பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி
19°17′56″N 73°03′51″E / 19.298969°N 73.064129°E பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி (Bhiwandi-Nizampur City Municipal Corporation) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த மாநகராட்சிகளில் ஒன்றாகும். இம்மாநகராட்சி பிவண்டி-நிஜாம்பூர் எனும் இரட்டை நகரங்களைக் கொண்டது. 84 வார்டுகள் கொண்ட பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சி 2002-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பிவண்டியில் உள்ளது. 2011-ஆம் ஆண்டில் இமமாநகராட்சியின் மக்கள் தொகை 7,09,665[1] மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 84 வார்டுகள் கொண்ட பிவண்டி-நிஜாம்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 7,09,665 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 4,15,339 மற்றும் 2,94,326 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 709 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 91,825 - 12.94 % ஆகும். சராசரி எழுத்தறிவு 79.48 % ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 39.34%, இசுலாமியர்கள் 56.01%, பௌத்தர்கள் 1.55%, சமணர்கள் 2.66%, கிறித்துவர்கள் 0.23% மற்றும் பிறர் 0.16% ஆக உள்ளனர்.[2] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
}} |
Portal di Ensiklopedia Dunia