கல்யாண் தாலுகாகல்யாண் தாலுகா (Kalyan taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின், கொங்கண் கோட்டத்தில் அமைந்த தானே மாவட்டத்தின் 7 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். .[1][2][3] இத்தாலுகாவின் நிர்வாகாத் தலைமையிடம் கல்யாண் நகரம் ஆகும். இத்தாலுகா 276 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இத்தாலுகா கல்யாண் எனும் மாநகராட்சியும், இரண்டு பேரூராட்சிகளையும், 86 வருவாய் கிராமங்களையும் கொண்டுள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 377146 வீடுகளைக் கொண்ட கல்யாண் தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 15,65,417 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 8,20,492 மற்றும் பெண்கள் 7,44,925 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 1,62,318 (10.37%) ஆகும். சராசரி எழுத்தறிவு 80.93% ஆகும். பட்டியல் மற்றும் பழங்குடிகள் முறையே 9.7% மற்றும் 3.48% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 12,87,828 (82.27%), இசுலாமியர்கள் 94,893 (6.06%), பௌத்தர்கள் 1,11,542 (7.13%), சமணர்கள் 34,358 (2.19%), கிறித்துவர்கள் 29,582 (1.89%) மற்றும் பிற சமயத்தினர் 0.28% ஆக உள்ளனர். மக்கள் தொகையில் 40% நகர்புறத்திலும், 60% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia