சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி
சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி (Sangli-Miraj & Kupwad), இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தின் தெற்கில் உள்ள சாங்கிலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் மாநகராட்சி ஆகும். சாங்கிலி, மீரஜ் மற்றும் குப்வாட் ஆகிய நகரங்களைக் கொண்ட இம்மாநகராட்சி கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ளது. இம்மாநகராட்சியின் மீரஜ் பகுதியில் மிரஜ் தொடருந்து நிலையம் உள்ளது. நிர்வாகம்சாங்கிலி, மீரஜ் மற்றும் குப்வாட் நகராட்சிகளை இணைத்து 28 பிப்ரவரி 1998 அன்று சாங்லி-மிராஜ் மற்றும் குப்வாட் மாநகராட்சி நிறுவப்பட்டது.[1]இம்மாநகராட்சி 74 மாமன்ற உறுப்பினர்களையும், மேயர், துணை மேயர் மற்றும் ஆணையாளரையும் கொண்டது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 1,10,062 வீடுகள் கொண்ட இம்மாநகரத்தின் மக்கள் தொகை 5,02,793 ஆகும். அதில் ஆண்கள் 2,53,640 மற்றும் பெண்கள் 2,49,153 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 982 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 85.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 73,032 மற்றும் 3,496 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71.32%, இசுலாமியர் 21.11%, பௌத்தர்கள் 1.38%, சமணர்கள் 4.32%, சீக்கியர்கள் 0.14%, கிறித்தவர்கள் 1.38% மற்றும் பிறர் 0.26% ஆகவுள்ளனர்.[2] இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia