திருலோகி சுந்தரேசுவரர் கோயில்

திருலோகி சுந்தரேசுவரர் கோயில் என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத் தலமாகவும், திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகவும் உள்ளது.

இக்கோயில் தலமரமாக சரக்கொன்றை உள்ளது. தீர்த்தமாக இலட்சுமி தீர்த்தம் உள்ளது.[1]

அமைவிடம்

இக்கோயில் கும்பகோணம் வட்டத்தில் திருப்பனந்தாளுக்குக் கிழக்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. முன்னர் ஏமநல்லூர் என்று இவ்வூர் அழைக்கப்பட்டது.[2] இவ்வூரில் இக்கோயிலும், கயிலாயநாதர் கோயில் என்ற ஒரு கோயிலும் உள்ளன. இவற்றுள் இக்கோயிலே திருவிசைப்பா பாடல் பெற்றதாகக் கொள்ளப்படுகிறது.[3]

இறைவன்

லிங்கத்திருமேனியில் இங்குள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி அகிலாண்டேஸ்வரி. இறைவனும், இறைவியும் திருவாசியுடன் நந்திமீது அமர்ந்துள்ள சிற்பத்தை இக்கோயிலில் காணலாம்.[2]

சிறப்பு

முதலாம் ராஜராஜசோழனின் மனைவியான திரைலோக்கிய மாதேவியின் பெயரால் இந்த ஊர் மண்ணிநாட்டு ஏமநல்லூராகிய திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. "குருபகவானுக்கு சாப விமோசனம் அருளிய திருலோக்கி சுந்தரேஸ்வரர்". Hindu Tamil Thisai. 2024-11-14. Retrieved 2025-04-19.
  2. 2.0 2.1 2.2 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  3. திரைலோக்கிய சுந்தரம்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya