அரியலூர் தொடருந்து நிலையம்
அரியலூர் தொடருந்து நிலையம் (Ariyalur railway station, நிலையக் குறியீடு:ALU) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, அரியலூர் நகரில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையமாகும். விழுப்புரம் மற்றும் திருச்சிராப்பள்ளிக்கு இடையே அமைந்துள்ள இந்நிலையம், நிர்வாக காரணங்களுக்காக திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம், தென்னக இரயில்வேயின் கீழ் செயல்படுகிறது. இருப்பிடம் மற்றும் தளவமைப்புஅரியலூர் தொடருந்து நிலையம் இரயில்வே நிலையம் சாலையில் அமைந்துள்ளது. அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கான முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இந்நிலையத்தில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய நகரங்களுக்கு முற்பகல், பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் நேரடிப் பேருந்துகள் உள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் மத்திய மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒரு முக்கியமான இரயில் நிலையமாக செயல்படுகிறது. இந்த நிலையம் விழுப்புரம் - திருச்சிராப்பள்ளி கார்டு லைன் வழித்தடத்தில் அமைந்துள்ளது. திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, அரியலூர் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 5.24 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[7][8][9][10] வசதிகள்இந்த நிலையம் உயர்நிலைக் காத்திருப்பு அறைகள், ஏ.டி.எம் மற்றும் சக்கர நாற்காலிகள் போன்ற வசதிகளும், ஓய்வு அறைகள் போன்ற வசதியும் உண்டு. இங்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் உள்ளது. இது நிலையத்திலிருந்து உள்ளூர் பேருந்து சேவைகளை வழங்குகிறது. இருப்பினும் இந்த இரயில் நிலையமானது, பயணிகளுக்கு படிப்படியாக கடுமையான உட்கட்டமைப்பு பிரச்சினைகளால் பாதிக்கப்படுகிறது. இரயில் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு நேரடி பஸ் சேவைகளைத் திரும்பப் பெறுவதுடன், மற்ற வழிகளிலும் போதுமான சேவைகளை இல்லாத நிலையிலும் இந்த நிலையத்திற்கு பயணிகள் பயணிப்பதில் பெரும் பாதிப்பைக் காணலாம். இந்நிலையத்திற்கு காலை 7.40 மணிக்கு வந்தடையும், சென்னை நோக்கி செல்லும் பல்லவன் விரைவுத் தொடருந்துக்காக தஞ்சாவூரிலிருந்து நேரடியாக இந்த தொடருந்து நிலையத்திற்கு ஒரு அரசு பேருந்து இயக்கப்படுகிறது. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia