கர்ணாலி பிரதேசம்
![]() கர்ணாலி பிரதேசம் (Karnali Pradesh) (நேபாளி: कर्णाली प्रदेश) (முன்னாள் பெயர்:மாநில எண் 6), 2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 20 செப்டம்பர் 2015ல் நிறுவப்பட்ட நேபாளத்தின் ஏழு மாநிலங்களில் ஒன்றாகும். [1]30,301 சதுர கிலோ மீட்டர் பரப்புளவு கொண்ட இம்மாநிலத்தின், 2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள்தொகை 1,701,800 ஆகும். (1 சனவரி 2016ல்).[2] இம்மாநிலம் 10 மாவட்டங்களைக் கொண்டது. நேபாளத்தின் வடமேற்கில் அமைந்த கர்ணாலி பிரதேச மாநிலத்தின் முன்னாள் பெயர் மாநில எண் 6 ஆகும். பிப்ரவரி, 2018ல் பதவியேற்ற இம்மாநில சட்டமன்றத் தீர்மானத்தின் படி, இம்மாநிலத்தின் பெயர் கர்ணாலி பிரதேசம் பெயரிப்பட்டது.[3]சனவரி, 2018ல் விரேந்திரநகர் இம்மாநிலத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.[4] கர்ணாலி பிரதேசத்தின் மாவட்டங்கள்கர்ணாலி பிரதேச்ம் 30,301 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 17,01,800 மக்கள் தொகையும், பத்து மாவட்டங்களையும் கொண்டுள்ளது. அவைகள்:
அரசியல்இம்மாநில சட்டமன்றம் 40 உறுப்பினர்கள் கொண்டது. அதில் 24 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும், 16 உறுப்பினர்கள் விகிசாத்சாரத் தேர்தல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் நேபாள தேசிய சபைக்கு 8 உறுப்பினர்களையும் மற்றும் நேபாள பிரதிநிதிகள் சபைக்கு 12 உறுப்பினர்களையும் இம்மாநிலத்திலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்புகின்றனர். கர்ணாலி மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியத்தின் கூட்டணி கட்சியான மாவோயிஸ்ட் கட்சியின் மகேந்திர பகதூர் சாகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார.[5] நேபாளி காங்கிரஸ் கட்சி முக்கிய எதிர்கட்சியாக உள்ளது. 2017 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்
சுற்றுலாத் தலங்கள்
2023 நிலநடுக்கம்இப்பிரதேசத்தில் 9 நவம்பர் 2023 நள்ளிரவில் 6.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஜாஜர்கோட் மாவட்டம் மற்றும் மேற்கு ருக்கும் மாவட்டத்தில் வீடுகள் இடிந்து 150 மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர்.[6][7][8] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia