தருமபுரி தொடருந்து நிலையம்
தருமபுரி தொடருந்து நிலையம் (Dharmapuri railway station, நிலையக் குறியீடு:DPJ) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள, தருமபுரி நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின், பெங்களூர் தொடருந்து கோட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது தென்னக இரயில்வேயில் இருந்து பிரித்து அதனுடன் இணைக்கப்பட்டது ஆகும்.[1] இருப்பிடம்இந்த தொடருந்து நிலையமானது, தருமபுரி நகரில் துரைசாமி கவுண்டர் தெருவில், மாவட்ட ஆட்சியர், நகர கடைவீதி, தமிழ்நாட்டு அரசு போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை, வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றுக்கு அருகில் இரயில் நிலைய சாலையில் அமைந்துள்ளது. இந்த நிலையம் கடல் மட்டத்திலிருந்து 462 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்நிலையத்தில் மூன்று நடைமேடைகள் உள்ளன. மேலும் நிலையமானது மரங்கள் சூழ்ந்த பசுமையான சூழலில் உள்ளது. இது ஓமலூர் சந்திப்பு - பெங்களூர் நகர இரயில் பாதையின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தப் பாதையில் செல்லும் தொடர்வண்டிகளுக்கான முக்கிய நிறுத்தமாக இது உள்ளது. தருமபுரி- மொராப்பூருக்கு இடையில் ஒரு புதிய பாதை அமைக்கப்படவிருக்கிறது, இது 36 கிலோமீட்டர் (22 மைல்) அளவு நீளமுடையது. இத்திட்டம் 2016-2017 இந்திய ரயில்வே பட்ஜெட்டில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[2] திட்டங்கள் மற்றும் மேம்பாடுஇந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [3][4][5][6][7][8] அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் பெங்களூர் கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தருமபுரி தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[9][10][11][12] வசதிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia