2015 தொடரை ஏற்று நடத்த இங்கிலாந்தும் வேல்சும் பின்வாங்கியதை அடுத்து, 2019 உலகக்கிண்ணச் சுற்றை ஏற்று நடத்தும் உரிமை 2006 ஏப்ரலில் அந்நாடுகளுக்கு வழங்கப்பட்டது. முதலாவது ஆட்டம் இங்கிலாந்து, ஓவல் அரங்கிலும், இறுதி ஆட்டம் இலார்ட்சு அரங்கிலும் நடைபெற்றன. ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கிலாந்திலும், வேல்சிலும் நடைபெறுகின்றன. முன்னராக 1975, 1979, 1983, 1999 உலகக்கிண்ணப் போட்டிகள் இங்கு இடம்பெற்றன.
ஆரம்ப சுற்றில், 10 அணிகளைக் கொண்ட ஒரு குழுவில் ஒவ்வோர் அணியும் ஏனைய ஒன்பது அணிகளுடன் ஒரு முறை மோதின. போட்டிகள் முடிவில் அதிக புள்ளிகளைப் பெற்ற முதல் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றன. அயர்லாந்து, ஆப்கானித்தான் அணிகள் தேர்வு அணிகளாக 2017 சூன் மாதத்தில் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து தேர்வு அணிகள் 10 இலிருந்து 12 ஆக அதிகரித்தன. ஆனால், இரண்டு தேர்வு அணிகள் 2019 உலகக்கோப்பையில் பங்குபெறவில்லை. அனைத்துத் தேர்வு அணிகளும் பங்குபற்றாத முதலாவது உலகக்கோப்பைப் போட்டியாக 2019 போட்டி அமைந்தது.[4] அத்துடன் தேர்வு அணியல்லாத நாடுகள் எதுவும் பங்குபற்றாத முதலாவது உலகக்கோப்பை போட்டியும் இதுவாகும்.
தகுதி
2019 உலகக்கோப்பையில் போட்டியுடும் நாடுகள்.
நடத்தும் நாடு என்ற வகயில் தெரிவு செய்யப்பட்டது
ஐசிசி பஒநா வாகையாளர் தரவரிசையில் தகுதி
2018 தகுதிகாண் போட்டிகளில் இருந்து
தகுதிகாண் போட்டிகளில் பங்குபற்றி வெற்றியடையாத நாடுகள்
முந்தைய 2011, 2015 உலக்கிண்ணப் போட்டிகளில் 14 அணிகள் போட்டியிட்டன. தற்போதைய 2019 போட்டிகளில் 10 நாடுகள் மட்டுமே பங்குபற்றுகின்றன.[5] போட்டிகளை நடத்தும் நாடு என்ற வகையில் இங்கிலாந்தும், 2017 செப்டம்பர் 30 இல் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதல் ஏழு இடங்களைப் பெற்ற நாடுகளும் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டன. எஞ்சிய இரண்டு இடங்களும், 2018 தகுதி-காண் போட்டிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டன.[6] தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் இருந்ததால் முதன் முறையாக மேற்கிந்தியத்தீவுகள் அணி நேரடியாகத் தகுதி பெறத் தவறியது.[7][8][9]
அயர்லாந்து, ஆப்கானித்தான் ஆகிய நாடுகள் புதிய தேர்வுத் துடுப்பாட்ட நாடுகளாக ஐசிசியினால் அங்கீகரிக்கப்பட்டன. 2018 இல் நடத்தப்பட்ட தகுதி-காண் போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் இசுக்காட்லாந்தைடக்வோர்த் லூயிஸ் முறை மூலம் வென்றது.[10]ஆப்கானித்தான்அயர்லாந்தை வென்றது. இதன்மூலம் அயர்லாந்தும், சிம்பாப்வேயும் தகுதி பெறத் தவறின.[11] 1983 ஆண்டிற்குப் பின்னர் முதல் தடவையாக சிம்பாப்வே அணி உலகக்கோப்பையில் விளையாடத் தகுதி பெறத் தவறியது.[12] அயர்லாந்தும் 2007 இற்குப் பின்னர் முதல் தடவையாக உலகக்கிண்ணத்தின் விளையாடத் தகுதிபெறத் தவறியது. உலககோப்பை வரலாற்றில் முதல் தடவையாக தேர்வு அணிகள் மட்டும் பங்குபெறும் உலககோப்பைப் போட்டியாக 2019 போட்டி அமைந்தது.[13]
இங்கிலாந்து மற்றும் வேல்சில் உலகக்கிண்ண நிகழிடங்கள்
கொல்கத்தாவில் நடந்த பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் (ஐசிசி) கூட்டத்தொடரின் முடிவில் 2018 ஏப்ரல் 26 அன்று போட்டிகள் நடத்தப்படும் அரங்குகளின் விபரங்கள் வெளியிடப்பட்டன. ஆரம்பக் கட்டப் போட்டிகளுக்காக இலண்டன், ஒலிம்பிக் விளையாட்டரங்கமும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.[16][17] ஆனாலும், இவ்வரங்கு பின்னர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.[18]
பங்குபெற்றும் அனைத்து அனைத்து அணிகளும் தமது அணிகளின் உறுப்பினர்களின் பட்டியலை 2019 ஏப்ரல் 23 இற்கு முன்னர் அறிவிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.[19] உலகப்போட்டி தொடங்குவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் இறுதிப் பட்டியல் தரப்பட வேண்டும் எனக் கூறப்பட்டது.[20] நியூசிலாந்து முதலில் தனது பட்டியலை அனுப்பியது.[21] தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிர் வயதில் (அகவை 40) கூடிய வீரர் ஆவார். வயதில் குறைந்தவர் ஆப்கானித்தானின் முஜீப் உர் ரகுமான் (18) ஆவார்.[22][23]
ஆட்ட அதிகாரிகள்
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2019 ஏப்ரலில் உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான நடுவர்கள், மற்றும் முறையீடு நடுவர்களின் பட்டியலை அறிவித்தது.[24] நடுவர் இயன் கூல்ட் இப்போட்டிகளின் முடிவில் தான் இளைப்பாறப்போவதாக அறிவித்தார்.[25]
2015 உலகக்கிண்ணத்தைப் போன்று, இம்முறையும் $10 மில்லியன் பரிசுப் பணத்தை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஒதுக்கியது.[26] பரிசுப் பணம் அணிகளின் ஆட்ட செயல்திறனுக்கேற்ப பின்வருமாறு பங்கிடப்படுகிறது:[27]
கட்டம்
பரிசுப் பணம் (அமெ$)
மொத்தம்
வெற்றியாளர்
$4,000,000
$4,000,000
இரண்டாவது வெற்றியாளர்
$2,000,000
$2,000,000
அரையிறுதியில் தோற்றவர்கள்
$800,000
$1,600,000
குழு நிலைப் போட்டியில் வெற்றியாளர்கள்
$40,000
$1,800,000
குழு நிலையைத் தாண்டாதவர்கள்
$100,000
$600,000
மொத்தம்
$10,000,000
பயிற்சி ஆட்டங்கள்
அதிகாரபூர்வமற்ற பத்து ஒருநாள் பயிற்சி ஆட்டங்கள் மே 24 முதல் மே 28 வரை நடைபெற்றன.[28]
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற வங்காளதேசம் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
தொடக்க நிகழ்வு
2019 உலகக்கிண்ணப் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வு இலண்டன், த மோல் என்ற இடத்தில் 2019 மே 29 இல் இடம்பெற்றது.[29] இந்நிகழ்வை ஆன்ட்ரூ பிளின்டொஃப், பாடி மெகினசு, சிபானி தண்டேக்கர் ஆகிய பிரபலங்கள் நடத்தினர். உலகக்கிண்ணத்தில் பங்குபற்றும் 10 அணிகளுக்கிடையே 60-செக்கன் சவால் போட்டி நடத்தப்பட்டது. ஒவ்வோர் அணியும் இரண்டு விருந்தினர்கள் மூலம் போட்டியில் பங்கெடுத்தன. விவியன் ரிச்சர்ட்ஸ், மகேல ஜயவர்தன, ஜாக் கலிஸ், பிறெட் லீ, கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, பர்கான் அக்தார், மலாலா யூசப்சையி, யொகான் பிளேக், தமயந்தி தர்சா, அசார் அலி, அப்துர் ரசாக், ஜேம்ஸ் பிராங்கிளின், இசுட்டீவன் பைனார், கிறிசு இயூசு, சான் பிட்சுபாட்ரிக்கு, பாட் காஷ் ஆகியோர் பங்குபற்றினர். டேவிட் பூன் நடுவராகப் பணியாற்றினார். இங்கிலாந்து 74 புள்ளிகளைப் பெற்று முதலிடத்திலும், ஆத்திரேலியா 69 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தையும் பிடித்தன.
தற்போதைய வாகையாளரான ஆத்திரேலியாவின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் உலகக்கிண்ண விருதை மேடைக்கு எடுத்துச் சென்றார், இவருடன் இங்கிலாந்தின் முன்னாள் பந்து வீச்சாளர் கிரீம் ஸ்வான் உடன் சென்றார்.
லோரின், ரூடிமெண்டல் ஆகிய குழுவினரால் அதிகாரபூர்வமான உலகக்கிண்ணப் பாடல் இசைக்கப்பட்டு ஆரம்ப நிகழ்வு முடிவுற்றது.[30]
-ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் அணிகள் பெற்ற புள்ளிகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
-போட்டி விபரங்களைக் காண புள்ளிகளை (குழுப் போட்டிகள்) அல்லது வெ / தோ (வெளியேறும் நிலை) ஐ அழுத்துங்கள்
குழு நிலை
குழுநிலைப் போட்டிகள் தொடர் சுழல்முறையில் விளையாடப்பட்டன. பத்து அணிகளும் தமக்கிடையே ஒருமுறை மோதின. மொத்தம் 45 ஆட்டங்கள் விளையாடப்பட்டன. ஒவ்வோர் அணியும் 9 ஆட்டங்கள் விளையாடின. குழுநிலையில் முதல் நான்கு இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிப் போட்டிகளுக்குத் தகுதி பெற்றன. இதே போன்ற குழுநிலை ஆட்டத்தொடர் 1992 உலகக்கிண்ணத்திலும் இடம்பெற்றது. அப்போது 9 அணிகள் மட்டும் பங்குபற்றியிருந்தன.
மூலம்: ஐசிசி, கிரிக்இன்ஃபோ வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள்; 2) வெற்றிகள்; 3) நிகர ஓட்ட விகிதம்; 4) சமமான அணிகளுக்கிடையேயான ஆட்டங்களின் முடிவுகள் (H) நடத்தும் நாடு
குழு நிலைப் போட்டிகள்
2018 ஏப்ரல் 26 இல் போட்டிகளுக்கான கால அட்டவணையை ஐசிசி வெளியிட்டது.[31]
அனைத்து நேரங்களும் பிரித்தானிய கோடை நேரத்தைக் (ஒசநே+01:00) குறிக்கும்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
யேம்சு நீசம் (நியூ) தனது 50-வது பன்னாட்டு ஒருநாள் போட்டியில் விளையாடினார்.[37]
திமுத் கருணாரத்ன (இல) உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக விளையாட ஆரம்பித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இரண்டாவது துடுப்பாட்ட வீரராக சாதனை படைத்தார்.[38]
நியூசிலாந்து 7 இழப்புகளால் வெற்றி கவுண்டி அரங்கு, டோண்டன் நடுவர்கள்: அலீம் தர் (பாக்), மைக்கேல் கஃப் (இங்) ஆட்ட நாயகன்: ஜேம்சு நீசம் (நியூ)
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
யேம்சு நீசம் (நியூ) தனது ஒருநாள் போட்டிகளில் முதன்முறையாக 5 மட்டையாளர்களை ஒரே போட்டியில் வீழ்த்தினார். அத்துடன், தனது ஒருநாள் போட்டிகளில் 50வது மட்டையாளரை வீழ்த்தினார்.[51]
இங்கிலாந்து 150 ஓட்டங்களால் வெற்றி பழைய டிராஃபர்ட் அரங்கு, மான்செஸ்டர் நடுவர்கள்: பவுல் ரைபல் (ஆசி), ஜொயெல் வில்சன் (மேஇ) ஆட்ட நாயகன்: இயோன் மோர்கன் (இங்)
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இயோன் மோர்கன் உலகக்கிண்ணப் போட்டியொன்றில் மிக விரைவான நூறு எடுத்த ஆங்கிலேய வீரர் (57 பந்துகள்) ஆனார்,[60] மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஒரே ஆட்டத்தில் அதிக எண்ணிக்கையான ஆறடிகளை அடித்த வீரர் (17)[61] ஆகிய சாதனைகளை ஏற்படுத்தினார்.
இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான 6-களைப் பெற்றும் (25),[62] உலகக்கிண்ணப் போட்டியொன்றில் அதிக எண்ணிக்கையிலான ஓட்டங்களைப் (397) பெற்றும்[63] சாதனை படைத்தது.
ரஷீத் கான் (ஆப்) உலகக்கோப்பைப் போட்டி ஒன்றில் அதிக எண்ணிக்கையான ஓட்டங்களை விட்டுக்கொடுத்த (110 ஓட்டங்கள்/9 நிறைவுகள்) பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.[64][65]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானித்தான் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
உலகக்கோப்பைப் போட்டிகளில் வங்காளதேசத்துக்காக 1,000வது ஓட்டத்தை எடுத்த முதலாவது வீரராக சகீப் அல் அசன் சாதனை புரிந்தார்.[77] அத்துடன், உலகக்கோப்பையில் ஒரே போட்டியில் ஐந்து மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது வங்கதேச வீரரும் இவரே.[78]
சகீப் அல் அசன் உலககோப்பை போட்டிகளில் 1,000 ஓட்டங்கள் எடுத்து 30 மட்டையாளர்களை வீழ்த்திய முதலாவது வீரராகவும், ஒரு போட்டித் தொடரில் 400 ஓட்டங்கள் எடுத்து 10 மட்டையாளர்களை வீழ்த்திய ஒரே வீரராகவும் சாதனை புரிந்தார்.[79]
இலங்கை 23 ஓட்டங்களால் வெற்றி ரிவர்சைட் அரங்கு, செசுட்டர்-லெ-இசுட்ரீட் நடுவர்கள்: புரூஸ் ஒக்சென்போர்ட் (ஆசி), பவுல் ரைபல் (ஆசி) ஆட்ட நாயகன்: அவுசிக்கா பெர்னாண்டோ (இல)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
அவிசுக்கா பெர்னாண்டோ (இல) தனது முதலாவது ஒருநாள் நூறைப் பெற்றார்.[91]
ஜேசன் ஹோல்டர் 100 மட்டையாளர்களை வீழ்த்திய மேற்கிந்தியத் தீவுகளின் முதலாவது தலைவர் ஆவார்.[92]
நிக்கொலாசு பூரன் (மேஇ) தனது முதலாவது ஒருநாள் நூறைப் பெற்றார்.[93]
டொம் லேத்தம் 57 (65) மார்க் வுட் 3/34 (9 நிறைவுகள்)
இங்கிலாந்து 119 ஓட்டங்களால் வெற்றி ரிவர்சைடு அரங்கு, செசுட்டர்-லெ-இசுட்ரீட் நடுவர்கள்: சுந்தரம் ரவி (இந்), ரொட் டக்கர் (ஆசி) ஆட்ட நாயகன்: ஜொனாதன் பேர்ஸ்டோ (இங்)
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
இப்போட்டி முடிவை அடுத்து இங்கிலாந்து அரையிறுதில் விளையாடத் தகுதி பெற்றது.[96]
வெளியேறும் நிலையில் இரண்டு அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறுகின்றன. இப்போட்டிகளில் வெற்றிபெறும் அணிகள் இலார்ட்சு அரங்கில் இடம்பெறும் இறுதிப் போட்டியில் பங்கெடுக்கும். ஓல்டு டிராபர்டு, எட்சுபாசுட்டன் ஆகிய அரங்குகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும் என 2018 ஏப்ரல் 25 இல் அறிவிக்கப்பட்டது. 1999 இலும் இங்கு அரையிறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன.[103]
2019 சூன் 25 இல் ஆத்திரேலியாஇங்கிலாந்து அணியை இலார்ட்சில் விளையாடி வென்று முதலாவது அணியாக அரையிறுதியில் விளையாடத் தகுதி பெற்றது.[104] 2019 சூலை 2 இல் இந்தியா வங்காளதேசத்தை வென்று இரண்டாவது அணியாக அரையிறுதிக்கு நுழைந்தது.[105] சூலை 3 இல் இங்கிலாந்து நியூசிலாந்தை வென்று மூன்றாவது அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.[106] சூலை 5 இல், பாக்கித்தான் வங்காளதேசத்துடன் விளையாடி வெற்றி பெற்றாலும், பாக்கித்தான் தமது நிகர ஓட்ட விகிதத்தை அதிகரிக்க முடியாததால், நியூசிலாந்து நான்காவது அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது.[107]
முதலாவது அரையிறுதிப் போட்டியில், இந்தியா நியூசிலாந்து அணியை பழைய டிரஃபோர்ட் அரங்கிலும், இரண்டாவது அரையிறுதியில், ஆத்திரேலியா இங்கிலாந்து அணியை எட்சுபாசுட்டன் அரங்கிலும் சந்திக்கின்றன.[108] ஏதாவதொரு அரையிறுதிப் போட்டியில் மேலதிக ஆட்டம் தேவைப்படுமிடத்து, ஆட்டம் இன்னும் ஒரு நாள் விட்ட இடத்தில் இருந்து தொடரும்.[109] ஆட்டம் ஒன்று சமமாக முடிவடைந்தால், சிறப்பு நிறைவு என்ற முறை பயன்படுத்தப்படும்.[109] இரண்டு நாட்களிலும் ஆட்டம் நடைபெறவில்லையெனில், குழுநிலையில் அதிக புள்ளிகளை எடுத்த அணி இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும்.[109]
மழை காரணமாக, இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் 47-வது நிறைவில் இடை நிறுத்தப்பட்டு, அடுத்த நாள் சூலை 10 இல் தொடர்ந்தது.[110] நியூசிலாந்து இந்தியாவை 18 ஓட்டங்களால் வென்று, முதலாவது அணியாக இறுதிப் போட்டியில் நுழைந்தது.[111]
தொடர் முழுவதும் சிறப்பாக ஆடிய வீரர்களைக் கொண்டு தொடரின் அணி உருவாக்கப்படுகிறது. அந்த வகையில் 15 சூலை 2019 நாளன்று கேன் வில்லியம்சன் தலைமையிலான தொடரின் அணியை ஐசிசி அறிவித்தது.[120]