பைரவகோனா குடைவரைக் கோவில்கள்![]() பைரவக்கோனா குடைவரைக் கோவில்கள் என்பன ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டம், சந்திர சேகரபுரம் மண்டலத்தில் உள்ள அம்பாவரம் நல்லமலையில் உள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்ட எட்டு குடைவரைக் கோவில்களின் தொகுப்பாகும். ஸ்ரீ திரிமுகத் துர்காம்பா மகாதேவி ஸ்ரீ பர்குலேஸ்வரி ஸ்வாமி கோவில் என்று அழைக்கப்படும் இக்கோவிலில் சிவபெருமானின் 64 திருமேனிகளில் ஒருவரான பைரவர் சேத்திர பாலகராக அருள்பலிக்கிறார். இத்தலத்தில் சிவபெருமான் சசிநாகம், ருத்ரா, விஸ்வேசுவரர், நகரிகேசுவரா, பார்கேசுவரா, இராமேசுவரா, மல்லிகார்ஜுனா, பட்சமாலிகா லிங்கம் ஆகிய எட்டு இலிங்க வடிவங்களில் காட்சி தருகிறார். இக்குடைவரைக் கோவில்கள் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறையின் பாதுகாப்பில் உள்ளன. 200 மீட்டர் உயரம் கொண்ட நீர்வீழ்ச்சியில் நீராடவும், கோவிலில் வழிபடவும் பௌர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.[1] கார்த்திகைப் பௌர்ணமி நாளில், கோவிலில் உள்ள பார்வதி தேவியின் சிலை மீது நிலவொளி விழுகிறது.[2] அமைவிடம்அம்பாவரம் நல்லமலை ஆந்திரப் பிரதேசத்தின் உதயகிரிக்கு அருகில் வடக்கு-தெற்காக ஓடும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். குடைவரைக் கோவிலுக்கு வெகு அருகிலேயே அழகிய சூழலுடன் கூடிய ஓர் இயற்கை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பைரவகோனா குடைவரைக் கோவில் அம்பாவரம் கொத்தப்பள்ளியிலிருந்து 2.3 கி.மீ. தொலைவிலும், சந்திரசேகரபுரத்திலிருந்து 23.5 கி.மீ. தொலைவிலும், உதயகிரியிலிருந்து 43.3 கி.மீ. தொலைவிலும், மைடுகூரிலிருந்து 88 கி.மீ. தொலைவிலும், நெல்லூரிலிருந்து 141 கி.மீ. தொலைவிலும், காலியிலிருந்து 119.9 கி.மீ. தொலைவிலும், எர்ரலகுண்ட்லாவிலிருந்து 120.7 கி.மீ. தொலைவிலும், கடப்பாவிலிருந்து 122.2 கி.மீ. தொலைவிலும் சென்னையிலிருந்து 314.9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்திற்கு அருகிலுள்ள பெரிய இரயில் நிலையம் ஓங்கோல் 57.67 கி.மீ. தொலைவிலும், சிறிய இரயில் நிலையம் வினுகொண்டா 15.71 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இத்தலத்தின் புவியமைவிடம் 15.° 5'15" அட்சரேகை 79°12' 14" தீர்க்க ரேகை ஆகும். கடல்மட்டத்திலிருந்து இத்தலம் 230 மீ (757 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. வரலாறுமுற்காலப் பல்லவர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதிகி.பி. 300 ஆம் ஆண்டில் பல்லவ மன்னன் சிம்மவர்மன், இச்வாகு மன்னன் ருத்திரபுருசதத்தனை போரில் வென்று கடலோர ஆந்திராவின் பகுதிகளைக் கைப்பற்றி பல்லவ அரசை நிறுவினான். இவர்கள் நெல்லூர் மற்றும் குண்டூர் மாவட்டங்களை தங்கள் ஆளுகைக்கு உட்படுத்தினர்.. கி.பி.550 முதல் - சிம்ம விஷ்ணு ஆட்சிக்காலம் தொடங்கி - பல்லவர்கள் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆளத் தொடங்கினர். பாதாமியில் உள்ள கல்வெட்டுகள் பல்லவர்கள் சாளுக்கிய நாட்டின் பகுதிகளை முழுமையாக கைப்பற்றியதை குறிப்பிடுகின்றன.[3] முதலாம் மகேந்திரவர்மன்முதலாம் மகேந்திரவர்மன் சிம்மவிஷ்ணுவின் மகனாவான். இளம் வயதில் இளவரசனாக இருந்த காலத்தில் தெற்கு ஆந்திர பிரதேசத்தில் வளர்ந்து வந்துள்ளான். ஆந்திரப் பிரதேசத்தின் எஸ்பிஎஸ்ஆர் நெல்லூர் மாவட்டம், செஜெர்லா மண்டலம், செஜர்லாவில் உள்ள கபோதேஸ்வரா கோவிலில் பொறிக்கப்பட்ட முதலாம் மகேந்திரவர்மனின் கல்வெட்டு (S.I.I. Vol. VI No. 595) ஒன்று பல்லவ இளவரசன் மகேந்திரவர்மன் மேற்கொண்ட திருப்பணிகள் குறித்து பதிவு செய்துள்ளது. கபோதேசுவரர் கோவிலைக் கட்டுவதற்கு மகேந்திரவர்மன் 12 தேவகன்மிகளை நியமித்த செய்தியினை இக்கல்வெட்டு பதிவு செய்துள்ளது. [4] ஜி.ழோவ் டூப்ரெய்ல் (G Jouveau-Dubreuil) என்ற பிரெஞ்சு வரலாற்றாய்வாளர் முன்மொழிந்த கோட்பாட்டின்படி, தனது குழந்தைப் பருவத்தை மகேந்திரவர்மன் கிருஷ்ணா நதிப் படுகையில் கழித்த போது, உண்டவல்லி மற்றும் பைரவகொண்டா குகைகளைக் காணநேர்ந்தது. இதன் மூலம் குடைவரைக் கட்டடக்கலைக்கான உத்வேகத்தை பெற்றதாக ழோவ் டூப்ரெய்ல் குறிப்பிட்டுள்ளார்.[5] தமிழ்நாட்டில் குடைவரைக் கோவில் கட்டடக்களையைத் தொடங்கியன் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரன் ஆவான். மண்டகப்பட்டு என்னுமிடத்தில் லட்சிஷிதாயன திரிதேவமூர்த்தி என்னும் குடைவரைக் கோவிலை உருவாக்கியவன் இம்மன்னனே ஆவான். பாசுபத சைவபிரிவின் செல்வாக்குகி.பி 7 ஆம் நூற்றாண்டில் நெல்லூர் பகுதியில் சைவசமயம் செல்வாக்குப் பெற்றிருந்த செய்தி பாதாமி சாளுக்கிய மன்னன் முதலாம் விக்ரமாதித்யனின் தலமஞ்சி செப்பேடுகளின் வாயிலாக அறிய முடிகிறது. கி.பி 7 ஆம் நூற்றாண்டு மற்றும் கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளில் பாசுபத சமயப் பள்ளிகள் வலுவடைந்து வந்தன. சித்தேஸ்வரம் மற்றும் ஜோதி ஆகிய பாசுபத மையங்கள் குறித்து கி.பி. 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரேணாட்டி சோழர்களின் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாசுபத பிரிவினரின் பரவலான செல்வாக்கு மற்றும் அரச ஆதரவின் காரணமாக, கி.பி. 7 மற்றும் 9 ஆம் நூற்றாண்டுகளில் ஆலம்பூர், சித்தாவடம், அமராவதி, தர்மாவரம், உள்ளிட்ட பல பாசுபத சமய மையங்கள் தோன்றின. பாசுபத பிரிவினரின் பரவலான செல்வாக்கும், தலமஞ்சி செப்பேடுகள் குறிப்பிடும் சிவாச்சாரியர்களின் செல்வாக்கும் பைரவகோனாவில் குடைவரைக் கோவில்கள் உருவாவதற்குக் காரணமாக அமைந்தன.[3] பைரவகோனா குடைவரைக் கோவில்கள்: கட்டடக்கலை
![]()
![]()
![]()
![]()
திருவிழாக்கள்சிவபெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் உகந்ததாகக் கருதப்படும் கார்த்திகை பௌர்ணமி நாள் , பைரவகோனாவில் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரி இத்தலத்தில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான திருவிழாவாகும். தங்குவதற்கு சிறிய விருந்தினர் மாளிகை உள்ளது. முகவரிபைரவகோனா கோவில், அம்பாவரம் கொத்தப்பள்ளி, பிரகாசம் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் 523112 எப்படிச் செல்வது?நெல்லூர் மாவட்டத்தில் உள்ள உதயகிரி என்ற ஊரிலிருந்து பைரவகோனா 43 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. உதயகிரி APSRTC பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் பைரவகோனாவிலிருந்து 15 தொலைவில் உள்ள சீதாராமபுரத்திற்கு செல்கின்றன. .சீதாராமபுரத்திலிருந்து பைரவகோனாவிற்கு ஷேர் ஆட்டோ வசதி உள்ளது.[10] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia