உருக்குன் நெகாரா
உருக்குன் நெகாரா (மலாய்: Rukun Negara; ஆங்கிலம்: Rukun Negara); என்பது மலேசியத் தேசியத் தத்துவத்தின் பிரகடனம் ஆகும். இந்தப் பிரகடனம் ஐந்து கோட்பாடுகளைக் கொண்டது. 1969-ஆம் ஆண்டு நடைபெற்ற 13 மே சம்பவம் என அழைக்கப்படும் இனக் கலவரத்திற்கு எதிர்வினையாக, 1970-ஆம் ஆண்டு மெர்டேகா தினத்தில் அந்தப் பிரகடனம் அறிமுகம் செய்யப்பட்டது. மலேசிய இன சமநிலையின் உறுதித் தன்மை பலவீனமாக இருந்தது என்பதை அந்தச் சம்பவம் நிரூபித்துக் காட்டியது.[1] மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையில் ஒற்றுமையும் புரிந்துணர்வும் வலுப்பெற வேண்டும்; நல்லிணக்கம் உறுதி செய்யப்பட வேண்டும்; அவையே உருக்குன் நெகாராவின் தலையாய நோக்கங்களாகும். உருக்குன் நெகாரா உருவாக்கம்நாட்டின் 2-ஆவது பிரதமரான அப்துல் ரசாக் உசேன் அவர்களின் எண்ணத்தில் உருக்குன் நெகாரா உருவானது. அப்போது அவர் தேசிய ஆலோசனைக் குழுவின் (மலாய்: Majlis Perundingan Negara; ஆங்கிலம்: National Consultative Council); தலைவராக இருந்தார். அதன் பிறகு, 1971-ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக் கொள்கை (New Economic Policy 1971-1990) தொடங்கப்பட்டது. சமூகங்களுக்கு இடையில் சமத்துவம்மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்குவது; மலேசியாவின் சீனர் சமூகம், இந்தியர்ச் சமூகம் ஆகிய இரு சமூகங்களுக்கும்; மலாய் பூமிபுத்ரா சமூகத்திற்கும் இடையே நிலவிய பொருளாதார இடைவெளியைக் குறைப்பது; பொருளாதாரச் சமத்துவத்தை உருவாக்குவதே அந்தப் புதிய பொருளாதாரக் கொள்கையின் நோக்கமாகும். மலேசியாவின் உருக்குன் நெகாரா கோட்பாடு, அண்டை நாடான இந்தோனேசியாவின் பஞ்ச சீலா (Pancasila) தேசிய சித்தாந்தத்துடன் ஒத்து உள்ளது.[2] உருக்குன் நெகாரா கோட்பாடுகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia