சோமபுரம் மகாவிகாரை
சோமபுரம் மகாவிகாரை (Somapura Mahavihara (Bengali: সোমপুর মহাবিহার Shompur Môhabihar) , வங்காள தேசத்தில் உள்ள நவகோன் மாவட்டத்தின் பஹர்புரில் உள்ள பௌத்த மகாவிகாரையாகும். இம்மகாவிகாரையை கிபி எட்டாம் நூற்றாண்டில், பாலப் பேரரசர் தர்மபாலர் நிறுவினார். 1985ல் சோமபுர மகாவிகாரையை, யுனெஸ்கோ நிறுவுனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது.[2][3] கட்டிடக் கலைநாற்கர வடிவத்தில் அமைந்த சோமபுரம மகாவிகாரை, பௌத்த பிக்குகள் தங்குவதற்கும், தியானிப்பதற்கும் 177 அறைகளும், மையப் பகுதியில் ஒரு பௌத்த தூபியும் கொண்டது. 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட சோமபுரம் மகாவிகாரை தொல்லியல் களத்தை அகழ்வாய்வு செய்த போது, சிறிய தூபிகளும், பல அளவுகளில் சுடுமண், கருங்கல் சிற்பங்களும், கல்வெட்டுகளும், நாணயங்களும், பீங்கான் பாண்டங்களும், இந்து, பௌத்த, சமண சமயச் சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டது. [4][5][6] கடவுட் சிலைகள்இங்கு கிடைத்த தொல்பொருட்கள், சோமபுரம் விகாரையின் அருகில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அவைகளில்;
படக்காட்சிகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia