தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில்
தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில் (Dharmrajeshwar) (Hindi: धर्मराजेश्वर) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் மண்டசௌர் மாவட்டத்தில், கரோத் தாலுக்காவில் இந்தியக் குடைவரைக் கட்டிடக்கலையில் அமைந்த பௌத்தம், சமணம் மற்றும் இந்து சமயங்களின் குடைவரைக் கோயில்களின் தொகுதியாகும்.[1] தர்மராஜஸ்வர் குடைவரைக் கோயில், எல்லோரா கைலாசநாதர் கோவில் போன்று மலையை மேலிருந்து குடைந்து வடிவக்கப்பட்டதாகும். இதன் உண்மையான பெயர் தம்நார் என்பதாகும். (धमनार).[2] தர்மராஜஸ்வரர் கோயில்தர்மராஜஸ்வரர் குடைவரைக் கோயில் 50 மீட்டர் நிளமும், 20 மீட்டர் அகலமும், 9 மீட்டர் ஆழமும் கொண்டது. இதன் நடுவில் 14.5 மீட்டர் நீளமும், 10 மீட்டர் நீளமும் கொண்ட பெரிய கோயிலில் பெரிய சிவ லிங்கமும் மற்றும் விஷ்ணு சிற்பங்கள் உள்ளது. மேலும் இலக்குமி, பைரவர், காளி, கருடன், பார்வதி தெயவங்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.இக்குடைவரைக் கோயில் சிவன் மற்றும் விஷ்ணு வழிபாடுகளுக்கு உரியதாக உள்ளது.[3] குகைகள்இவிடத்தில் உள்ள குகைகளில், 7ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட பௌத்தர்களின் விகாரங்கள், தூபிகள், சைத்தியங்கள் செதுக்கி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை சந்தனகிரி என்பர். படக்காட்சியகம்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia