திவ்வியவதனம்திவ்வியவதனம் அல்லது தெய்வீக வரலாறுகள் (Divyāvadāna or "Divine narratives") சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்டது. இக்கதைகள் பண்டைய மூலசர்வாஸ்திவாத பௌத்த சாத்திரமாக வினய சாத்திரங்களில் காணப்படுகிறது.[1] இந்நூலின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என அறியப்படுகிறது.[2] [3] ஒரு தனி மனிதனின் முந்தைய பிறவிகளின் கர்மவினைகள், தற்போதைய பிறவியில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை, கௌதம புத்தர் தனது சீடர்களுக்கு எடுத்துரைப்பது போன்று, இந்நூலின் கதைகள் அமைந்துள்ளன.[3] நூலின் உள்ளடக்கம்திவ்வியவதனம் எனும் சமசுகிருத மொழி நூல், புகழ் பெற்ற அசோகவதனம் கதை, அசோகரின் வரலாற்று கதை உட்பட, மொத்தம் முப்பத்தி எட்டு கதைகள் கொண்டது. இந்நூலை ஜான் ஸ்டிராங் என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஏட்டுச் சுவடிகளில் சமசுகிருத மொழியில் இருந்த திவ்வியவதனம் எனும் நூலை, எட்வர்டு பைல்ஸ் கோவெல் மற்றும் ஆர்.ஏ. நீல் என்பவர்கள், 1886ல் சமசுகிருத மொழியில் அச்சு வடிவில் நூலாக வெளியிட்டனர்.[4] இந்த சமசுகிருத அச்சு நூலை, பி. எல். வைத்தியா என்பவர் 1959ல் திருத்திய பதிப்பாக வெளியிட்டார்.[5] இந்நூலின் சகசோதக அவதானக் கதையின் துவக்கத்தில், பவச்சக்கரம் எனும் தரும நெறிகளுடன் ஒரு மனிதன் வாழ வேண்டிய முறையை கௌதம புத்தர் விளக்குகிறார். [6] இந்நூலின் ருத்திராயன அவதானக் கதையில் (Rudrāyaṇa-avadāna), மன்னர் ருத்திராயானருக்கு, கௌதம புத்தர் பவச்சக்கரத்தின் பெருமையை விளக்குகிறார். மேலும் இக்கதையில் மன்னர் ருத்திராயானர், மகதப் பேரரசர் பிம்பிசாரருக்கு, நவமணிகளுடன் கூடிய, இடுப்புக் கயிற்றை பரிசாக அளித்தான். கைம்மாறாக தான் எதை மன்னர் ருத்திராயனருக்கு பரிசளிப்பது என பிந்துசாரர் ஆழ்ந்து சிந்திக்கும் போது, கௌதம புத்தரை அடைந்து உபதேசம் கேட்கையில், பவச்சக்கரம் ஓவியத்தை வரைந்து, அதனை மன்னர் ருத்திராயனருக்கு பரிசளிக்குமாறு கூறினார். பிம்பிசாரரும் அவ்வாறே பவச்சக்கரத்தை ஓவியமாக வரைந்து மன்னர் ருத்திராயனருக்கு பரிசாக அனுப்பினார். பவச்சக்கரம் அறிவுறுத்தும் வாழ்க்கை நெறிகளை அறிந்த மன்னர் ருத்திராயனர், வாழ்க்கையின் உயர்ந்த நோக்கத்தை அறிந்து அதன் படி, தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டான். [7] திவ்வியவதனக் கதைகள்
குறிப்பிடத்தக்க ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia