தமிழ்நாட்டுப் பொருளாதாரம்
தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் (ஆங்கிலம்: Economy of TamilNadu) சேவைத் துறை 45%, தொழில் துறை 34%, விவசாயம் 21% பங்களிக்கின்றன. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் (2013–14) இந்தியாவின் மாநிலங்களில் நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கோயம்புத்தூர் நெசவாலைகளுக்கும், ஈரோடு மஞ்சள் சாகுபடி மற்றும் ஆடை ஏற்றுமதிக்கும், திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கும், கரூர் நெசவுத்தொழிலும், பேருந்து, சரக்குந்துகளுக்குக் கூடு கட்டும் தொழிலும் நன்கு வளர்ந்துள்ளன.சேலம் இரும்பு உருக்கு ஆலைகளுக்காகவும், நாமக்கல் கோழிப் பண்ணைகள், போக்குவரவு செய்யும் தொழிலுக்காகவும், சிவகாசி அச்சுத் தொழில், பட்டாசு உற்பத்திக்கும், திருச்சி, வேலூர் தோல் தொழிலுக்கும், தஞ்சை போன்ற பகுதிகள் விவசாயத்திற்கும், சென்னை வாகன உற்பத்தி, தகவல் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களுக்கும் பெயர் பெற்றுள்ளன. தென்தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தமிழகத்தின் இரண்டாவது பெரிய துறைமுகம் உள்ளது. தூத்துக்குடியில் மின்னுற்பத்தி நிலையங்களும், உர, உலோகத் தொழிற்சாலைகளும் உள்ளன. பெங்களூருக்கு அருகில் உள்ள ஓசூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் (அசோக் லேலண்டு, டிவிஎஸ்), மற்ற இயந்திரத் தொழிற்சாலைகளும் (டைட்டன்) உள்ளன. பாலிவுட் என அழைக்கப்படும் மும்பை திரைப்படத் துறைக்கு அடுத்ததாக, தமிழகத் திரைப்படத்துறை இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படத் தொழில் மையமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பெருமளவில் தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சினிமாப் படங்கள் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. பொருளாதார வளர்ச்சி![]() 2011-2012ஆம் ஆண்டில் தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.39 விழுக்காடு. தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. தமிழ்நாடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது பெரிய மாநிலமாக உள்ளது[13]. தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களோடு ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் (2012–13) ரூபாய் 98,550 [14] அதுவே 2016–17 ஆண்டில் ரூபாய் 1,57,116 ஆகும். இதே ஆண்டின் தேசிய தனிநபர் வருமானமான ரூ.82,229ஐக் காட்டிலும் இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இந்திய வளர்ச்சி மாதிரியும் தமிழ்நாட்டு வளர்ச்சி மாதிரியும்சுதந்திர இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு 1950களில் பின்பற்றிய முழக்கம் நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதாகும். அதாவது வேக வேகமான பொருளாதார வளர்ச்சியின் மூலமே சமூகப் பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்பது அந்த இலக்கு. அறுபதுகளில் இந்தியா சிறந்த பொருளாதார வளர்ச்சியினை எட்டியது. ஆனால் உணவு, வறுமை, கல்வி போன்ற பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருந்தன. இதற்குக் காரணமான வளர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதால்தான் என்று கூறப்பட்டது. அதன் பின்னர் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்டு வளர்ச்சி விகிதமும் உயர்ந்தது. ஆனாலும் மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் முழுவதுமாகத் தீர்க்கப்படவில்லை. இந்திய விடுதலையில் தொடங்கி பெரும்பான்மையான மாநிலங்களில் காங்கிரசின் ஆட்சிகளே அமைத்தன. அந்த மாநிலங்களில் ‘முதலில் பொருளாதார வளர்ச்சி பின்னர் சமூக நலன்’ என்ற கொள்கையே அப்போது பின்பற்றப்பட்டது. பீகார், உத்திரப் பிரதேசம் போன்ற பல வட மாநிலங்கள் போதுமான சமூக வளர்ச்சி அடையாமலிருக்க இந்த அணுகுமுறையே காரணமாகக் கூறப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டின் வளர்ச்சி மாதிரி நேருவின் ‘முதலில் பொருளாதார வளர்ச்சி பின்னர் சமூக நலன்’ என்ற கொள்கைக்கு நேர் மாறான கொள்கையைக் கொண்டதாக இருந்தது. காரணம் திராவிட இயக்கமாகும். திராவிட இயக்கத் தலைவர்கள் சமூக வளர்ச்சியினையே முதன்மையான குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். காமராசர் காலத்தில் பள்ளிகள் கட்டப்பட்டன என்றால், திமுக காலத்தில் கல்லூரிகளும், மாணவர் விடுதிகளும் கட்டப்பட்டன. கல்விக்கான இடஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. இதோடு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர்களுக்கும் வேலை வாய்ப்பும் இடஒதுக்கீடும் வழங்கப்பட்டன. இது போன்ற திட்டங்கள் சமூக வளர்ச்சிக்கு மிகவும் பரந்துபட்ட மற்றும் ஆழமான ஒரு அடித்தளமாகியது. இதன் ஒட்டுமொத்த விளைவாகத் திமுக ஆட்சியில் கல்வி, சுகாதாரம் சமூக நலத்திட்டத்திற்கான அரசின் செலவுகள் உயர்ந்தன. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்குக் கல்வி, சுகாதாரம், சமூகநலத் திட்டங்களுக்கான அரசின் செலவுகள் அரசின் ஒட்டு மொத்த செலவுகளில் கிட்டத்தட்ட பாதியளவிற்கு உயர்ந்தது. இதை திமுகவுக்குப் பின்வந்த அதிமுக அரசும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தை உருவாக்கியது. [சான்று தேவை] அந்தச் சூழலில் அமுல்படுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவு தமிழகம் ஒரு முதலீட்டு மையமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் காரணமாக அமைந்தது. இதுவே 1990களுக்குப் பின் தமிழகத்தின் வேகமான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இப்படி சமூக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எட்டப்பட்ட பொருளாதார வளர்ச்சியே தமிழகத்தை ஒரு சிறந்த ‘வளர்ச்சி மாதிரியாகக்’ கூறப்படுகிறது.[18] தமிழ் நாடு - முதல் 10 முதலீடுகள் [19]தமிழகத்தில், 15 ஆண்டுகளில், முதலீட்டில், முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களின் பட்டியல்.
ரகுராம் ராஜன் அறிக்கை![]() இந்தியாவின் முன்னேறிய மற்றும் பின்தங்கிய மாநிலங்களைக் கண்டறிவதற்காக ரகுராம் ராஜன் தலைமையில் ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்தது. இந்தக் குழு ஒரு குறியீட்டை உருவாக்கியது. குறியீட்டு அளவு 0 முதல் 1 வரை, இதில் 0 என்பது முன்னேறிய மாநிலம், 1 என்பது மிகவும் பின்தங்கிய மாநிலம் ஆகும். ரகுராம் ராஜன் அறிக்கையின் படி[N 1], தமிழ்நாடு மூன்றாவது முன்னேறிய மாநிலம்[20]. தமிழ்நாட்டின் ஏழ்மைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் விகிதம் 11.28 விழுக்காடு. மற்ற இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் ஏழ்மை விகிதம் குறைவு [21].
குறியீட்டுக்கான அடிப்படை அளவுருக்கள்: வருவாய், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதிகள், வறுமை, பெண் கல்வியறிவு, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், நகரமயமாக்கல் விகிதம், நிதி சேர்ப்பதற்கான வழிகள், இணைப்பு. ரகுராம் ராஜன் அறிக்கையின் படி, கீழே இந்தியாவின், மிக முன்னேறிய மாநிலங்கள், மேல் இருந்து கீழ்:
தொழிற்துறை வாரியாக![]() ![]() ![]() வேளாண்மைதமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு 21%. வேளாண்மை துறை என்பது விவசாயம், சுரங்கம், வனவியல், மேய்ச்சல், குவாரி முதலிய துறைகளை உள்ளடக்கியது. தமிழகத்தின் விவசாயத்துறையின் துறையின் வளர்ச்சி விகிதம் எதிர்த்திசையில் உள்ளது. அதாவது 1991–92 ஆம் ஆண்டில் 11.42% ஆக இருந்த விவசாயத்துறை வளர்ச்சி, 2008-09 ல் -2.65% ஆக உள்ளது [22] விவசாயம்தமிழ்நாட்டு பொருளாதாரத்தின் மிக முக்கியமான துறையாக விவசாயம் உள்ளது. மாநில மக்கள் தொகையில் 70%, விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த நடவடிக்கைகளில், தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஈடுபட்டுள்ளனர்[23] தஞ்சை, திரூவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 8 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பழங்கள்:: வாழை மற்றும் மாம்பழம். தமிழ்நாட்டில் விளையும் முக்கிய காய்கறிகள்:: மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, வெங்காயம், கத்தரிக்காய் மற்றும் முருங்கை. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய மசாலா::கருவேப்பிள்ளை, மஞ்சள், கொத்துமல்லி, மிளகாய், புளி. தமிழ்நாட்டில் விளையும் முக்கிய பூக்கள்:: மல்லிகை, முல்லை, சாமந்தி, ரோஜா, செவ்வந்தி. ஓசூர் நகரிலிருந்து ரோஜா ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது[24]. மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.[25] கரும்பு சாகுபடியில் இந்தியாவில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது[26]. சப்போட்டா உற்பத்தியில் இந்தியாவில், தமிழ்நாடு மூன்றவது இடத்தில் உள்ளது[27]. அரிசி உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு ஆறாவது இடத்தில் உள்ளது. கீழே தமிழ்நாட்டில், பழங்கள் விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
கீழே தமிழ்நாட்டில், காய்கறி விளையும் முக்கிய இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
கோழிப்பண்ணைநாமக்கல் மாவட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் தினமும் 3 1/2 கோடி முட்டைகள் கிடைக்கின்றன. மொத்த உற்பத்தியில் 40 விழுக்காடு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றில் தினமும் 25,00,000 முட்டைக ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீன்பிடிப்புமீன் பிடிப்பு, வளர்ப்பு அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுளும் தமிழ்நாடு மீன்பிடித் தொழிற்துறை எனலாம். இது தமிழ்நாட்டின் முக்கிய தொழிற்துறைகளில் ஒன்று. கடலும், கடல்சார் வாழ்வும் தமிழ் மீனவர்களின் ஒரு நெடுங்கால வாழ்வு முறையும் தொழிலும் அகும். தமிழ்நாடு, 1076 கிலோ மீட்டர் நீளக் கடல்கரையை கொண்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007–2008, கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டண்கள். பால் உற்பத்திதமிழ்நாடு, பால் உற்பத்தியில் இந்தியாவில் 10வது இடத்தில் உள்ளது. 2014–15 ஆம் ஆண்டுக் கணக்கின் படி தமிழகத்தின் பால் உற்பத்தி 71,32,000 டன்களாக இருந்தது.[32] உற்பத்திதமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் உற்பத்தி துறையின் பங்கு 34%.உற்பத்தி துறை என்பது மின்னணுவியல், தானுந்து, நெசவு முதலிய துறைகளை உள்ளடக்கியது. மின்னணுவியல்தமிழ்நாடு மின்னணுவியல் தயாரிப்பு துறையில் வளர்ந்து வரும் மாநிலம். சென்னையில் மோட்டோரோலா, சோனி-எரிக்சன், சாம்சங், சிஸ்கொ, டெல், நோக்கியா[N 2] ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. டெல், வருடத்தில் தொராயமாக 4,00,000 மடிக்கணினி,மேசைத்தள கணினியைச் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து தயாரிக்கிறது.[33][34]. சாம்சங் சென்னையில் 2007ஆம் ஆண்டிலிருந்து தொலைக்காட்சி பெட்டிகளைத் தயாரிக்கிறது. சாம்சங் சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரிலிருந்து வருடத்தில் தொராயமாக 10,20,000 குளிர்சாதன பெட்டிகளை 2010ஆம் ஆண்டிலிருந்து தயாரிக்கிறது[35]. ஹவாய் ரூ. 25 கோடி செலவில் தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூர் அருகே சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு தொழிற்சாலையை அமைக்க விருக்கிறது[36]. வாகன உற்பத்திதமிழக அரசின் தொழில் கொள்கை, அதிக வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு, சென்னையின் துறைமுக வசதி ஆகிய காரணங்களுக்காகச் சென்னையில் அதிக அளவில் வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. சென்னையில் பெருவாரியான வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளதால் சென்னை 'ஆசியாவின் டெட்ராய்ட்' என்று அழைக்கப்படுகிறது. ஹுன்டாய் (கொரிய நிறுவனம்) வருடத்தில் 3,30,000 கார்களை (மகிழுந்து) சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களைச் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலிருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.[37] போர்ட் (அமெரிக்க நிறுவனம்) தொழிற்சாலை, ரூபாய் 1700 கோடி முதலீட்டில், சென்னையை அடுத்த மறைமலை நகரில் அமைந்துள்ளது. போர்ட் தொழிற்சாலை ஆண்டுக்கு 100,000 கார்கள் வரை தயாரிக்கும் திறன் பெற்றுள்ளது[38]. ரெனால்ட்-நிச்சான் [பிரான்சு-ஜப்பான் கூட்டு தயாரிப்பு] சென்னை ஓரகடத்தில் ரூபாய் 4,500 கோடி முதலீட்டில் தொழிற்சாலை அமைத்துள்ளது. டைம்லர் பேருந்து தொழிற்சாலை சென்னை ஒரகடத்தில் 425 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது[39].
டி.வி.ஸ் இரு சக்கர வாகன தொழிற்சாலை, ஓசூரில் 174 ஏக்கர் பரப்பரவில் தொழிற்சாலை அமைந்துள்ளது[41]. ராயல் என்பில்டு, யமகா தொழில்சாலைகள் சென்னையில் அமைந்துள்ளன. நெசவுபருத்தி, பட்டு போன்றவற்றிலிருந்து நூலெடுத்து, துணியாக்கி, உடைகளை ஆக்கும் தொழிற்துறை நெசவுத்துறை ஆகும். தமிழ்நாட்டில் இருக்கும் கைத்தறியையும் பிற நெசவுத் தொழில்நுட்பங்களையும், தொழில் நிறுவனங்களையும், அரசு நெசவுத்துறை அலகுகளையும் தமிழ்நாட்டு நெசவுத்துறை எனலாம்[42].
சேவைத் துறை![]() ![]() சேவைத் துறை என்பது தொட்டுணர முடியாத பொருள்களை உருவாக்கும் துறையாகும்.சேவை துறையின் என்பது போக்குவரத்து, சுகாதாரம், மென்பொருள், பொழுதுபோக்கு முதலிய துறைகளை உள்ளடக்கியது.தமிழ்நாட்டுப் பொருளாதாரத்தில் சேவை துறையின் பங்கு 45%. மென்பொருள்![]() தமிழ்நாட்டில் 934 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. [சான்று தேவை] தமிழ்நாட்டில் 110 தொழில் பூங்காக்கள் உள்ளன. மென்பொருள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில், தமிழ்நாடு கர்நாடகா, மகாராஷ்டிர மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய மாநிலம். 2011–2012 ஆம் ஆண்டு, மென்பொருள் ஏற்றுமதி $8.5 பில்லியன் என்ற அளவில் இருந்தது. தமிழ்நாட்டில் மென்பொருள் மற்றும் மென்பொருள் சார்ந்த துரைகளில் 3.75 லட்சம் பேர் நேரடியாவும், 7.50 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்[44]. இந்தியாவில் மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நகரங்களில், சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.மென்பொருள் ஏற்றுமதி தமிழ்நாட்டில் 2008–09 ஆண்டு 29 விழுக்காடு உயர்ந்து, 280,000 மக்கள் வேலைவாய்ப்பு பெற்று, ரூபாய் 366.80 பில்லியன் என்று இருந்தது[45]. இந்தியாவின் மிகப் பெரிய மென்பொருள் பூங்கா, சிருசேரி, (ராஜீவ் காந்தி சாலை) சென்னையில் உள்ளது. எச்.சி.எல், விப்ரோ, டி.சி.எஸ், இன்ஃபோசிஸ், வேரைசன், சி.டி.எஸ், ஜன்சா, கோவன்சிஸ், சத்யம், பாலி டெக்னொலஜிஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் சென்னை நகரில் உள்ளன. ராபர்ட் போசு, சி.டி.எஸ் ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் கோவை நகரில் உள்ளன. ஹனிவெல் டெக்னொலஜிஸ் மென்பொருள் நிறுவனம் மதுரை நகரில் உள்ளது.கேப்ஜெமினி டெக்னாலஜிஸ், சதர்லேன்ட், டி.டி.எஸ், ஐ.ஓ.என், ஆகிய மென்பொருள் நிறுவனங்கள் திருச்சி நகரில் உள்ளன. வணிக செயல்முறை (பிபிஓ) நிறுவனங்கள் ஆகிய சிடெல் இந்தியா, எச்.சி.எல் பிஸ்னஸ் சர்விசஸ், அல்டெக் ஸ்டார், சுதெர்லான்ட் கிலொபல் சர்விசஸ், விப்ரோ முதலியவை சென்னையில் உள்ளன. பொதுத் துறை நிறுவனங்கள்தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் பொது துறை நிறுவனங்கள்.
தமிழ்நாடு மாநில அரசின் பொது துறை நிறுவனங்கள்
சுற்றுலா துறை![]() ![]() ![]() தமிழ்நாடு, 2014ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் முதன்மையான சுற்றுலா தளமாகும். தற்போது மேலும் சிற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக, உலங்கு வானூர்தி சுற்றுலாவை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.[46] முதற்கட்டமாக, மதுரை விமான நிலையத்தில் இருந்து தனியார் உதவியுடன் ராமேஸ்வரம், கொடைக்கானல், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு உலங்கு வானூர்தியை இயக்க முடிவு செய்யப்பட்டது. உள்நாட்டு சுற்றுலா துறை2014 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [47] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
2013 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [48] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
வெளிநாட்டு சுற்றுலா துறை2014 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [49] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
2013 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [50] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
தமிழ்நாடு மலை வாஸ்தலங்கள்: நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, குற்றாலம், டாப்ஸ்லிப், வால்பாறை. தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள உலக பாரம்பரியச் சின்னங்கள்.
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகள்: திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தனி, பழமுதிர்சோலை. வருமானம் அடிப்படையில், பழனி கோவில் இந்தியாவில், மூன்றாவது பெரியதாகும். ஆற்றல்கல்பாக்கம் அணு உலை, எண்ணூர் அனல்மின் நிலையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவையின் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மின் ஆற்றல் திறன் அடிப்படையில், இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய மாநிலம்.
வெளிநாட்டு முதலீடுதமிழ்நாடு அதிக அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்து வருகிறது. கீழே ஆண்டு வாரியாகத் தமிழ்நாட்டில் (புதுச்சேரி உட்பட) வெளிநாட்டு முதலீடு[51].
தமிழக நிதித் தணிக்கைபொது கணக்குத் தணிக்கைத் துறையின் அறிவுரைப்படி, 1992ஆம் ஆண்டு தமிழக நிதித் தணிக்கை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், பல்கலைக்கழகங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய உள்ளாட்சி நிதித் தணிக்கைத் துறையும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், பாடநூல் நிறுவனம், சத்துணவுத் திட்டம் உள்ளிட்டவற்றை தணிக்கை செய்ய அரசுத்துறை நிறுவன தணிக்கைத் துறையும் உருவாக்கப்பட்டன.[52] டாஸ்மாக்தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனும் டாஸ்மாக், தமிழக அரசுக்கு 21,680 கோடி ரூபாய் வருமானத்தை 2012–13 ஆண்டில் அளித்தது.[53]டாஸ்மாக் வருவாய் 2013–14 ஆம் ஆண்டு, 23,401 கோடி ரூபாய் ஆகும்.[54] கடன்தமிழக அரசின் மொத்த கடன் 2014–15 ஆண்டு இறுதியில், 1.81 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இது, மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 19.21 சதவீதம். அடுத்த ஆண்டு அதாவது 2016 ஆம் ஆண்டு இறுதியில், திருப்பி செலுத்த வேண்டிய மொத்த கடன் அளவு, 2.11 லட்சம் கோடியாக இருக்கும். இது மாநிலத்தின் மொத்த உற்பத்தியில், 19.24 சதவீதம். மற்ற மாநிலங்களில் மொத்த உற்பத்தி-கடன் சதவிதம் பின்வறுமாறு. ஆந்திராவில்-25.05, கர்நாடகாவில்-23.61, கேரளாவில்-26.95, மேற்குவங்கத்தில்-32.61 சதவீதமாக கடன் உள்ளது; ஆனால், தமிழகத்தில் கடன், 19.23 சதவீதமாகவே உள்ளது. இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
குறிப்பு |
Portal di Ensiklopedia Dunia