செம்பங்குடி ருத்ரகோடீசுவரர் கோயில்

ருத்ரகோடீசுவரர்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:நாகப்பட்டினம்
அமைவிடம்:செம்பங்குடி
கோயில் தகவல்
மூலவர்:ருத்ரகோடீசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

செம்பங்குடி ருத்ரகோடீசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும்.[1]

அமைவிடம்

சீர்காழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் சாலையில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.

இறைவன்,இறைவி

இக்கோயிலில் உள்ள இறைவன் ருத்ரகோடீசுவரர் ஆவார். இறைவி திரிபுரசுந்தரி ஆவார்.[1]

பிற சன்னதிகள்

கோயில் வெட்ட வெளியில் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், இறைவி சன்னதிகள் உள்ளன.[1]

அருகிலுள்ள கோயில்

அருகில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. அங்குள்ள இறைவன் நாகநாதர், இறைவி கற்பூரவல்லி. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை ஆகியோர் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya