தகட்டூர் பைரவநாதசுவாமி கோயில் வேதாரண்யம்-திருத்துறைப்பூண்டி சாலையில் வாய்மேட்டிற்கு அருகே வேதாரண்யத்திற்கு மேற்கில் 20 கிமீ தொலைவில், முள்ளியாற்றின் கரையில் அமைந்துள்ளது.[4]
தெய்வம்
பைரவர் பிரதான சன்னதியில் காணப்படுவதால், இக்கோயில் பைரவநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பிரதான சன்னதியில் பைரவரை கொண்ட ஒரே கோயில் தகட்டூர் பைரவநாதசுவாமி கோயிலாகும். இலங்கையில் ராவணன் அழிக்கப்பட்ட பிறகு, அந்த நோயிலிருந்து விடுபட, ராமர் சிவனுக்கு பூஜை செய்ய விரும்பினார். அதனால் அனுமனை காசிக்கு அனுப்பினார். அங்கிருந்து அனுமன் வந்ததும் பைரவர் உடன் சென்றார்.
காசியிலிருந்து லிங்கத்தைப் பாதுகாக்க வந்ததால், தகட்டூரில் தங்க விரும்பினார். இந்த கோவிலில் சக்கரம் வைக்கப்பட்டுள்ளதால், இந்த இடம் யந்திரபுரி என்றும் அழைக்கப்படுகிறது. சன்னதியில் சட்டைநாதர் சிற்பமும் காணப்படுகிறது
பைரவநாதர் மற்றும் சிவலோகநாதர் எனப்படும் லிங்கத்தால் கர்ப்பக்கிரகத்தில் உள்ள பைரவர் குறிக்கப்படுகிறார். தேவி சிவகாமசுந்தரி என்று அழைக்கப்படுகிறார். அபிதான சிந்தாமணியில் பைரவரைப் பற்றிய குறிப்பு உள்ளது.ஓர் அசுரன் தவம் செய்து சிவனிடம் வரம் பெற்றான். தான் கொல்லப்பட்டே இறக்க வேண்டும். ஆனால் அது ஒரு பெண்ணால் மட்டுமே நிகழ்வேண்டும் என்பதே அந்த அசுரன் கேட்ட வரமாகும். ஒரு பெண்ணால் தன்னைக் கொல்ல முடியாது என்று அவன் நினைத்தான். எனவே அனைவரையும் தொந்தரவு செய்யத் தொடங்கினான். சிவபெருமான் ஒரு பெண்ணைப் படைத்து அவளுக்கு காளி என்று பெயரிட்டார். அசுரன் காளியால் கொல்லப்பட்டான்.
மேற்கோள்கள்
த. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.