வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை
வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை (Vadamarachchi South West Divisional Council) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் வடக்கில் வல்வெட்டித்துறை நகரசபை, பருத்தித்துறை பிரதேச சபை என்பனவும்; கிழக்கில் பருத்தித்துறை பிரதேச சபையும்; தெற்கில் சாவகச்சேரி பிரதேச சபையும்; மேற்கில் பருத்தித்துறை பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகரசபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை என்பனவும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு 19 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 32 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] வட்டாரங்கள்26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் ஆளுகைப் பிரதேசம் 19 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் கீழ் வடமராட்சி தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைகள் உள்ளடங்குகின்றன.[3]
தேர்தல் முடிவுகள்1998 உள்ளூராட்சித் தேர்தல்29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4][5]
2011 உள்ளூராட்சித் தேர்தல்22 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 19 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 12 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 31 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]
2018 தேர்தலில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தலைவராக தங்கவேலாயுதம் ஐங்கரன் (வதிரி, இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக கந்தர் பொன்னையா (உச்சில் கப்புது, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[3] 2025 உள்ளாட்சித் தேர்தல்2025 மே 6 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8] 19 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 13 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 32 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபையின் தலைவராக குமாரசாமி சுரேந்திரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக தியாகராசா தயாபரன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[9] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia