உலகக்கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தகுதியில் ஒவ்வொன்றும் 50 பந்துப் பரிமாற்றங்களுடன் நடைபெற்றன. இப்போட்டியில் 10 தேர்வுத் துடுப்பாட்ட அணிகளும், தேர்வுத் தகுதி பெறாத 4 அணிகளுமாக மொத்தம் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் பங்குபற்றிய 49 போட்டிகள் நடைபெற்றன. 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை குறைவாக பங்குபற்றின. மொத்தப் போட்டிகள் 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட இரண்டு குறைவானதாகும்.
இந்த உலகக்கிண்ணப் போட்டிகளை பாக்கித்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில்இலங்கைத் துடுப்பாட்ட அணியினர் சுடப்பட்ட நிகழ்வை அடுத்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை பாக்கித்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது.[2] லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது.[3] பாக்கித்தான் 14 ஆட்டங்களை, ஓர் அரையிறுதி உட்பட, நடத்துவதாக இருந்தது.[4] அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காள தேசத்திற்கும் பிரித்துத் தரப்பட்டன..[5]
போட்டித்தொடர் வகை
இந்தப் போட்டியில் 14 அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெற உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.
காலிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: டாக்கா, அகமதாபாத், கொழும்பு
அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும் இடங்கள்: மொகாலி, கொழும்பு
இறுதிப் போட்டி நடைபெறும் இடம்: மும்பை
தகுதி
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கொள்கைக்கேற்ப முழு அங்கத்துவ நாடுகள் பத்தும், தென்னாபிரிக்காவில் நடைபெற்ற தகுதிகாண் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அயர்லாந்து, கனடா, நெதர்லாந்து மற்று கென்யாவும் இவ்வுலகக்கிண்ணப் போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றன.
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் கொள்கைக்கேற்ப இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தில் உலகக்கிண்ணப் போட்டிகள் நடத்தப்படுவது இது மூன்றாவது தடவையாகும். பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த போட்டிகள், போட்டிகளை நடத்தும் மற்றைய நாடுகளுக்கு மாற்றப்பட்டன.
இடங்கள்
மொத்தம் பதின்மூன்று இடங்கள் உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.
ப. து. அ. வின் நடுவர்களைத் தெரிவு செய்யும் குழு 18 நடுவர்களைப் போட்டிகளில் பணியாற்றத் தெரிவு செய்துள்ளது. இவர்களை விட மேலதிக நடுவராக இனாமுல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளார்.
2011 உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி 3 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பரிசாகப் பெறும். இப்போட்டித் தொடருக்கான மொத்தப் பரிசுத்தொகையாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை ப. து. அ ஒதுக்கியுள்ளது.
குறியீடுகள்
நற்பேறு சின்னம்
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான இசுடம்பி எனப்படும் நற்பேறு சின்னம்
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்திற்கான அலுவல்முறை நற்பேறுச் சின்னமாக இசுடம்பி[6] தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2 ஏப்ரல், 2010 அன்று இலங்கை, கொழும்பில் ஓர் விழாவில் இச்சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இளமையுடனும் உற்சாகத்துடனும் மன உறுதியுடனும் இருக்கும் ஓர் பத்து அகவையுள்ள ஆண் களிறாக உருவகப்படுத்தப்பட்டுள்ளான். இதற்கு பெயர் சூட்ட உலகளவில் துடுப்பாட்ட ஆர்வலர்களிடையே ஓர் போட்டி நடத்தப்பட்டது.[7] இதன் முடிவில் ஆகத்து 2, 2010 அன்று இசுடம்பி என்ற பெயர் அலுவல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[8]
2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டியின் அதிகாரப்பூர்வ பாடல்
இக்கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.
2011 உலகக்கிண்ணத்திற்கான அலுவல்முறை பாடலாக மூவர்குழு சங்கர்-இசான்-லோய் இசையமைத்த தே கும்மா கே என்ற பாடல் தேர்வாகியுள்ளது. சங்கர் மகாதேவனும் திவ்யா குமாரும் மூன்று மொழிகளில், (இந்தி, வங்காளம் மற்றும் சிங்களம்) பாடியுள்ள இந்தப் பாடலை ஓக்விலியும் மாதரும் நிறுவனம் சந்தைப்படுத்துகிறது.[9] 17,பிப்ரவரி,2011 அன்று வங்காளதேசத்தில் நடக்கவிருக்கும் போட்டித் துவக்கவிழாவில் இந்தப் பாடல் அரங்கேற்றப்படும்.[10]
ஊடகங்கள்
துடுப்பாட்ட உலகக்கிண்ணத்துக்கான ஊடகங்களின் கவனம் ஒவ்வொரு முறையும் அதிகரித்து வந்துள்ளது. 2011 உலகக்கிண்ண அலைபரப்பு உரிமையை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ESPN Starsports நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. 2011 உலகக்கிண்ணம் 220க்கு அதிமான நாடுகளில் அலைபரப்பப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாடும் தங்கள் இறுதி அணிகளைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் 30 பேர் கொண்ட முன்னணியைத் தேர்ந்தெடுத்து அதிலிருந்து 15 பேரை வடிகட்டின. அனைத்து 14 அணிகளும் தங்கள் முன்னணி பட்டியலை 19 திசம்பர் 2010க்குள்ளும் இறுதி அணி ஆட்டக்காரர்களின் பெயர்களை 19 சனவரி 2011க்கு முன்பாகவும் அறிவிக்க வேண்டும்.[11]
இலங்கை திசம்பர் 13 அன்றே தங்கள் முன்னணியை அறிவித்து முதல் நாடாக விளங்கியது.[12]
அயர்லாந்து தங்கள் முன்னணியில் 22 பேரே கொண்டிருந்தது.[13]
ஜானதன் டிராட் 47 (38) ஏட்ரியன் ரசல் 4/49 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
ஏட்ரியன் ரசல் 49 (46) ஜேம்சு டிரெட்வெல் 4/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இங்கிலாந்து 18 ஓட்டங்களால் வெற்றி எம்.ஏ.சிதம்பரம் அரங்கம், சென்னை நடுவர்கள்: ஸ்டீவ் டேவிஸ் (ஆசி), புரூசு ஆக்சென்போர்டு (ஆசி) ஆட்ட நாயகன்: ஜேம்சு டிரெட்வெல் (இங்)
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பு எடுத்தது.
மார்ச் 4 ஆம் நாளன்று, வங்காளதேச அணியை வெற்றி கொண்டு திரும்பிய மேற்கிந்தியத்தீவுகள் அணியினர் சென்ற வாகனம் மீது வங்காளதேச ரசிகர்கள் கல்லெறி நடத்தினர். வாகனத்தில் சென்றவர்கள் வங்காளதேச அணியெனத் தவறாக எண்ணியே கல்லெறி நடத்தப்பட்டதாக பின்னர் நடந்த விசாரணைகளில் இருந்து தெரியவந்தது[16].
மும்பையில் இடம்பெறவிருக்கும் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் பாக்கித்தான் அணி விளையாடத் தகுதி பெறுமானால் அப்போட்டியை நடக்க விடாமல் தாம் தடுக்கப்போவதாக வலதுசாரி இந்து தேசிய அரசியல் கட்சியான சிவ சேனா அச்சுறுத்தியுள்ளது[17].
இசுலாமாபாத்தில்பன்னாட்டுக் காவலக அதிகாரி ரொனால்ட் நோபல் மார்ச் 24ஆம் நாளன்று பாக்கித்தான், இலங்கை, மாலத்தீவு காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் உலகக்கிண்ண போட்டிகளை சீர்குலைக்கும் எண்ணத்துடன் செயல்பட்ட "தீவிரவாதி ஒருவனை அடையாளம் கண்டு, இருக்குமிடத்தைத் தேடி, கைது செய்துள்ளதாகக்" கூறினார்.[18]
கால்பந்து உலகக்கோப்பை ஆட்டங்களின்போது தென் அமெரிக்க வடிவழகிகள் அறிவித்ததைப் போன்று இந்தியாவின் வடிவழகி பூனம் பாண்டே "இந்தியா உலகக் கோப்பையை வென்றால் நிர்வாண கோலம் பூணுவேன்" என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.[21]
ஒருநாள் போட்டி ஒன்றில் முதல் தடவையாக நாணயச் சுழற்சி இரண்டு முறை இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் நாணயச் சுழற்சியில் முதல் தடவை இலங்கை அணித்தலைவர் சங்கக்கார வென்றார். ஆனால் அவர் கூறியது பார்வையாளர்களின் பலத்த சத்தத்தினால் தனக்குக் கேட்கவில்லை எனப் போட்டி நடுவர் ஜெஃப் குரோவ் குறிப்பிட மீண்டும் நாணயச் சுழற்சியில் ஈடுபடுமாறு அழைத்தார். இலங்கை அணியின் தலைவர் சங்கக்கார இரண்டாவது தடவையும் வென்று முதலில் துடுப்பாடத் தீர்மானித்தார்.[22].