சிவபுரி நகரம்
சிவபுரி (Shivpuri), மத்திய இந்தியாவில் அமைந்த மத்தியப் பிரதேசத்தில் வடக்கில் உள்ள புந்தேல் கண்ட் பிரதேசத்தில் உள்ள சிவபுரி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 அடி (462 மீட்டர்) உயரத்தில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது சிவபுரி நகரம் குவாலியர் இராச்சியத்தின் கீழ் இருந்தது.[2]சிவபுரி நகரம் குவாலியருக்கு தெற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஜான்சி நகரத்திற்கு மேற்கே 56 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, 39 வார்டுகளும், 33,803 வீடுகளும் கொண்ட சிவபுரி நகரத்தின் மக்கள் தொகை 179,977 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 892 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 23373 (13%) ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 77.8% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 26,335 மற்றும் 5,926 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 83.31%, இசுலாமியர் 13.62%, பௌத்தர்கள் 0.11%, சமணர்கள் 2.21%, சீக்கியர்கள் 0.43%, கிறித்தவர்கள் 0.21% மற்றும் பிறர் 0.12% ஆகவுள்ளனர். [3] இரயில் நிலையம்சிவபுரி இரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் இணைக்கிறது.[4] தட்ப வெப்பம்
கல்வி
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia