கர்கோன் மாவட்டம்
கர்கோன் மாவட்டம் (Khargone district) (இந்தி: खरगोन ज़िला), மத்திய இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஐம்பத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் கார்கோன் ஆகும். இது இந்தூர் கோட்டத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் முன்னாள் பெயர் மேற்கு நிமார் மாவட்டம் ஆகும். வரலாறுஇம்மாவட்டத்தின் வரலாறு மிகவும் பழமையானதாகும். ஹைஅய்யர் அரச மரபினர் மஹேஷ்வர் என தற்போது அழைக்கப்படும் மகிழ்மதியை தலைநகராகக் கொண்டு ஆண்டவர்கள். மகாபாரத இதிகாசத்தில் மகிஷ்மதி நகரத்தையும், அதன் ஆட்சியாளர்களையும் குறிப்பிடுகிறது. துவக்க மத்தியகால வரலாற்றில் மாளவம் உள்ளடக்கிய இப்பகுதியை பரமாரப் பேரரசர்கள் கி பி 800 முதல் 1327 முடிய ஆண்டனர். பின்னர் தில்லி சுல்தானகத்தாலும், 1531 முதல் குஜராத் சுல்தான் பகதூர் ஷா இப்பகுதியை ஆண்டார். 1562-இல் அக்பர் இப்பகுதியை மொகலாயர் பேரரசில் இணைத்துக் கொண்டார். 1740-ஆம் ஆண்டு முதல் இப்பகுதி மராத்தியப் பேரரசின் கீழ் வந்தது. இந்தியாவில் கம்பெனி ஆட்சி மற்றும் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு காலத்தில் ஆங்கிலேயேர்களுக்கு கப்பம் கட்டும் மன்னராட்சி பகுதிகளாக இருந்தது. 19747-இல் இந்திய விடுதலைக்குப் பின் மத்திய மாகாணத்தின் ஒரு வருவாய் வட்டமாக விளங்கியது. 1 நவம்பர் 1956 அன்று மத்தியப் பிரதேசத்தின் ஒரு மாவட்டமாக விளங்கியது. 25 மே 1998 அன்று மேற்கு நிமர் மாவட்டம், கர்கோன் மாவட்டம் மற்றும் பர்வானி மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. மாவட்ட எல்லைகள்8030 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கர்கோன் மாவட்டத்தின் வடக்கில் இந்தூர் மாவட்டம், கிழக்கில் கண்ட்வா மாவட்டம், தென்கிழக்கில் பர்ஹான்பூர் மாவட்டம், மகாராஷ்டிராவின் ஜள்காவ் மாவட்டம், மேற்கில் பர்வானி மாவட்டம், வடமேற்கில் தார் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது. பொருளாதாரம்வறண்ட நிலப்பகுதி கொண்ட கர்கோன் மாவட்டத்தை 2006-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பஞ்சாயத்து அமைச்சகத்தால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய இந்தியாவின் 250 மாவட்டங்களில் கார்கோன் மாவட்டமும் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தின் ஊரக வளர்ச்சி திட்டங்களுக்கு இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆண்டு தோறும் நிதி உதவி வழங்கி வருகிறது.[1] மாவட்ட நிர்வாகம்இந்தூர் கோட்டத்தில் உள்ள கர்கோன் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக ஐந்து உட்கோட்டங்களாகவும், பர்வா, பிகான்கோன், ஜிர்ன்யா, கர்சவத், கர்கோன், கோகாவன், பகவான்புரம், சேகான் மற்றும் மஹேஷ்வர் ஒன்பது வருவாய் வட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அரசியல்கர்கோன் மாவட்டம் பிகான்கோன், பத்வா, மஹேஷ்வர், கர்கோன் மற்றும் பகவான்புரம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளையும், கர்கோன் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் கொண்டது. மக்கள் தொகையியல்2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கர்கோன் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 1,873,046 ஆக உள்ளது. கிராமப்புறங்களில் 84.04% மக்களும்; நகரப்புறங்களில் 15.96% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 22.85% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 953,121 ஆண்களும் மற்றும் 919,925 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 965 பெண்கள் வீதம் உள்ளனர். 8,025 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 233 மக்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தின் சராசரி படிப்பறிவு 62.70 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 72.08 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 53.03 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 299,990 ஆக உள்ளது. [2] சமயம்இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 1,725,441 (92.12 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 135,085 (7.21 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 2,075 (0.11 %) ஆகவும், , சீக்கிய சமய மக்கள் தொகை 2,896 (0.15 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 6,028 (0.32 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 284 (0.02 %) ஆகவும், பிற சமய மக்களின் தொகை 89 (0.00 %) ஆகவும், மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 1,148 (0.06 %) ஆகவும் உள்ளது. மொழிகள்மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia