே செளதாஷ் (மார்ச்-ஏப்ரல்)உத்தர் பேணி (ஜம்முவில் இருந்து 25 கி.மீ.) மற்றும் புர்மண்டல் (ஜம்முவில் இருந்து 28 கி.மீ) ஆகிய இடங்களில் சைத்ரே செளதாஷ் என்ற பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இங்கு வடக்கு திசையை நோக்கி தேவக் நதி ஓடுவதால் இந்த இடம் உத்தர் பேணி என்ற பெயரைப்பெற்றது. (இங்கு இருப்பவர்கள் இந்த நதியை குப்த கங்கா என்று அழைக்கின்றனர்) புர்மண்டல் மேளா (பிப்ரவரி -மார்ச்)ஜம்மு நகரில் இருந்து 39 கி.மீ. தொலைவில் புர்மண்டல் உள்ளது. சிவராத்திரி அன்று சிவன் மற்றும் பார்வதி யின் திருமணத்தை கொண்டாட மக்கள் மூன்று நாளைக்கு ஒன்று கூடுகின்றனர். மேலும் சிவராத்திரி அன்று, கோ குகை ஆலயம், ரன்பிறேஷ்வர் ஆலயம் மற்றும் பஞ்சபக்தர் ஆலயத்திலும் மக்கள் ஒன்று சேருகின்றனர். சிவராத்திரி தினம் ஜம்முவிற்கு சென்றால் எல்லா இடங்களிலும் நாம் கொண்டாட்டங்களைக் காணலாம். ஜிரி மேளா (அக்டோபர்-நவம்பர்)உள்ளூர் ஜமீன்தாரின் நியாயமற்ற ஆணைகளுக்குப் பணியாமல், தனது உழைப்பால் விளைந்த பயிரை ஜமீந்தாருக்கு வழங்க மறுத்து, மேலும் அதற்காக தன் உயிரை மாய்த்துக்கொண்ட, பாபா ஜித்து என்ற எளிய, நேர்மையான விவசாயியின் நினைவில் ஒரு பண்டிகையை ஆண்டு தோறும் இவ்விடத்து மக்கள் கொண்டாடுகின்றனர். ஜம்முவில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கும் ஜிரி என்ற கிராமத்தில் ஜித்து தன்னை மாய்த்துக்கொண்டார். பாபாவை மக்கள் கடவுளின் அம்சமாக நினைப்பதால், வட இந்தியா சார்ந்த மக்கள் ஆண்டுதோறும் குறித்த நாளன்று ஜிரி கிராமத்துக்கு வந்து இந்த பண்டிகையை பாபாவின் நினைவில் அவரது நேர்மையையும், தைரியத்தையும் பாராட்டி கொண்டாடுகிறார்கள். நவராத்திரி பண்டிகை (செப்டம்பர்-அக்டோபர்)வருடம் முழுவதும் வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு புனித யாத்திரை யை மேற்கொண்டாலும், நவராத்திரி என்னும் ஒன்பது இரவுகளில் யாத்திரையை மேற்கொள்வது மிகவும் மங்களகரமானதாக நினைக்கிறார்கள். இந்த சமயத்தில் இப்பகுதியின் கலாசாரம், மரபு மற்றும் பாரம்பரிய வழிமுறைகளை மற்றவர்களுக்கு பகர்ந்திட மாநில சுற்றுலா அமைச்சரவை நவராத்திரி பண்டிகையை ஆண்டுதோறும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாட செப்டம்பர்/அக்டோபர் மாதங்களில் ஏற்பாடு செய்துள்ளது. இங்கு வரும் பலரும் இந்த சமயத்தில் தங்கள் வழிபாடுகளை மேற்கொள்கின்றனர். இந்த பண்டிகை மூலம் மத சார்பான மரபுகளும், வழி வழியாக வரும் கலாச்சாரமும் எல்லா பக்தர்களுக்கும் புலப்படுகிறது. பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வைஷ்ணவ தேவி ஆலயத்திற்கு, நவராத்திரி சமயத்தில் புனித யாத்திரை புரிந்து அன்னையின் அருளாசி பெறுகின்றனர். உர்ஸ் (வருடம் முழுவதும்)உர்ஸ் (அல்லது சியாரட்ஸ்) ஒரு காஷ்மீரி பண்டிகை ஆகும். இஸ்லாமிய துறவியர்களின் புண்ணியத்தலங்களில் ஆண்டு தோறும் அவர்கள் இறந்த நாளை ஒரு நினைவு நாளாகக் கொண்டாடுகிறார்கள். "மீஸா சாஹிப் அவர்களின் உர்ஸ் கொண்டாடும் பொழுது, பனி மழை பொழியும், பதமோல் சாஹிப் அவர்களின் உர்ஸ் கொண்டாடும் பொழுது காற்றடிக்கும், பஹாவுத்தின் உர்ஸ் கொண்டாடும் பொழுது மழை பெய்யும்" என்று பொதுவாக பழமொழி கூறுவதுண்டு. வானிலை மோசமாக இருந்தாலும், உர்ஸ் பண்டிகை கொண்டாடுவதை மக்கள் தவிர்க்க மாட்டார்கள். கல்வி
இதனையும் காண்ககுறிப்புதவிகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia