சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம்
சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் சத்திரபதி சம்பாஜிநகர் நகரத்தில் அமைந்துள்ளது. மாவட்டப் பெயர் மாற்றம்இரண்டாவது மராத்தியப் பேரரசர் சம்பாஜி நினைவாக அவுரங்காபாத் மாவட்டத்தின் பெயரை சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டம் எனப்பெயர் மாற்றி, சூலை 2022ஆம் ஆண்டில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராட்டிரா அரசின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.[2] இதனை அடுத்த வந்த ஏக்நாத் சிண்டே தலைமையிலான அரசு செப்டம்பர் 2023ல் உறுதி செய்தது.[3][4] மேலும் மாவட்டப் பெயர் மாற்றம் செய்ததை எதிர்த்த வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[5][6] மக்கள் வகைப்பாடு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 751,915 குடும்பங்களையும் கொண்ட அவுரங்காபாத் மாவட்டத்தின் மக்கள்தொகை 3,701,282 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 79.02% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 923 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 53,2659 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 858 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,39,368 மற்றும் 1,43,366 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 68.77%, இசுலாமியர்கள் 21.25%, கிறித்தவர்கள், 0.43% பௌத்தர்கள் 8.35%, சமணர்கள் 0.84%, மற்றும் பிறர் 0.36% ஆகவுள்ளனர். [7] மாவட்ட நிர்வாகம்சத்திரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தை 10 வட்டங்களாகவும், 1362 கிராமங்களாகவும் பிரித்துள்ளனர்.[8] வருவாய் வட்டங்கள்
அரசியல்சட்டமன்றத் தொகுதிகள்இந்த மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1] அவை
மக்களவைத் தொகுதிகள்சுற்றுலா & ஆன்மீகத் தலங்கள்போக்குவரத்துசான்றுகள்
இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia