இரண்டாம் இன்டெப்
இரண்டாம் இன்டெப் (Wahankh Intef II (also Inyotef II and Antef II) எகிப்தின் மத்தியகால இராச்சியத்தை ஆண்ட 11-ஆம் வம்சத்தின் மூன்றாம் மன்னர் ஆவார். இவர் பண்டைய எகிப்தை கிமு 2112 முதல் கிமு 2063 முடிய 50 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.[2] இவரது தலைநகரம் தீபை நகரம் ஆகும். இவரது ஆட்சிக் காலத்தில் எகிப்தில் பல உள்ளூர் வம்சங்களின் குறுநில மன்னர்கள் ஆண்டனர். இவரது கல்லறை பிரமிடு எல்-தாரிப் எனுமிடத்தில் உள்ளது.[3] பார்வோன் முதலாம் மெண்டுகொதேப்-அரசி முதலாம் நெபெருவிற்குப் பிறந்தவர் இரண்டாம் இன்டெப். இவருக்கு முன்னர் எகிப்தை ஆண்ட முதலாம் இன்டெப் இவரது உடன்பிறந்தவர் ஆவார். இவருக்குப் பின் எகிப்தை ஆண்டது இவரது மகன் மூன்றாம் இன்டெப் ஆவார். ![]() கர்னாக் கோயில் தூணில் இரண்டாம் இன்டெப்பின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் எலிபென்டைன் தீவில் இரண்டாம் இன்டெப் எகிப்தியக் கடவுள்களுக்கு கோயில்களை நிறுவினார்.[4]தெற்கு எகிப்தில் இரண்டாம் இன்டெப் அரச குடும்பத்தினர்களுக்கான அரண்மனைகளும், கோயில்களும் கட்டும் வழக்கம், பழைய எகிப்து இராச்சியம் வரையில் தொடர்ந்தது. இதனையும் காண்கமேற்கோள்கள்
மேலும் படிக்க
|
Portal di Ensiklopedia Dunia