எகிப்தின் பதினொன்றாம் வம்சம்
எகிப்தின் பதினொன்றாம் வம்சம் (Eleventh Dynasty Egypt- Dynasty XI) (ஆட்சிக் காலம்:கிமு 2130 -கிமு 1991) எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தில் (கிமு 2181 - கிமு 2055) பண்டைய எகிப்தை ஆண்ட நான்கு அரச வம்சங்களில் ஒன்றாகும். எகிப்தின் முதல் இடைநிலைக் காலத்தின் இறுதியில் துவங்கிய இந்த வம்சம், எகிப்தின் மத்தியகால இராச்சியத்திலும் விளங்கியது. இவ்வம்சத்தினர் எகிப்தை கிமு 2130 முதல் கிமு 1991 முடிய 139 ஆண்டுகள் ஆண்டது. இந்த வம்ச பார்வோன்களில் புகழ் பெற்றவர் இரண்டாம் மெண்டுகொதேப் ஆவார். இவர் எகிப்திற்கு தெற்கில் உள்ள பண்டு மற்றும் பண்டைய அண்மை கிழக்கின் போனீசியா நாடுகளை வென்று எகிப்துடன் இணைத்தவர். இவ்வமசத்தவர்களின் தலைநகரம் தீபை நகரம் ஆகும். ![]() பார்வோன் வாகாந்த் காலத்திய கல்வெட்டில் பார்வோன் இரண்டாம் இன்டெப், பத்தாம் வம்ச மன்னர்களையும், அவர்களது தலைநகரம் ஹெராக்கிலியோபோலிஸ் மக்னா, சக்காரா மற்றும் அபிதோஸ் நகரங்களை வென்றார் எனக்க்குறித்துள்ளது. பதினொன்றாம் வம்ச ஆட்சியாளர்கள்
பண்டைய எகிப்திய வம்சங்கள்பண்டைய எகிப்தின் வரலாற்றுக் கால வரிசை
மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia