இப்போட்டிகளை ஏற்றுநடத்தும் உரிமை 2011 உலகக்கிண்ணம் மற்றும் 2019 உலகக்கிண்ணங்களை ஏலம் விடும்போது தீர்மானிக்கப்பட்டது. 2011 உலகக்கிண்ணம் நடத்த நான்கு ஆசிய தேர்வுத் துடுப்பாட்டம் ஆடும் நாடுகளான இந்தியா, பாக்கித்தான், இலங்கை மற்றும் வங்காள தேசம் இணைந்து பத்துக்கு மூன்று என்ற வாக்குகளில் தேர்வானது (ஆயினும் பின்னர் பாக்கித்தான் ஏற்று நடத்தும் உரிமையை இழந்தது). டாசுமானிய நாடுகளின் முயற்சியால் கவரப்பட்ட பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 2015 உலகக்கிண்ணப் போட்டிகளை நடத்தும் உரிமையை ஆத்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் வழங்கியது.[3][4] 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் போட்டிகளை ஆத்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் இரண்டாம் முறையாக, 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு, இணைந்து நடத்துகின்றன. சச்சின் டெண்டுல்கர் இச்சுற்றுத்தொடரின் தூதுவராக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நியமிக்கப்பட்டார்.[5]
2011 இல் இந்திய உபகண்டத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியை 6 இழப்புகளால் வெற்றி கொண்ட இந்திய அணி இம்முறை நடப்பு வாகையாளராக போட்டியிட்டது. பிரிவு ஆ-வைச் சேர்ந்த அணிகளான இந்தியாவிற்கும் பாக்கித்தானுக்கும் இடையிலான 15 பெப்ரவரி 2015 நடைபெற்ற போட்டியின் நுழைவுச்சீட்டுகள் அனைத்தும் 12 நிமிடங்களுக்குள்ளேயே விற்று முடிந்ததாக அறிவிக்கப்பட்டது.[6]
மெல்பேர்ண் துடுப்பாட்ட அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து, ஆத்திரேலிய அணிகள் மோதின. 93,013 பார்வையாளர்களின் முன்னிலையில் நடைபெற்ற இவ்வாட்டத்தில்[7] ஆத்திரேலியா 7 இழப்பகளால் நியூசிலாந்தை வென்று ஐந்தாவது தடவையாக உலகக்கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது.
போட்டி நடத்தும் நாடுகள் தெரிவு
போட்டித்தொடர் வகை
2011 ஆண்டின் உலகக்கிண்ணத்தைப் போல இந்தப் போட்டியில் 14 அணிகள் ஒவ்வொரு குழுவிலும் ஏழு அணிகள் வீதமாக இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.[8] ஒவ்வொரு குழுவிலும் முதல் நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும். அதன் பின்னர் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் நடைபெறும். இறுக்கமாக வரும் ஆட்டங்களுக்கு சிறப்பு நிறைவு முறையைப் பயன்படுத்துவது என்று 29 சனவரி 2015 அன்று முடிவெடுக்கப்பட்டது.[9] லீக் தொடர்களில் பங்கேற்கும் அணிகள் வெளியேறும் வரை குறைந்தது ஆறு ஆட்டங்கள் விளையாடும்.
↑முழு உறுப்பினர்களின் தரவரிசை: திசம்பர் 31, 2012ஆம் ஆண்டு பதுஅ ஒ.ப.து வெற்றியாளர் தரவரிசையை அடிப்படையாகக் கொண்டது.
தயார்ப்படுத்தல்
உள்ளூர் ஏற்பாடுக் குழு
2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின் தயார்ப்படுத்தலில் இறுதி வடிவம் தரப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு பின்வருமாறு; தலைமை நிர்வாக அதிகாரியாக ஜோன் ஹார்டன் (John Harnden) தெரிவு செய்யப்பட்டார்.[11] ஜேம்ஸ் ஸ்ரோங் (James Strong) கூட்டத் தலைவராகவும்[12], ரல்ப் வாட்டேர்ஸ் (Ralph Waters) பிரதிக் கூட்டத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டனர்.[13]
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் நடுவர்களைத் தெரிவு செய்யும் குழு, இவ்வுலகக்கிண்ணப் போட்டிகளில் கடமையாற்றுவதற்குப் பின்வரும் 20 நடுவர்களைத் தெரிவுசெய்துள்ளது.
இந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்காக பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை 10 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது. இது கடந்த உலகக்கிண்ணப் போட்டிகளுக்கான பரிசுத்தொகையை விட 20% அதிகமாகும். இப்பரிசுத்தொகையானது அணிகளின் பெறுபேற்றிற்கமைய பின்வரும் வகையில் பகிர்ந்தளிக்கப்படும்[15]:
நிலை
பரிசுத்தொகை (US$)
மொத்தம்
வாகையாளர்
$3,975,000
$3,975,000
இரண்டாமிடம்
$1,750,000
$1,750,000
அரையிறுதியில் தோற்றோர்
$600,000
$1,200,000
காலிறுதியில் தோற்றோர்
$300,000
$1,200,000
குழுநிலையில் வெற்றி
$45,000
$1,890,000
குழுநிலையுடன் வெளியேற்றம்
$35,000
$210,000
மொத்தம்
$10,225,000
இவ்வகையில், ஓர் அணி அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று வாகை சூடுமாயின் மொத்தப் பரிசுத்தொகையாக 4,245,000 டொலர்களையும் அனைத்துப் போட்டிகளிலும் தோல்வியுற்று குழு நிலையுடன் வெளியேறுமாயின் 35,000 அமெரிக்க டொலர்களையும் பரிசாகப் பெறும்.
குறியீடுகள்
நற்பேறு சின்னம்
அதிகாரபூர்வ பாடல்
ஊடகங்கள்
விஜய் தொலைக்காட்சி தமிழ் வர்ணனையுடன் நேரலையாக ஒளிபரப்பியது. ஸ்டார் தொலைக்காட்சி அமைப்பின் ஓர் அங்கமாக விஜய் தொலைக்காட்சி இருப்பதால், அதே காட்சிகள் இடம்பெற்றன; விளையாட்டரங்கத்தில் எழும் ஒலிகளுடன், தமிழ் வர்ணனை ஒருங்கிணைக்கப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
அணிகளின் வீரர்கள்
இச்சுற்றுத்தொடருக்காக 15 பேர் கொண்ட அணி ஒன்றை ஒவ்வொரு நாடுகளும் பட்டியலிட்டு சனவரி 07 2015 க்கு முன் தருமாறு கோரப்பட்டது.[16] அதன் படி, கீழே ஒவ்வொரு நாட்டு அணி வீரர்களின் பட்டியல்தரப்பட்டுள்ளது.
1பெப்ரவரி 7 அன்று, பயிற்சியின் போது தம்மிக பிரசாத் காயமடைந்ததை அடுத்து,[19] அவருக்குப் பதிலாக துஷ்மந்த சமீரா இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.[20] 2 பெப்ரவரி 25 இல், ஜீவன் மென்டிஸ் காயமடைந்ததை அடுத்து, அவருக்குப் பதிலாக உபுல் தரங்க இலங்கை அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[21]
ஜேம்ஸ் டெய்லர் lbw மூலம் ஆட்டம் இழந்ததாக அறிவிக்கப்பட்டு மூன்றாம் நடுவர் டெய்லர் ஆட்டமிழக்கவில்லை என அறிவிக்கப்பட்ட பின்னர், உடனேயே ஜேம்ஸ் அண்டர்சன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்ததாக இலங்கை நடுவரால் அறிவிக்கப்பட்டு ஆட்டம் முடிவுக்கு வந்தது. இலங்கை நடுவரின் இத்தீர்ப்பை ஐசிசி பின்னர் மீளாய்வு செய்ததில், ஆன்டர்சனின் ஆட்ட இழப்புக்குக் காரணமான பந்து ஓர் "இறந்த பந்து" என அறிவித்திருக்க வேண்டும் எனவும், இதனால் ஆன்டர்சன் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டது தவறான முடிவு என்றும் கூறியுள்ளது.[24]
நாணயச்சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் களத்தடுப்பாடத் தீர்மானித்தது.
இசுக்காட்லாந்தின் நான்கு வீரர்கள் தாம் சந்தித்த முதலாவது பந்திலேயே ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். உலகக் கிண்னப் போட்டியில் இது முதலாவது தடவையாகும்.[25] இசுக்காட்லாந்தின் ஐந்து வீரர்கள் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது இசுக்காட்லாந்தின் வரலாற்றில் முதல் முறையாகும்.[26]
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.
பந்துவீச்சில் டிம் சௌத்தி (நியூ) உலகக்கிண்ண வரலாற்றில் மூன்றாவதாகவும், நியூசிலாந்தின் ஒருநாள் பன்னாட்டுப் போட்டி வரலாற்றில் முதலாவதாகவும் உள்ளார்.[27]
பிரண்டன் மெக்கல்லம் (நியூ) உலகக்கிண்ண வரலாற்றில் அதிவிரைவான ஐம்பது ஓட்டங்களைப் (18 பந்துகள்) பெற்றார். இது ஒருநாள் துடுப்பாட்ட வரலாற்றில் மூன்றாவதும், நியூசிலாந்தின் அதிவிரைவான 50 ஓட்டங்களும் ஆகும்.[27]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் துடுப்பாடியது.
திலகரத்ன டில்சான், குமார் சங்கக்கார இருவரும் இணைந்து எடுத்த 210* ஓட்டங்கள் ஒருநாள் போட்டியில் இலங்கையின் இரண்டாவது விக்கெட்டுக்கான அதியுயர் ஓட்டங்களாகும்.[30]
தில்சானின் 161* ஓட்டங்கள் "ஆறு" ஓட்டங்கள் எதுவும் அடிக்காமல் ஒரு வீரர் எடுத்த அதியுயர் ஒருநாள் சாதனை ஆகும்.[31]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற ஆத்திரேலியா முதலில் துடுப்பாடியது.
குமார் சங்கக்கார அடுத்தடுத்த மூன்று உலகக்கோப்பைப் போட்டிகளில் நூறுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனைப் படைத்தார். சங்கக்கார ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,000 ஓட்டங்களைக் கடந்தார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் முதலில் துடுப்பாடியது.
மழை காரணமாக சிம்பாப்வே அணியில் இலக்கு 48 ஓவர்களுக்கு 363 ஆகக் குறைக்கப்பட்டது.
ஒருநாள் போட்டியில் கிறிஸ் கெயில் 9,000 ஓட்டங்களைக் கடந்தார். மேற்கிந்திய அணியில் பிறயன் லாறாவிற்கு அடுத்ததாக இவர் இச்சாதனையைப் படைத்தார்.[35] அத்துடன் உலகக்கிண்னப் போட்டி ஒன்றில் இரட்டை நூறு அடித்த முதலாவது வீரர் ஆனார்.[36]
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் துடுப்பாடியது.
ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த முதலாவது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும், உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் பெற்ற முதலாவது மட்டையாளர் என்ற சாதனையையும் மார்ட்டின் கப்தில் நிகழ்த்தினார்.[48]